ல.செந்தில் ராஜ்
9.7K views
🌹இனிய சிவனைதொழுதால்_துன்பம் வருமா? நற்றுணையாவது அண்ணாமலையாரே 🙏 சிவனை தொழுபவரை சிவன் நேரடியாக ஜீவமுக்கி நோக்கி அழைத்துச்செல்கின்றார். இப்பிறப்பிலே உன் ஜீவன் முக்தி அடையவேண்டுமாயின், கர்மமது களயப்பட வேண்டும். உங்களின் முந்தய பிறப்புக்களினால் உண்டாக்கப்பட்ட கர்மாவை ஓரிரு பிறப்புக்களில் அகற்றுவதென்பது எவ்வளவு கடினம். இந்த கர்மாக்களே கஷ்டம், துன்பம், வியாதி இப்படி பல கோணங்களில் கழிகின்றது. ஆனாலும் சிவன் அதை உங்கள் சித்தம், புத்திக்கு தெரியவைத்தும், தெளிய வைத்தும், தாங்கும் சக்தியை கொடுத்துமே, உங்கள் கர்மத்தை அவன் கழியவைப்பான். இறை முக்தி அடைந்தவர்கள் எல்லாம், எத்தனையோ கஷ்டங்கள், துன்பங்களை கடந்தே, முக்தி பெற்றார்கள் என்பதை அவர்கள் வாழ்க்கை வரலாற்றிலே நாம் பார்த்துள்ளோம். ஜீவனை தொழுவதர்க்கு மதமோ, மார்க்கமோ தேவையில்லை. எவர் ஒருவர் உண்மை + அன்பு + கருணை + இருப்பு + உயிர்ப்பு, நிலையில் வாழ்கின்றாரோ, அவரே இறைவன் வாழும் ஆலயம். அத்தகய மனிதரை பார்க்கும்போதே அந்த அமைதி நிலை உங்களையும் தொற்றிக்கொள்ளும். "பெற்ற தாய்தனை மகன் மறந்தாலும் பிள்ளையைப் பெற்ற தாய் மறந்தாலும் உற்ற தேகத்தை உயிர்மறந்தாலும் உயிரை மேவிய உடல்மறந்தாலும் கற்ற நெஞ்சகங் கலைமறந்தாலும்- கண்கள் நின்றிமைப் பதுமறந்தாலும் நற்ற வத்தவர் உள்ளிருந் தோங்கும் நமசிவாயத்தை நான்மற வேனே." நாம் நினைத்த சர்வ காரியமும் சித்தியாக இந்த மந்திரத்தை காலையிலும், படுக்கப்போகும் முன்பும் உச்சரியுங்கள் ஓம் என்று மனத்தில் சொல்லிக்கொண்டே மூச்சை ஆழமாக உள்ளிழுத்து, பின் வெளியே விடும்பொழுது ஒரே மூச்சில் இதை சொல்லி முடிக்கவேண்டும். சி வ ய ந ம ய ந ம சி வ ம சி வ ய ந வ ய ந ம சி ந ம சி வ ய எம்பெருமான் 💕 திருக்கருணை இருந்தவாறே 🙏 எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அகிலம் காக்கும் அண்ணாமலையாரே போற்றி போற்றி . உன் ஆழ்ந்த கருணையை பெற என்ன தவம் செய்தேனோ🌹 சிவாய நம🙇 சிவமே ஜெயம் ‌ சிவமே தவம். சிவமே என் வரமே . எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும். #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