💘💞Par Tha💞💘
634 views
மூவ்ரின் உடலையும் கட்டணம் இன்றி விமானம் மூலம் அனுப்புகின்றார்களா இல்லை ரயில் மூலம் அனுப்புகின்றார்களா என்று தெரியவில்லை! ஒருவேளை மூவரின் உடலையும் ரயில் மூலம் கட்டணமின்றி அனுப்பினால் அது நம் மத்திர அரசின் நலத்திட்டத்தின் மீது ஒட்டப்பட்ட ஸ்டிக்கர் ஆகும்! காரணம் ரயில்மூலம் பிரேதங்களை காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை யார் வேண்டுமானாலும் ரயிலில் கட்டணம் இன்றி அனுப்பலாம்! இதை நாம் தனி ஆளாக அனுப்ப முடியாது, செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலமாகத்தான் அனுப்பமுடியும். இதற்காக நாம் செஞ்சிலுவைச் சங்கத்தையோ அல்லது செஞ்சிலுவைச் சங்கத் தன்னார்வலர்களையோ தொடர்பு கொண்டால் அவர்கள் காவல் துறை மற்றும் பிரேதம் இருக்கும் அரசு மருத்துவமனையை தொடர்புகொண்டு, பிரேதத்திற்கு எம்பார்மிங் செய்து ரயிலில் பிரேதம் கொண்டு செல்வதற்காக வடிவமைக்கப்பட்ட மரப்பெட்டியில் வைத்து தருவார்கள். கூட்ஸ் ரயிலில் கடைசியாக இருக்கும் கார்டு பெட்டி போல பிரேதங்களை கொண்டு செல்வதற்கென்றே சிறிய பெட்டிகள் பெரிய ரயில் நிலையங்களில் உள்ளன. அந்த பெட்டி ஒன்றில் பிரேதத்தையும், பிரேதத்துடன் செல்பவர்களையும் ஏற்றி அவர்கள் செல்ல வேண்டிய ஊருக்குப் போகும் ரயிலில் அந்தப் பெட்டியை இனைத்துவிடுவார்கள். அவர்கள் செல்லும் ஊருக்கு ரயில் சென்றடைந்ததும் ரயில்வே ஊழியர்கள் பிரேதத்தை கீழிறக்கி ஆம்புலன்சில் ஏற்றி இறந்தவரின் வீட்டிற்கு அனுப்பி வைத்துவிடுவார்கள். வடபாரதத்தில் பணிபுரியும் தமிழர்கள் யாரேனும் இறந்துவிட்டால் அவர்களின் உடலை இம்முறையில்தான் தமிழகம் அனுப்புகின்றார்கள். இதனை நேரடியாகவே நான் பார்த்திருக்கின்றேன். #🤔தெரிந்து கொள்வோம்