பாஸ்கர் இராமாநுஜதாசன் 969 ஓம்திருமூர்த்தி மண்ணு
3.3K views
||श्री:||ஸ்ரீ (969) #ராமாநுஜர் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே ஶரணம் எம்பெருமான் திருமாலே ! பல்வேறு வரங்களைப் பெற்றுச் சேர்த்து வைத்திருப்பதன் காரணமாக தோல்வி என்பதனை அடையாது ஆணவத்துடன் இயங்கிக் கொண்டிருந்த இரணியன் என்னும் அசுரனின் மார்பினை நரசிம்மமூர்த்தியாகத் திருவவதாரம் மேற்கொண்டு தன் கூர்மையான நகங்களினால் இருகூறாகப் பிளந்து அவன் உயிரைப் போக்கி அருளினாய் ! உலகப் பிரளயம் உண்டான காலத்தில் உலகங்கள் அனைத்தையும் தன் திருவயிற்றினுள்ளே அடக்கி வைத்திருந்து, பின்பு நீயே அவைகளை வெளியில்விட்டு இவ்வுலகங்களை வளரச் செய்தாய் ! மேலும் இவ்வுலகில் தேவர்கள், மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் ஆகிய நான்கு வகைகளிலும் இயைந்து வாழ்ந்து கொண்டிருக்கும் ஆத்மாவாக ஆகி இருக்கின்றாய் ! எம்பெருமான் திருமாலாகிய நீயே உலகங்கள் அனைத்துக்கும் கருவிப் பொருளாகவும், கர்த்தாவாகவும் இருக்கின்றாய் என்பதை நீ அறிவாயாக ! திருமழிசைப்பிரான் திருவடிகளே ஶரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

More like this