Arunachalam
581 views
ராகுல் காந்தி எதை வாசிக்க முற்பட்டார்?? 56 இஞ்சர்கள் எதை வாசிக்க விடாமல் கூட்டலிட்டார்கள்.... 31 ஆகஸ்ட் 2020 அன்று இரவு 8.15 மணிக்கு, இந்திய இராணுவத்தின் வடக்கு கமாண்டின் தலைமை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் யோகேஷ் ஜோஷிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அவருக்கு கிடைத்த தகவல் அவரை மிகுந்த கவலையில் ஆழ்த்தியது. காலாட்படை ஆதரவுடன் நான்கு சீன டாங்குகள், கிழக்கு லடாக்கில் உள்ள ரெசின் லா நோக்கி ஒரு செங்குத்தான மலைப்பாதை வழியாக முன்னேறிக் கொண்டிருந்தனர். ஜோஷி உடனடியாக இந்த நிகழ்வு குறித்து இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவணேவுக்கு தகவல் அளித்தார். நிலைமையின் தீவிரத்தை நரவணே உடனடியாக புரிந்து கொண்டார். கைலாஷ் மலைத் தொடரில் உள்ள இந்திய நிலைகளிலிருந்து சில நூறு மீட்டர் தூரத்தில் அந்த டாங்குகள் இருந்தன. இது மிக முக்கியமான உச்சிப் பகுதி; அதனை இந்திய இராணுவம் சில மணி நேரங்களுக்கு முன்பே கைப்பற்றியிருந்தது. இரு நாடுகளுக்கிடையிலான உண்மையான கட்டுப்பாட்டு கோடு (Line of Actual Control – LAC) பகுதியில், உயரத்தின் ஒவ்வொரு மீட்டரும் முக்கிய ஆதிக்க தளமாக மாறும் வாய்ப்பு கொண்டது. இந்திய வீரர்கள் ஒரு “எச்சரிக்கை குண்டு” (Illuminating Round) சுட்டனர், அது ஒரு எச்சரிக்கையாக அமைந்தது. ஆனால் அதனால் எந்த தாக்கமோ விளைவோ ஏற்படவில்லை, சீன படை தொடர்ந்து முன்னேறியது. இதனைத் தொடர்ந்து நரவணே, இந்தியாவின் அரசியல் மற்றும் இராணுவ தலைமைத்துவத்தில் உள்ளவர்களுக்கு தொடர்ச்சியாக தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டார். அவர்களில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், தலைமை பாதுகாப்புத் துறைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் மற்றும் வெளிநாட்டுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஆகியோர் அடங்கினர். ‘ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி’ (FOUR STARS OF DESTINY) என்ற தனது புத்தகத்தில் நரவணே இவ்வாறு எழுதுகிறார்: “எல்லோரிடமும் நான் கேட்ட ஒரே கேள்வி – ‘எனக்கான உத்தரவு என்ன?’ நிலைமை வேகமாக மோசமடைந்து கொண்டிருந்தது; தெளிவான உத்தரவு அவசியமாக இருந்தது.” அப்போது நடைமுறையில் இருந்த விதிமுறைகளின்படி, “மேலிட அனுமதி கிடைக்கும் வரை துப்பாக்கிச் சூடு நடத்தக்கூடாது” என்ற தெளிவான உத்தரவு நரவணேக்கு இருந்தது. ஆனால் மேலிடத்திலிருந்து எந்தத் தெளிவான உத்தரவுகளும் வரவில்லை. நிமிடங்கள் கடந்தன. இரவு 9.10 மணிக்கு, லெப்டினன்ட் ஜெனரல் ஜோஷி மீண்டும் அழைத்தார். சீன டாங்குகள், அந்த மலைவழித்தடத்திலிருந்து ஒரு கிலோமீட்டருக்கும் குறைவான தூரத்தில் வந்துவிட்டிருந்தன. இரவு 9.25 மணிக்கு, நரவணே மீண்டும் ராஜ்நாத் சிங்கிற்கு அழைப்பு விடுத்து “தெளிவான உத்தரவை” கேட்டார். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை. இதே நேரத்தில், PLA கமாண்டர் மேஜர் ஜெனரல் லியு லின் என்பவரிடமிருந்து ஒரு செய்தி வந்தது. அவர் நிலைமையை அமைதிப்படுத்தும் ஒரு யோசனையை வைத்தார்: இரு தரப்பும் முன்னேற்றத்தை நிறுத்த வேண்டும்; மறுநாள் காலை 9.30 மணிக்கு, அந்த மலைச்சாவடியில் இரு தரப்பிலும் இருந்து மூன்று பிரதிநிதிகள் கலந்து கொண்டு உள்ளூர் கமாண்டர்கள் சந்திக்க வேண்டும். இது ஒரு நியாயமான முன்மொழிவாகத் தோன்றியது. ஒரு கணம், ஒரு தீர்வு கிடைக்கும் போல மனதில் பட்டது. இரவு 10 மணிக்கு, இந்தச் செய்தியை தெரிவிக்க நரவணே