படையப்பா விமர்சனம்:-
எனது பார்வையில் படையப்பாவின் அப்பா:
படையப்பா படத்தை 26 வருடங்களுக்கு முன்பு நான் பார்க்கும் பொழுது உங்களைப் போலவே சிவாஜியை பெரிய மனுஷன் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.
இப்போது உட்கார்ந்து யோசிக்கும் பொழுதுதான் தெரிகிறது இந்தப் பெரிய மனுஷன் போர்வைக்குள் எவ்வளவு சிறிய (சில்லரை) புத்தி இருக்கிறதென்று.
தம்பி மணிவண்ணன், இந்தப் பெரியவரிடம் முழு சொத்தையும் கேட்க மாட்டார், தம்பி என்கிற முறையில் சட்டப்படி பாதி சொத்தினைப் பிரித்து தாருங்கள் என்றுதான் நியாயமாகக் கேட்பார். மணிவண்ணன் பார்வையில் நாமும் நன்றாக இருக்க வேண்டும், நமது அண்ணனும் நன்றாக இருக்க வேண்டும் என்கிற இயல்பான எண்ணம் இருக்கும். அதாவது அவரவர் சொத்தினை அவரவர் அனுபவித்துக் கொண்டு சந்தோசமாக வாழ்வது.
ஆனால் இந்தப் பெரியவர் அதற்கு ஒப்புக்கொள்ள மாட்டார். "நான் உயிரோடு இருக்கிற வரை சொத்தைப் பிரிக்க அனுமதிக்க மாட்டேன்" (இது என்ன எழவு லாஜிக்கோ ) என்று குய்யோ, முறையோ என்று கூச்சலிடுவார். பின்பு "ஏன்யா பிரிக்கணும்?, எல்லாத்தையும் என் தம்பியே எடுத்துக் கொள்ளட்டுமே" என்று ஊரார் முன்பு வெட்டி பந்தாவுக்காக பெருந்தன்மையாக நடந்து கொள்வது போல் சொல்வார். அவ்வாறு சொல்லிவிட்டு சொத்து முழுவதையும் தம்பிக்கு மகிழ்வான மனதுடன் கொடுக்காமல் உள்ளுக்குள் அழுவார். (அப்புறம் எதுக்குயா முழு சொத்தையும் கொடுத்த, தம்பி கேட்ட மாதிரி பாதி கொடுத்து இருக்கலாம்ல). இவரே எல்லாத்தையும் உனக்கே தரேன்னு வாய விட்டுட்டு, ஊர்க்காரங்க முன்னாடி, தம்பி முழு சொத்தையும் வாங்கிட்டு என்ன ஏமாத்திட்டான்கிற மாதிரி சீன் போட்டு அவரது தம்பியை வில்லன்னு நம்மளையும் நம்ப வச்சுடுவார் (என்னா ஒரு வில்லத்தனம்).
இவர் உண்மையிலேயே பெரிய மனுஷனா இருந்திருந்தா, அப்பா-அம்மா இறந்த பிறகு, தம்பி வாய்விட்டு கேட்பதற்கு முன்னரே, அவருக்கு பாதி சொத்தினைப் பிரித்துக் கொடுத்திருக்க வேண்டும், ஆனால் குடும்பத்துக் குழந்தைகள் கல்யாண வயது வரும் வரை, தம்பிக்கு ஒரு பைசா கூட கொடுக்காமல் இவரே எல்லாத்தையும் அனுபவித்துக் கொண்டு வருவார்.
எனக்குத் தெரிந்து தம்பி மணிவண்ணன், இவரிடமே நேரில் பலமுறை பாகம் பிரிப்பதைப் பற்றி கௌரவமாகப் பேசி இருப்பார், அதெல்லாம் Deleted Scenes ல போயிருக்கும். அப்படி பேசியும் பல வருஷமா வேலைக்கு ஆகலைன்னு தெரிஞ்ச பிறகுதான் அவர் பஞ்சாயத்துல பிராது கொடுத்து இருப்பார்.
சொத்துக்காக மகள் கையெழுத்திட வரும்பொழுது "உன்னை எப்படி கல்யாணம் செய்து கொடுப்பேன்?" என்று மனதிற்குள் அவரது கையாலாகாத நிலையை நினைத்து அழுவார். ஏனெனில் அவருக்கு எந்த வேலையும் தெரியாது, அவர் படிக்கவும் இல்லை. அவரது மகன் படையப்பாவாவது இன்ஜினியரிங் படித்து சென்னையில் வேலை செய்து வருகிறார். இவர் எந்த வேலைக்கும் செல்லாமல் தாத்தா, அப்பா சேர்த்து வைத்த சொத்தை, காதலிச்சவங்கள சேர்த்து வைக்கிறேன்னு ஒரு மொக்க விசயத்துக்காக கரைத்துக் கொண்டு, பெரிய மனிதன் என்கிற போர்வையில், அருகில் மணியக்காரர் மாதிரி சில பல ஜால்ராக்களை வைத்துக்கொண்டு ஊதாரித்தனாமாக ஊரைச் சுற்றி வருவதோடு சரி.
"நீ அனுப்புன பணத்துல ஊருக்கு வெளியே ரெண்டு கிரவுண்ட் இடம் வாங்கியிருக்கேன்"னுதான் மகன் படையப்பாகிட்ட சொல்வாரே தவிர நான் சம்பாதிச்சு வாங்கினேன்ன்னு எங்கயும் சொல்ல மாட்டார். (இருந்தாத்தானே சொல்றதுக்கு, அவர் என்ன வச்சுக்கிட்டா வஞ்சகம் பண்றார்?)
