🙏திருவாசகம் 🙏கோயில் திருப்பதிகம்🙏
🙏பாடல்
🙏மாறி நின்று, என்னை மயக்கிடும் வஞ்சப் புலன் ஐந்தின் வழி அடைத்து; அமுதே
ஊறி நின்று; என் உள் எழு பரஞ்சோதி! உள்ளவா காண வந்தருளாய்:
தேறலின் தெளிவே! சிவபெருமானே! திருப்பெருந்துறை உறை சிவனே!
ஈறு இலாப் பதங்கள் யாவையும் கடந்த இன்பமே! என்னுடை அன்பே!
🙏பொருள்
மாறி நின்று = என் எண்ணங்களுக்கு, என் நோக்கங்களுக்கு , என் குறிக்கோளுக்கு மாறி நின்று
என்னை மயக்கிடும் = என்னை மயக்கம் செய்யும்
வஞ்சப் = வஞ்சகமான
புலன் = புலன்கள்
ஐந்தின் = ஐந்து புலன்களின்
வழி அடைத்து = வழியை அடைத்து
அமுதே ஊறி நின்று; = எனக்குள் அமுதமாக ஊறி நின்று
என் உள் எழு பரஞ்சோதி! = எனக்குள்ளே எழும் உயர்ந்த ஜோதியே
உள்ளவா = உள்ளவனே
காண வந்தருளாய் ன்= நான் உன்னை வெளியே காணும்படி வந்து அருள்வாய்
தேறலின் தெளிவே! = தேனின் தெளிவே
சிவபெருமானே! = சிவ பெருமானே
திருப்பெருந்துறை உறை சிவனே! = திருப்பெருந்துறை என்ற தலத்தில் வசிப்பவனே
ஈறு இலாப் = இறுதி இல்லாத
பதங்கள் = நிலைகள்
யாவையும் = எல்லாவறையும்
கடந்த இன்பமே! = கடந்த இன்பமே
என்னுடை அன்பே! = என்னுடைய அன்பே
எத்தனையோ பட்டங்கள். ஒவ்வொரு பட்டத்திலும் ஒரு இன்பம்.
மகள், கன்னிப் பெண், மனைவி, தாய், பாட்டி
மகன், பையன், வாலிபன், கணவன், தந்தை, தாத்தா
என்று ஒவ்வொரு கட்டமாக வாழ்வில் பல பட்டங்கள். பதங்கள் . ஒவ்வொன்றிலும் ஒரு இன்பம். இவை அனைத்தையும் கடந்த இன்பம் இறைவன் தருவது.
இறைவன் என்பவன் ஏதோ ஒரு ஆள் அல்ல. அவன் அன்பின் மொத்த குறியீடு. அன்பு என்னவெல்லாம் செய்யுமோ அதுவே இறைவன் செயல்பாடு.
வெளி உலக இன்பங்கள் மறையும் போது , உள்ளே ஊறும் அமுத ஊற்று போன்றவன் அவன்.
#🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஆன்மீகம்