#நல்லதே பேசு நல்லதே நினை
உயர்திரு திரு பானுமதி ஆணையாளர் அவர்கள் திண்டிவனம் நகராட்சி திண்டிவனம் 604001
திண்டிவனம் நகரில் அதிகரித்து வரும் கொசு தொல்லை மற்றும் மேம்பாலத்தில் மின்விளக்கு இல்லாத பிரச்சினை குறித்து முஸ்லிம் மக்கள் கழகம் நகராட்சி நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது.
இதுகுறித்து முஸ்லிம் மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் முனைவர் ச.சு. ஜைனுதீன் தெரிவித்ததாவது:
திண்டிவனம் நகரில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். டெங்கு போன்ற ஆபத்தான நோய்கள் பரவிவிடுமோ என்ற அச்சத்திலும் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு நகராட்சி நிர்வாகம் உடனடியாக நகரம் முழுவதும் கொசு மருந்து புகை அடித்து கொசுக்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், மறைந்த தரைவழி போக்குவரத்து துறை அமைச்சர் வழக்கறிஞர் டி.ஜி. வெங்கட்ராமன் அவர்களின் முயற்சியால் சுமார் ரூ.23 கோடி செலவில் கட்டப்பட்ட தமிழகத்தின் இரண்டாவது மேம்பாலம் என்ற பெருமையை பெற்றுள்ள திண்டிவனம் மேம்பாலத்தில் இரவு நேரங்களில் மின்விளக்குகள் எரியாத நிலை நிலவுகிறது. மேம்பாலத்தின் நான்கு புறங்களிலும் போதிய மின்விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்திருப்பதால் வாகன விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மேம்பாலத்தின் நான்கு பக்கங்களிலும் உடனடியாக மின்விளக்குகளை அமைத்து எரியவைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த கோரிக்கைகள் குறித்து இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால், வரும் 20.03.2026 வெள்ளிக்கிழமை மாலை 3.30 மணிக்கு திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு முஸ்லிம் மக்கள் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின் பொழுது மாநில மகளிர் அணி அமைப்பாளர் பா. சிராஜ் பேகம். விழுப்புரம் மாவட்ட பொருளாளர் மு. அப்துல் ஹக்கீம். திண்டிவனம் நகர செயலாளர் அ. தாவுத்அலி. நகரத் தலைவர் அ. முஹம்மத் சாதிக். நகரத் துணைத் தலைவர் இ. சர்தார் அஹமத். நகர இளைஞரணி தலைவர் இ. நிசார் அஹமத்.