💞ஒரு இறை நம்பிக்கையாளரின் துஆ!
வயதான இமாம் ஒருவர் ஆரோக்கியத்தோடு அனைத்து தொழுகைகளையும் அழகான முறையில் நிறைவேற்றி வந்தார்!
அந்த இமாமிடம் ஒருவர் கேட்டார் எப்படி உங்களால் இந்த வயதான நிலையில் ஆரோக்கியத்தோடு அனைத்து தொழுகைகளையும் நிறைவேற்ற முடிகிறது என்று! சுபஹானல்லாஹ்!
அதற்கு இமாம் கூறினார் நான் ஜம்ஜம் தண்ணீர் குடிக்கும் போது இந்த துஆவை அல்லாஹ்விடம் கேட்டேன் என் இறைவன் என் மீது கருணை காட்டினான்!
யா அல்லாஹ்!
எனது வாழ்நாள் இறுதிநாள் வரை என் உடலின் தோல் சுருங்குவதை விட்டும்! என் உடல் தளர்ந்து போவதை விட்டும்! என் மூட்டுகள் பலம் இழந்து போவதை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்!
இந்த நிகழ்வு ஒரு பயானில் வெளியானது.
மாஷா அல்லாஹ்!
அல்லாஹவிடம் அன்போடும் ஆசையோடும் கேட்கப்படுகின்ற எண்ணிலடங்காத துஆக்கள் அழகிய முறையில் நிறைவேற்றப்படுகின்றது அல்லாஹ் மாபெரும் கருணையாளன்!
#🕋யா அல்லாஹ்