#🤲தராவீஹ் தொழுகை🧕 #🤲ரமலான் நோன்பு நேரம்⏰ #☪️ரம்ஜான் வாழ்த்துக்கள்🤲 #🌙ரம்ஜான் வரலாறு📕 #☪️ரம்ஜான் ஸ்டேட்டஸ் 🌙 மாதம் அல்லாஹ் நமக்கு வழங்கிய மிக பெரிய அருட்கொடை ஆகும் இந்த மாதத்தில் நாம் அதிகம் அமல் செய்து அல்லாஹ்வின் பொருத்தத்தை பெற வேண்டும்!
அல்லாஹ் பாதுகாக்கணும் நம்மில் பலர் இந்த ரமலான் மாதத்தில் கூட இச்சைகளை கட்டுப்படுத்தாமல் மற்ற மாதங்களில் எப்படி உள்ளார்களே அதே நிலையில் இந்த மாதத்திலும் உள்ளார்கள்! இவர்களை விட நஷ்டவாளி யார் இருக்க முடியும் நஊதுபில்லாஹ்!
ரமலான் மாதத்தில் நோன்பு வைப்பது மட்டும் முக்கியம் கிடையாது இதை தவிர்த்து நாம் மற்ற அமல்களும் அதிகம் செய்ய வேண்டும்!
நோன்பு வைத்தல்
ரமலானில் மிக முக்கியமான கடமை நோன்பு வைப்பது ஆகும் மார்க்க விதிவிலக்கு அளித்த நபர்களை தவிர்த்து மற்ற அனைவரின் மீதும் நோன்பு வைப்பது கட்டாய கடமை ஆகும்!
நோன்பு ஒரு மறைவான அமல் ஆகும்! நோன்பின் அடிப்படை நோக்கம் இறையச்சம் தக்வா) ஆகும்!
நம்முடைய மன இச்சைகளை கட்டுப்படுத்தி நமக்கு அனுமதித்த செயல்களை கூட அல்லாஹ்விற்காக தவிர்த்து இருக்கின்றோம் இதனால் இதற்கு கூலியும் அதிகம் ஆகும்!
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
அல்லாஹ் கூறுகின்றான் : நோன்பு எனக்கு உரியதாகும். அதற்கு நானே நற்பலன் வழங்குகிறேன்.
அவன் எனக்காகவே தனது உணர்வையும்
உணவையும் கைவிடுகிறான் !
(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 2119)
நோன்பாளிக்கு என்று தனி சொர்க்கம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்
சொர்க்கத்தில் ரய்யான் எனப்படும் ஒரு நுழைவாயில் இருக்கிறது. மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகளே நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறெவரும் (அதன் வழியாக) நுழையமாட்டார்கள்! (நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 2121)
தொழுகையை பேணுதல்
தொழுகை இஸ்லாத்தில் மிக முக்கியமான ஒரு அமல் ஆகும் அதனால் நாம் ராமலனிலும் தொழுகையை பேணி தொழ வேண்டும்!
ரமலானில் தொழாமல் நோன்பு மட்டும் வைத்தால்
அந்த நோன்பு செல்லுப்படி ஆகாது!
( ஃ ப தா வா :
ஷேக் இப்னு உதைமீன் : அல் – சியாம்
: 87)
தொழுகை நமக்கும் காஃபிர்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு ஆகும் ஒருவரிடம் தொழுகை இல்லை ன் எந்த அமலும் ஏற்றுக்கொள்ளப்படாது! என அனைத்து மார்க அறிஞர்களும் கூறி உள்ளார்கள்! அதனால் நாம் 5 நேர தொழுகையை பேணி தொழ வேண்டும்!
உபரியான தொழுகை
நாம் 5 நேர தொழுகை மட்டும் தொழாமல்
அதன் உடைய முன் சுன்னத் மற்றும் பின்
சுன்னத்தையும் பேணி தொழ வேண்டும்!
5 நேரம் தொழுதால் எனது மீது உள்ள கடமை நீக்கி விடும் என்று கணக்கு பார்த்து அமல் செய்யாமல் நன்மை எதிர் பார்த்து அதிகம் அமல் செய்ய வேண்டும்!
