#🚨 தமிழகத்தை குலுக்கிய வழக்கில் – பரபரப்பு தீர்ப்பு! #மார்ச் 24 முக்கிய தகவல் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📺வைரல் தகவல்🤩 9 போலீசாரும் குற்றவாளிகள்
தண்டனை விவரம் மார்ச் 30ல் அறிவிக்கப்படும் - மதுரை மாவட்ட நீதிமன்றம்
சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ் - மகன் பென்னிக்ஸ் கொலை வழக்கில் இருவரின் உடலில் இருந்த காயங்கள் இயற்கைக்கு மாறான மரணங்களை விளைவிக்க கூடிய வகையில் இருந்தது ஜெயராஜ் உயிரிழந்தவர் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் அடிக்கச் சொன்னதால்தான் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் தாக்கி உள்ளனர்
இருவரின் கைகளை கயிற்றில் கட்டி தொங்கவிட்டு தாக்கி உள்ளது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது தந்தை, மகன் ஆகிய இருவரையும் இரவு முழுவதும் சிறிது நேரம் இடைவெளி விட்டு விட்டு காவல்துறையினர் தாக்கி உள்ளனர் உயிரிழந்தவர் நாம் அடித்து பழகுவதற்கு அப்பா, மகன் கிடைத்துள்ளனர், நாம் பயிற்சி எடுத்துக் கொள்வோம் என காவல்துறையினர் அவர்களுக்குள் பேசிக் கொண்டனர் காவல்துறையினர் நினைத்திருந்தால் அவர்கள் செய்த தப்பை திருத்தியிருக்கலாம், ஆனால் அவர்கள் திருத்திக் கொள்ளவில்லை குற்றம்சாட்டப்பட்ட காவல்துறையினர் அனைவரும் ஒரே பகுதியில் தான் இருந்தார்கள் என்பது செல்போன் டவர் மூலமாக தெரிய வந்துள்ளது.