தேவதைகளெல்லாம்
வெள்ளை நிற ஆடையில்
சிறகு விரித்து
வானில் பறந்து வருமென்று
எங்கோ யாரோ
சொன்னதாக நினைவு...
என் தேவதையோ
நடந்தே வருகிறாள்...
என்னவள் அழகைக் கண்டு
வானத்து தேவதைகள் அத்தனையும்
பூமிக்கு இறங்கி வந்து
கடவுளிடம் சண்டையிட்டு நிற்கின்றன...
இனி
எங்களுக்கு வெண்ணிற
ஆடைகள் வேண்டாம்...
சீருடையாய்
இவள் அணிந்து வருகின்ற
நீல நிற சுடிதாரே போதுமென்று...!
S💓பிரபா #😁தமிழின் சிறப்பு#🧚நாட்டுப்புற கதைகள்📖#✍️தமிழ் மன்றம்#✍சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள்📝#💝இதயத்தின் துடிப்பு நீ