சரி, "என் மகன்தான் பெரிய சொத்து" என்று நம்ம பந்தா பாரமசிவம் பஞ்ச் டயலாக் பேசினாலும், வீட்டை விட்டு வரும்பொழுது, இவன் ஒழுங்கா சோறு போடுவானா? மாட்டானா? என்று அவனையும் நம்பாமல் அங்கேயே உயிரை விட்டு தப்பித்துக் கொள்வார். (பின்ன, இத்தனை வருஷம் அப்பன் காசுல சொகுசா வாழ்ந்துட்டு, காலம் போன காலத்துல குடிசைல போய் கஷ்டப்படுன்னு சொன்னா யார்தான் ஒத்துக்கிடுவாங்க)
இவருக்கு ஒரு முடிவை எடுத்தால் அதில் உறுதியாக நிற்கத் தெரியாது, தம்பியிடம் சொத்து எல்லாம் கொடுத்து விட்டு மாசாக வீட்டை விட்டு வெளியே வராமல், கொஞ்சம் நேரம் போய் உட்காந்துட்டு வரேன்னு ஓடுவார். ( அவ்வளவு ஆசை இருந்தா எதுக்குயா சொத்தை கொடுக்கிற?)
"தம்பி! தம்பின்னு உன்ன என் தலைமேல தூக்கி வச்சு ஆடுனேன், ஏன்னா உன்மேல எனக்கு அம்புட்டு பிரியம்ன்னு" சொன்னவர், அந்த தம்பிக்கு முழு மனசா, சந்தோசமா சொத்தை எழுதிக் கொடுக்க மாட்டார். "நீ கூத்தியாளுக்கு பிறந்தவன்டா" என்று, ஊரார் முன்னிலையில் மனசுக்குள்ள அவ்வளவு நாள் இருந்த மொத்த வன்மத்தையும் கொட்டிய பிறகே சொத்தை தாரேன்னு (அதுவும் அழுதுகொண்டே) சொல்வார்.
"இந்த விடயம் வெளியே தெரியக்கூடாது என்று என் அம்மா என்னிடம் சத்தியம் வாங்கியிருக்காங்க" என்று சொல்வார், ஆனால் சொத்துக்காக செய்து கொடுத்த சத்தியத்தை காப்பாற்றாது காற்றில் பறக்க விட்டுவிடுவார். (நீயெல்லாம் ஒரு பெரிய மனுஷனாயா?)
வறட்டு கவுரவம், வெட்டி பந்தாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இவர் எந்த இடத்திலும் இயல்பாக இருக்க மாட்டார், அதற்கு சிறந்த உதாரணம், படையப்பாவுக்கு லீவுல ஊருக்கு வான்னு இவரே லெட்டர் எழுதி போட்டுட்டு, வீட்டுல உள்ள எல்லாரையும் வேலை மெனெக்கெட்டு ரெய்டு விட்டுக்கிட்டு இருப்பார். என் புள்ளைய எனக்கு பார்க்கணும் போல இருந்துச்சுன்னு சொன்னா, அப்படி என்னய்யா உன் கவுரவம் குறைஞ்சுடப் போகுது?
இப்படி எல்லாத் தப்பையும் இவரே பண்ணிட்டு மத்தவங்க மேல பழியைத் தூக்கிப் போடுறதுல கில்லாடி.
இவருக்கு யார் மேலயும் நம்பிக்கை இருக்காது, யாரையும் நம்பவும் மாட்டார். நீலாம்பரி எல்லார் முன்னாடியும் படையப்பாவுக்கு முத்தம் கொடுத்த உடனே, "உன் மகன் அந்தப் பொண்ணுகிட்ட என்ன திருவிளையாடல் பண்ணினான்னோன்னு" பெத்த மகனையே சந்தேகப்படுவார்.
எல்லாத்துக்கும் மேல, உயிர்போற அந்த நேரத்துல கூட, கொஞ்சம்கூட தாமதிக்காமல் தன் மனைவியின் தலையில் உள்ள பூவினைப் பறித்து தரையில் போடும் அளவிற்கு பக்கா செல்பிஷ் இவர். (ஏன், அந்தம்மா தலையில ஒரு ரெண்டு நாள் பூ இருந்தாத்தான் என்னையா?).
இப்படி 5 கிராம் மீசையை வளர்த்துகிட்டு, எப்போவும் வறட்டு கவுரவம், வெட்டி பந்தான்னு, மனசுல ஒன்ன வச்சுக்கிட்டு, வெளியே நல்லவன் மாதிரி நடிச்சுக்கிட்டு இவரும் கஷ்டப்பட்டு, கூட இருக்கிறவங்களையும் கஷ்டப்படுத்திக்கிட்டு இருக்கமால், இவரோட தம்பி மணிவண்ணன் மாதிரி இயல்பா இருந்துட்டு, கூட இருக்கிறவங்களையும் சந்தோசமா வச்சுக்கிட்டு போயிடலாம்.
.
வாங்குனதே ரெண்டு கிரவுண்ட் இடம்.... அதுல டன்டன்னா கிராணைட் வெட்டி ரஜினி பணக்காரர் ஆகிடுறாரு... என்னமோ நம்மலும் பாத்து 🔥விட்டோம் அப்போ 😏... தமிழ்ப்படம் சிவா போல தலைவர் ஏர்போர்ட் பஸ்டாண்ட் பீச் மட்டும் தான் கட்டல மற்றபடி அந்த ரெண்டு கிரவுண்ட் இடத்தை வெச்சு தலைவர் தனி ராஜாங்கமே நடத்திடுவாரு....
#padayappa #rajinikanth #rajinikanth