பிப்ரவரி 20, 2026 முதல் தினசரி 204 ரயில்களில் இருந்து 164 ஆகக் குறைக்கப்பட்டது. ஆனால் நிலைமை மோசமானதால், பிப்ரவரி 24 முதல் இது 115 ரயில்களாக மேலும் குறைக்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 90 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், இருக்கும் ரயில்களில் மக்கள் உயிருக்கு ஆபத்தான முறையில் தொங்கிக்கொண்டு செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.
வந்தே பாரத் போன்ற ஆடம்பர ரயில்களுக்குக் காட்டும் ஆர்வத்தை, சாமானிய மக்கள் பயணிக்கும் புறநகர் மின்சார ரயில்களில் ஒன்றிய பாஜக அரசு காட்டவில்லை.
இந்த பணிகளைத் தொடங்கும் முன் கூடுதல் நடைமேடைகளை அமைத்திருக்கலாம். ஆனால், சரியான மாற்று வழிகளை யோசிக்காமல் ஒன்றிய பாஜக அரசு அவசரகதியில் பணிகளைத் தொடங்கியதே இந்த குழப்பத்திற்கு காரணம்.
எழும்பூர் ரயில் நிலையத்தை அழகுபடுத்துவதை விட, கூடுதல் தண்டவாளங்கள் மற்றும் நடைமேடைகளை (Platform 10, 11) பயணிகளுக்கு இடையூறு இல்லாமல் அமைப்பதே ஒரு மக்கள் நல அரசின் கடமையாகும். ஆனால், ஒன்றிய பாஜக அரசு இதில் தோல்வி அடைந்துள்ளது.
எழும்பூர் ரயில் நிலையப் பணிகளைத் தொடங்கும் முன்பு, தமிழ்நாட்டு மக்களின் அன்றாடப் போக்குவரத்தைப் பாதிக்கும் இந்த முடிவை எடுக்கும்போது, மாநில அரசுடன் (Tamil Nadu Govt) முறையான ஆலோசனைகளை ஒன்றிய அரசு செய்யவில்லை.
Vignesh Anand
#👨மோடி அரசாங்கம்