#நல்லதே பேசு நல்லதே நினை தட்டுப்பாட்டின் பின்னால் யார்? — பொதுமக்கள் துன்பத்திற்கு பொறுப்பு ஏற்க வேண்டும் அரசு!”
முஸ்லிம் மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் முனைவர் ச.சு ஜைனுதீன் அவர்கள்
அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில் கூறுகையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியில் செயல்பட்டு வரும் சாந்தாராம் கேஸ் சர்வீஸ் நிறுவனம், மாதந்தோறும் கேஸ் சிலிண்டர்கள் வழங்க வேண்டிய நிலையில் இருந்தும், கடந்த சில தினங்களாக “ஈரான்–இஸ்ரேல்–அமெரிக்கா போர் காரணமாக கேஸ் தட்டுப்பாடு” என காரணம் கூறி பொதுமக்களை ஏமாற்றி வருகிறது.
இந்த நிலைமையால், சாதாரண குடும்பங்களோடு மட்டுமல்லாமல் ஹோட்டல்கள், இட்லிக்கடைகள், பிரியாணிக்கடைகள் போன்ற சிறு தொழில்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மாதத்திற்கு ஒரு கேஸ் சிலிண்டர் வழங்கப்படும் நிலையில், வருடத்திற்கு 12 சிலிண்டர்கள் வழங்கப்பட வேண்டியது கடமை. ஆனால், அதையும் சரிவர வழங்காமல் தாமதப்படுத்தி, கள்ளமார்க்கெட் மூலம் விற்பனை நடைபெறுகிறது என்ற குற்றச்சாட்டு எழுகிறது.
மேலும், கேஸ் சிலிண்டர் பதிவு செய்த பின்னரும் 40 நாட்கள் வரை தாமதம் ஏற்படுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. இது பொதுமக்களின் அடிப்படை தேவையை புறக்கணிக்கும் செயல் ஆகும்.
இந்த கேஸ் தட்டுப்பாடு பிரச்சினைக்கு மத்தியிலும் ஆளும் பாஜக ஒன்றிய அரசே முழு பொறுப்பு ஏற்க வேண்டும். பொதுமக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இந்த அலட்சியத்திற்கு உடனடி தீர்வு தேவை.
எனவே, மாவட்ட ஆட்சியாளர் அவர்கள் உடனடியாக தலையிட்டு, சாந்தாராம் கேஸ் சர்வீஸ் உரிமையாளருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்து, பொதுமக்களுக்கு கேஸ் சிலிண்டர்கள் தாமதமின்றி வழங்கப்படும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முஸ்லிம் மக்கள் கழகம் வலியுறுத்துகிறது.