ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
795 views
கடந்த 26-ம் தேதி அடை​யார், இந்​திரா நகர், 1-வது அவென்யூ சாலை​யில் கிடந்த சாக்கு மூட்​டை​யில் இளைஞர் வெட்​டுக்​கா​யங்​களு​டன் சடல​மாக இருந்​தது தெரிந்​தது. இது தொடர்​பாக சம்பவ இடத்​தில் பொருத்​தப்​பட்​டிருந்த சிசிடிவி கேமரா காட்​சிகளைக் கைப்​பற்றி போலீ​ஸார் ஆய்வு செய்​தனர். இதில் பைக்​கில் வந்த 2 இளைஞர்​கள் சாக்கு மூட்​டையை வீசிச் சென்​றது தெரிந்​தது. அதை அடிப்​படை​யாக வைத்து விசா​ரித்​த​போது கொலை செய்​யப்​பட்​டது பிஹார் மாநிலத்​தைச் சேர்ந்த கவுரவ் குமார் (24) என்​பது தெரிந்​தது. மேலும் கொலை​யாளி​கள் அதே மாநிலத்​தைச் சேர்ந்த சிக்​கந்​தர் (33), நரேந்​திர குமார் (45), ரவிந்​திர​நாத் தாகூர் (45), விகாஷ் (24) உள்​ளிட்ட 5 பேர் என்​பதை கண்​டறிந்து அவர்​களை போலீ​ஸார் கைது செய்​தனர். அவர்​களிடம் போலீ​ஸார் நேற்று முன்​தினம் இரவு விடிய, விடிய விசா​ரித்​தனர். இதில் கவுரவ் குமார் மட்​டுமல்​லாமல் அவரது மனைவி முனிதா குமாரி (22) மற்​றும் 2 வயது ஆண் குழந்தை பிர்​மானி குமார் ஆகியோரை​யும் கொன்​று, சாக்கு மூட்​டை​யில் கட்டி மத்​திய கைலாஷ் ரயில்வே பாலத்​தின் கீழ் உள்ள பக்​கிங்​ஹாம் கால்​வாய் மற்​றும் பெருங்​குடி குப்​பைக் கிடங்​கில் வீசிச் சென்​ற​தாக அவர்​கள் தெரி​வித்​தனர். இதையடுத்து தேடு​தல் வேட்​டை​யில், சிறு​வனின் உடல் கண்​டெடுக்​கப்​பட்ட நிலை​யில், முனிதா குமாரி உடலை போலீ​ஸார் தொடர்ந்து தேடி வரு​கின்​றனர். கொலை பின்​னணி: கொலை செய்​யப்​பட்ட கவுரவ் குமார் முதலில் ஸ்ரீபெரும்​புதூரில் உள்ள தனி​யார் நிறு​வனம் ஒன்​றில் காவலா​ளி​யாக வேலை செய்து வந்​துள்​ளார். அங்கு அவர் வேலை​யி​லிருந்து நிறுத்​தப்​பட்​டுள்​ளார். இதையடுத்து சொந்த மாநிலம் சென்​றுள்​ளார். பின்​னர், அங்​கிருந்​த​வாறு அடை​யாறில் உள்ள துணிக்​கடை ஒன்​றில் வேலை செய்​யும் நண்​பர் கிருஷ்ண பிர​சாத்​திடம் வேலை வாங்​கித் தரு​மாறு கேட்​டுள்​ளார். அடை​யாறில் உள்ள செக்​யூரிட்டி நிறு​வனம் ஒன்​றில் வேலை வாங்​கித் தரு​வ​தாக கிருஷ்ண பிர​சாத் தெரி​வித்​துள்​ளார். இதையடுத்து கவுரவ் குமார் தனது மனை​வி, 2 வயது மகனுடன் கடந்த 21-ம் தேதி சென்னை வந்​துள்​ளார். பின்​னர் அடை​யாறில் உள்ள நண்​பரை