ராஜ்நாத் சிங் மற்றும் அஜித் தோவலை தொடர்பு கொண்டார். பத்து நிமிடங்களுக்குப் பிறகு, நார்தர்ன் கமாண்டிலிருந்து மீண்டும் அழைப்பு வந்தது. சீன டாங்குகள் நிற்கவில்லை. அவை இப்போது உச்சிப் பகுதிக்கு வெறும் 500 மீட்டர் தூரத்திற்கு வந்துவிட்டன, நெருங்கிவிட்டன. லெப்டினன்ட் ஜெனரல் ஜோஷி கூறியதை நரவணே நினைவுகூர்கிறார்: “சீன படையைத் தடுக்க ஒரே வழி, தயாராக இருந்த எங்களுடைய துப்பாக்கி படையினரை சுடு அனுமதிப்பது தான்; அதற்கான உத்தரவுக்காகவே அவர்கள் இரவெல்லாம் காத்திருந்தனர்.” பாகிஸ்தானுடன் உள்ள கட்டுப்பாட்டு கோட்டில் (LoC), துப்பாக்கிச் சூடு சாதாரணமான விஷயமாக இருந்தது. அங்கு டிவிஷன் மற்றும் core கமாண்டர்கள், மேலிட அனுமதி இல்லாமலேயே தினமும் நூற்றுக்கணக்கான குண்டுகளைச் சுடும் அதிகாரம் பெற்றிருந்தனர். ஆனால் இங்கு எதிரணி சீனா. இது வேறு நிலைமை. PLA-வுடன் துப்பாக்கிச் சண்டை வேறு ஆனால் சீனா என்றவுடன் ஒரு தயக்கம், இது ஆபத்தான சூழ்நிலையாக மாறக்கூடும் என்கிற பதட்டம். “என் நிலைமை மிகவும் நாசுக்கானதாக இருந்தது,” என்று நரவணே எழுதுகிறார். “ஒருபுறம் – எந்த வழியிலும் சுடத் தயாராக இருந்த களக் கமாண்டர்கள்; மறுபுறம் – இன்னும் தெளிவான உத்தரவை வழங்காத ஒரு அரசுக் குழு. இந்த இரண்டுக்கிடையில் நான் சிக்கிக் கொண்டிருந்தேன்.” இராணுவத் தலைமையகத்தின் ஆபரேஷன் ரூமில், பல்வேறு விருப்பங்கள் விவாதிக்கப்பட்டு, பின்னர் நிராகரிக்கப்பட்டுக் கொண்டிருந்தன. முழு நார்தர்ன் கட்டுப்பாட்டு மையமும் High Alertல் இருந்தது. மோதல் ஏற்படக்கூடிய அனைத்து இடங்களும் கண்காணிக்கப்பட்டன. நரவணே பாதுகாப்புத் துறை அமைச்சருக்கு மீண்டும் அழைப்பு விடுத்தார்; அவர் மீண்டும் திரும்ப அழைப்பதாக வாக்குறுதி அளித்தார். நேரம் சென்றுகொண்டே இருந்தது. ஒவ்வொரு நிமிடமும், சீன டாங்குகள் உச்சியை அடைவதற்கு அருகில் வந்துகொண்டிருந்தன, நேரம் கைநழுவிப் போயிக்கொண்டிருந்தது. இரவு 10.30 மணிக்கு ராஜ்நாத் சிங் மீண்டும் அழைத்தார். அவர் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசிவிட்டிருந்தார். மோடியின் உத்தரவு ஒரே வாக்கியமாக இருந்தது: “உங்களுக்கு சரியாகத் தோன்றுவதைச் செய்யுங்கள்.” இது “முழுக்க முழுக்க ஒரு இராணுவத் தீர்மானமாக” இருக்கப்போகிறதென்று அர்த்தம். மோடியிடம் ஆலோசனை கேட்கப்பட்டது; அவருக்கு நிலைமை விளக்கப்பட்டது. ஆனால் அவர் முடிவெடுக்க மறுத்தார். நரவணே அதனை இவ்வாறு தெளிவாக நினைவுகூர்கிறார் “என் கையில் ஒரு ‘சூடான உருளைக்கிழங்கை’ கொடுத்துவிட்டார்கள்; இப்போது முழுப் பொறுப்பும் என்னிடமே இருந்தது.” இந்திய நாடு சீனாவால் ஆக்கிரமிக்கப்படும் ஒரு முக்கிய புள்ளியில் தேசிய பாதுகாப்பு தொடர்பான முக்கிய தருணத்தில் இந்திய பிரதமர் எப்படி முடிவெடுக்க முடியாமல், ஒரு பாதுகாப்பு துறை அமைச்சர் தொடங்கி 56 இஞ்சு மார்ப்புக்கு சொந்தக்காரர்கள் அனைவருமே எப்ப்படி காற்று இல்லா பலூனாக வாய்மூடி நின்றார்கள் என்கிற இந்தக் கோழைத்தனத்தை மறைப்பதற்காகத்தான், கூச்சலிட்டு நாடாளுமன்றத்தைத் தடை செய்தார்கள்; இறுதியில் அவையை ஒத்திவைத்தார்கள். 56 இஞ்சர்கள் எப்படி தொடை நடுங்கியாக இருக்கிறார்கள், சீனா என்கிற வார்த்தையை கூட உச்சரிக்க பயப்படுகிற இவர்கள் எப்படி சீன ரானுவத்திற்கு எதிராக நடவடிக்கை என்று வரும் போது நம்முடைய படை வீரர்கள் உயிரை பணயம் வைக்கிறார்கள். வழிகாட்ட வேண்டிய அதிகார பொறுப்பில் இருப்பவர்கள் ROAD SHOW வில் கூச்சல் போட்டு விட்டு முடிவு எடுக்க வேண்டிய தருணங்களில் மெளனிகளாக மாறிவிடுகிறார்கள். Somasundaram #👨மோடி அரசாங்கம்