RAC பயணிகளுக்கு மகிழ்ச்சி செய்தி: கட்டணச் சலுகை கிடைக்குமா?
நாடாளுமன்றக் குழு அதிரடி பரிந்துரை!
தற்போது ரயில்களில் RAC (Reservation Against Cancellation) முறையில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகள், முழு டிக்கெட் கட்டணத்தையும் செலுத்தினாலும் அவர்களுக்கு முழுமையான படுக்கை வசதி கிடைப்பதில்லை. ஒரு படுக்கையை இரண்டு பயணிகள் பகிர்ந்து கொள்ள வேண்டிய நிலை உள்ளது.
இது குறித்து ஆய்வு செய்த நாடாளுமன்றப் பொதுக் கணக்குக் குழு (Public Accounts Committee - PAC), ரயில்வே அமைச்சகத்திற்குப் பரபரப்பான பரிந்துரை ஒன்றை வழங்கியுள்ளது.
முழு கட்டணம் நியாயமற்றது: முழுப் பணத்தையும் பெற்றுக்கொண்டு, பயணிகளுக்குப் பாதி இருக்கையை (Half Seat) மட்டும் ஒதுக்குவது நியாயமற்றது என்று குழு அதிருப்தி தெரிவித்துள்ளது.
பணம் திரும்ப வழங்கப் பரிந்துரை: முழு இருக்கை உறுதி செய்யப்படாத RAC பயணிகளுக்கு, கட்டணத்தில் ஒரு பகுதியைத் திரும்ப வழங்க (Partial Refund) உரிய நடைமுறையை உடனடியாக உருவாக்க வேண்டும் என்று ரயில்வே அமைச்சகத்திற்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
கூடுதல் தகவல் (சூப்பர் ஃபாஸ்ட் ரயில்கள்):குறைந்தபட்சம் 55 கி.மீ வேகத்தில் செல்லும் ரயில்களை 'சூப்பர் ஃபாஸ்ட்' (Superfast) என்று வகைப்படுத்தி கூடுதல் கட்டணம் வசூலிப்பதையும் இக்குழு விமர்சித்துள்ளது. உலகத் தரத்திற்கு இணையாக, மணிக்கு 100 கி.மீ வேகத்தில் இயங்கும் ரயில்களை மட்டுமே சூப்பர் ஃபாஸ்ட் என்று அழைக்க வேண்டும் என்றும், அதற்கான நடவடிக்கைகளை 2030-க்குள் எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
#SouthernRailway #IndianRailway #Railway
#🤔தெரிந்து கொள்வோம்