உபரியான தொழுகைகள்:
1) பர்ளு தொழுகையின் முன் பின் சுன்னத்கள்!
2) லுஹா தொழுகை!
3) தராவிஹ் தொழுகை
4) வித்ரு தொழுகை
உபரியான தொழுகை தொழுவதின் சிறப்பு :
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நம்பிக்கை கொண்டு (நற் கூலியை) எதிர்பார்த்து ரமலான் மாதத்தில் நின்று வணங்குகிறவரின் முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விடும்! (நூல் : புகாரி : 37)
அதிகமாக அல் குர்ஆன் ஓதுதல்
ரமழான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான்
மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்! (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது! (அல் குர்ஆன் : 2 : 185)
மற்ற மாதங்களை ஒப்பிடும் போது ரமலான் மாதம் சிறந்ததாக விலங்குவதற்கு முக்கிய காரணம் அல்லாஹ் இந்த மாதத்தில் தான் அல்குர்ஆனை நமக்கு அருளினான்!
இந்த மாதத்தில் நாம் நம்மால் இயன்ற அளவுக்கு
வேண்டும்!
அதிகம் அல்குர்ஆனை ஓத அல்குர்ஆன் ஓத வேண்டும் என்று மிகவும் வேகமாக ஓதவும் கூடாது!
குர்ஆனைத் தெளிவாகவும், நிறுத்தி, நிறுத்தியும் ஓதுவீராக! (அல்குர்ஆன் : 73 4)
நாம் நம்மால் இயன்ற அளவுக்கு தினமும் அல்குர்ஆன் ஓத வேண்டும்!
அல்லாஹ் பாதுகாக்கணும் பெரும்பாலான இடங்களில் என்ன ஓதுகிறார்கள் என்று புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு மிக வேகமாக ஓதி 27 வது நாளில் முடித்து விடுகிறார்கள்! ஆனால் இவ்வாறு செய்ய இஸ்லாம் கூறவில்லை!
. இவை எல்லாமே மக்களே உருவாக்கி கொண்டது ஆகும் நாம் தினமும் இயன்ற அளவுக்கு நிறுத்தி அல்குர்ஆன் ஓத வேண்டும்!
' மிக முக்கியம் செய்யும் அமலை யாரிடமும் கூற கூடாது
அல்லது அதை பகிரங்கம் படுத்த கூடாது இன்று பலர் இரவில் நின்று வணங்கி பகலில் அதிகம் அமல் செய்து அதை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்கிறார்கள் இது முகஸ்தூதி (பிறர் பார்க்க அல்லது புகழ் பெற) செய்வது ஆகும்! இனால் நம்முடைய நன்மைகள் அழிந்து விடும் இதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்!
அதிகமாக ஸதகா (தானதர்மம்) செய்தல்
ரமலானில் நமது சக்திக்கு ஏற்றவாறு அதிகம் தர்மம் செய்ய வேண்டும்! இந்த ரமலானில் கூட எவ்வளவு நபர்கள் ஸஹர் கூட சரியாக செய்ய முடியாத நிலையில் உள்ளார்கள் அதனால் நாம் இது போன்றவர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும்!
செல்வங்களை அதிகமாக வாரி வழங்கக்கூடியவர்களாக
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிலேயே இருந்தார்கள். அவர்கள் ரமளான் மாதத்தில் மேன்மேலும் அதிகமாக வாரி வழங்குவார்கள்!
(நூல்
: முஸ்லிம் : 4622)
நம்மால் இயன்ற அளவுக்கு தர்மம் செய்தல் ஜகாத் கடமையாகி இருந்தால் ஜகாத் விரைவாக கொடுக்க வேண்டும்!
வசதி உள்ளவர்கள் உம்ரா செய்தல்
நபி
(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ரமலானில் செய்யப்படும் ஓர் உம்ரா என்னோடு ஹஜ்ஜுச் செய்வதற்கு நிகராகும்!
(நூல்
புகாரி : 1863)
அதிகமாக பாவமன்னிப்பு தேடுதல்
இந்த ரமலான் மாதத்தில் மிக முக்கியமான ஒன்று தவபாட செய்வது ஆகும்! தினமும் சிறிது நேரமாவது நாம் மனம் வருந்தி அல்லாஹ்விடம் தவ்பா செய்ய வேண்டும்!
