நேசிப்பவர்களை
“வேண்டாம்” என்று சொல்லிவிடுவது—
நேசிக்கும் இதயத்திற்கு
கிடைக்கும் மிகக் கடினமான தண்டனை.
ஒரு வார்த்தை தான் அது
ஆனால் அந்த ஒரு வார்த்தை
ஆயிரம் மௌனங்களாகி
இதயத்தை நொறுக்கி விடும்.
தள்ளிச் சென்றவர்க்கு
அது ஒரு முடிவு மாதிரி தோன்றலாம்
ஆனால் நேசித்தவர்க்கு
அது தினமும் புதிதாய் தொடங்கும் வலி.
நினைவுகள் அழியாது
நெஞ்சின் கதவு மூடாது
“வேண்டாம்” என்ற அந்த ஒலி மட்டும்
மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
அதனால் தான்
நேசித்தவரை விட்டு நீங்குவது அல்ல,
“வேண்டாம்” என்று சொல்லி விடுவது தான்
நேசிக்கும் இதயத்திற்கு கிடைக்கும்
மிகப் பெரிய தண்டனை💔💔💔.... அவ என்ன வேணான்னு சொல்லிட்டே இருக்கா, ஆனா நா அவளை மறக்க முடியாம 💔💔💔💔
#அவளுக்காக