பார்க்​கச் சென்​றுள்​ளார். அவர் தெரி​வித்த இடத்​தில் வேலை​யில்லை என தெரி​வித்​து​விட்​டனர். பின்​னர் தரமணி பாலிடெக்​னிக்​கில் காவலா​ளி​யாக பணி செய்​யும் தற்​போது கைது செய்​யப்​பட்​டுள்ள சிக்​கந்​தரை கிருஷ்ண பிர​சாத் அறி​முகம் செய்​து​வைத்​துள்​ளார். சிக்​கந்​தர் வரு​மாறு கூறிய​தால் குடும்​பத்​துடன் கவுரவ் குமார் அங்கு சென்​றார். கவுரவ் குமார் குடும்​பத்தை தரமணி பாலிடெக்​னிக் பின்​புறம் உள்ள தனி​யார் கட்​டிடத்​தில் சிக்​கந்​தர் தங்​க​வைத்​துள்​ளார். இந்​நிலை​யில் சம்​பவத்​தன்று மதி​யம் சிக்​கந்​தர் 2 நண்​பர்​களு​டன் அங்​கேயே மது அருந்​தி​யுள்​ளார். அப்​போது முனிதா குமாரியை சிக்​கந்​தரும் அவரது நண்​பர்​களும் பாலியல் வன்​கொடுமை செய்ய முயன்​றுள்​ளனர். இதை கவுரவ் குமார் தடுக்க முயன்​றார். இதனால் ஆத்​திரம் அடைந்த அவர்​கள் இரும்​புக் கம்​பி​யால் கவுரவ் குமாரை தாக்​கினர். மேலும் அவரது மனை​வியை​யும் சரமாரி​யாகத் தாக்​கினர். இதில் இரு​வரும் சம்பவ இடத்​திலேயே இறந்​துள்​ளனர். அழுது கொண்​டிருந்த அவர்​களது குழந்​தையை சுவற்​றில் மோதி கொன்​றனர். பின்​னர் 3 பேரை​யும் கொலை​யாளி​கள் தனித்​தனி சாக்கு மூட்​டை​யில் கட்​டி​யுள்​ளார். மறு​நாள் அதி​காலை​யில் முதலில் சிறு​வனின் உடலை மத்​திய கைலாஷ் ரயில்வே பாலத்​தின் கீழ் பக்​கிங்​ஹாம் கால்​வா​யிலும், முனிதா குமாரி​யின் உடலை பெருங்​குடி குப்​பைக் கிடங்​கிலும் வீசினர். தொடர்ந்து கவுரவ் குமார் உடலை பெசன்ட் நகர் கடற்​பகு​தி​யில் வீச எடுத்து வந்​த​போது அதிக எடை காரண​மாக அடை​யாறு இந்​திரா நகரில் மூட்டை சரிந்​துள்​ளது. எனவே கொலை​யாளி​கள் அதை அங்​கேயே விட்​டுச் சென்​றுள்​ளனர் என்று அவர்​கள் வாக்​குமூல​மாக கூறிய​தாக போலீ​ஸார் தெரி​வித்​தனர். இரு​வரின் உடல் கண்​டெடுக்​கப்​பட்​டுள்ள நிலை​யில், பெருங்​குடி குப்​பைக் கிடங்​கில் ஜேசிபி இயந்​திரம் மூலம் குப்​பையை கிளறி முனிதா குமாரி​யின் உடலை போலீ​ஸார் தொடர்ந்து தேடி வரு​கின்​றனர். பிஹாரைச் சேர்ந்த ஒரே குடும்​பத்​தைச் சேர்ந்த 3 பேர் அதே மாநிலத்​தைச்​ சேர்ந்​தவர்​களால்​ கொலை செய்​யப்​பட்​ட சம்​பவம்​ #😱சென்னையை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்🔪 #📢ஜனவரி 29 முக்கிய தகவல் 🫠 சென்​னை​யில்​ அதிர்ச்​சி​யை ஏற்​படுத்​தி உள்ளது.