நாம் செய்த பாவங்கள் வானத்தை தொடும் அளவுக்கு இருந்தாலும் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்க வேண்டாம்! அந்த பாவத்தை விட அல்லாஹ்வின் அருளும் மன்னிப்பும் விலாசமானது ஆகும்!
அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஆதமின் மகனே! நிச்சயமாக நீ என்னிடம் துஆ செய்யும் காலமெல்லாம் என்னை நீ நம்பும் காலமெல்லாம் உன்னில் ஏற்படும் குற்றத்தை நான்
மன்னிப்பேன்! நான் பொருட்படுத்த மாட்டேன்!
ஆதமின் மகனே! வானத்தின் முகட்டை உன் பாவங்கள் அடைந்து, பின்பு, என்னிடம் நீ பாவமன்னிப்புக் கோரினால் உன்னை மன்னிப்பேன். நான் பொருட்படுத்தமாட்டேன்!
ஆதமின் மகனே! நீ பூமி நிரம்ப என்னிடம் பாவத்தைக் கொண்டு வந்து, பின்பு எனக்கு எதையும் நீ இணை வைக்காதவனாக என்னை நீ சந்தித்தால், அது நிரம்ப உனக்கு நான் மன்னிப்பைத் தருவேன்!
என்று அல்லாஹ் கூறினான் என நபி (ஸல்) கூறினார்கள்! நூல் : ரியாளுஸ்ஸாலிஹீன் : 1878)
இஃதிகாஃப்
பள்ளியில் நன்மையை எதிர்பார்த்துத் தங்குவதற்கு இஃதிகாஃப் என்று சொல்லப்படும்!
நபி (ஸல்) அவர்கள் ரமலான் மாதத்தின் கடைசி 10 நாட்கள் இஃதிகாஃப் இருந்துள்ளார்கள்!
ரமலானில் கடைசி ஒற்றை படை நாட்களில் ஏதோ ஒரு இரவில் லைலத்துல் கத்ர் இரவு உள்ளது! நாம் கடைசி பத்து நாட்கள் இஃதிகாஃப் இருந்து அதிகம் அமல் செய்ய வேண்டும்!
இதனால் நம்மால் 1000 மாதங்களை விட சிறந்த இரவு லைலத்துல் கத்ர் இரவை அடைந்து கொள்ள முடியும்!
கடைசி ஒற்றை படை நாட்களில் குறைந்தது ஒரு நாளாவது பள்ளியில் இஃதிகாஃப் இருக்க முயற்சி செய்ய வேண்டும்!
இஃதிகாஃப் பள்ளியில் மட்டுமே இருக்க
முடியும் வீட்டில் இருக்க கூடாது!
ஹைலு - நிபாஸ் பெண்கள்
ஹைலு அல்லது நிபாஸ் அல்லாஹ் பெண்களுக்கு ஒரு
சோதனையாக கொடுத்து உள்ளான்!
இந்த ரமலானில் பல சகோதரிகள் ஆர்வத்துடன் அதிகம் அமல் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் ரமலானை அடைந்து இருப்பார்கள்!
ஆனால் அவர்களுக்கு ஆரம்பத்திலேயே அல்லது நடுவில் ஹைலு ஏற்பட்டு நோன்பு வைக்க முடியாத தொழ இஃதிகாஃப் இருக்க முடியாத நிலை ஏற்பட்டு விடும்!
கண்ணியத்திற்குரிய சகோதரிகளே இதை நினைத்து கவலை கொள்ள வேண்டாம்! அல்லாஹ் தான் நமக்கு இதை கொடுத்து உள்ளான் நாம் நோன்பை களா செய்தாலும் அதற்கு ஏற்ற கூலியை அல்லாஹ் நமக்கு கொடுப்பான்!
நாம் நோன்பு மற்றும் தொழுகை தவிர்த்து மற்ற அமல்களை நம்மால் இயன்ற அளவுக்கு செய்ய வேண்டும்!
மார்க்க சார்ந்தவற்றை படித்து தெரிந்து
கொள்ளுதல்! தவ்பா செய்தல் போன்ற அமல்களை
ஹைலு அல்லது நிபாஸ் உடைய பெண்கள் செய்யலாம்!