Epstein தொடர்பான ஆவணங்களில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் அடிபடுவது பற்றி பெரிதாக அதிர்ச்சி அடைய தேவையில்லை.
குறிப்பாக,
மோடி மற்றும் "சங்கப்பரிவார" கும்பலுக்கும் இஸ்ரேலிய சியோனிசவாதிகளுக்கும் இடையிலான நீண்டகாலத் தொடர்பு இப்போது உலகரங்கில் ஒரு புதிய கோணத்தில் விவாதிக்கப்படுகிறது.
வலதுசாரி அமைப்புகளும் சங்கிகளும் தங்களை எப்போதும் யூத சியோனி சவாதிகளின் (Zionists) ஆன்மீக மற்றும் அரசியல் சகோதரர்களாகவே கருதி வருகின்றனர்.
இஸ்ரேல் எப்படி பாலஸ்தீனத்தில் ஒரு குறிப்பிட்ட மத அடையாளத்தின் அடிப்படையில் தனது ஆதிக்கத்தைச் செலுத்துகிறதோ, அதையே இந்தியாவிலும் செயல்படுத்த வேண்டும் என்பது இவர்களின் நீண்டகாலக் கனவு.
இஸ்ரேல் எப்போது தாக்குதல் நடத்தினாலும், இந்தியாவில் உள்ள வலதுசாரி ஆதரவாளர்கள் உடனே களத்தில் இறங்கி இஸ்ரேலுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்வதை உலகம் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது.
இந்த ஆழமான சித்தாந்தப் பிணைப்பு இருக்கும்போது, இஸ்ரேலை மையமாகக் கொண்ட எப்ஸ்டீன் போன்றவர்களின் வலைப்பின்னலில் மோடியின் பெயர் இடம்பெற்றிருப்பது "சங்கி" ஆதரவாளர்களைத் தவிர வேறு யாருக்கும் ஆச்சரியத்தை அளிக்கவில்லை.
வெளியாகியுள்ள ஆவணங்களின்படி, எப்ஸ்டீன் எழுதிய அல்லது எப்ஸ்டீன் தொடர்பான மின்னஞ்சல்களில் ஒரு அதிர்ச்சிகரமான குறிப்பு உள்ளது.
2017-ஆம் ஆண்டு இஸ்ரேலுக்குப் பயணம் மேற்கொண்ட முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையைத் தேடிக்கொண்ட மோடி, அங்கு காட்டிய அதீத நெருக்கம் வெறும் தூதரக உறவு மட்டுமல்ல, அது ஒருவரை ஒருவர் திருப்திப்படுத்தும் ஒரு முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.
வெளியாகியுள்ள ஒரு மின்னஞ்சல் குறிப்பில், "இந்தியப் பிரதமர் மோடி, எப்ஸ்டீனின் ஆலோசனையைக் கேட்டு, அமெரிக்க அதிபரை (டிரம்ப்) மகிழ்விப்பதற்காக இஸ்ரேலில் ஆடிப் பாடினார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு நாட்டின் பிரதமர், பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கித் தற்கொலை ( கொலை?)செய்துகொண்ட ஒரு கிரிமினல் தரகரின் ஆவணங்களில் "ஆடிப்பாடினார்" என்று குறிப்பிடப்படுவது இந்தியாவிற்கு ஏற்பட்ட மிகப்பெரிய அவமானம்.
சியோனிசவாதிகளுடனான அதீத நெருக்கமும், அவர்களைத் தனது எஜமானர்களாகக் கருதும் போக்கும் இன்று மோடியை ஒரு சர்வதேசப் புரோக்கரின் கோப்புகளில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.
இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாட் மற்றும் அமெரிக்க வலதுசாரி அதிகார மையங்களுடன் தொடர்பில் இருந்த எப்ஸ்டீன், மோடியைப் பற்றி இப்படி ஒரு குறிப்பை எழுதியிருப்பது தற்செயலானது அல்ல.
இது சங்கிகளின் "யூதப் பாசம்" எவ்வளவு ஆபத்தானது மக்கள் அறிவார்கள்..
Mukinthan Thurairajasingam
Somasundaram
#👨மோடி அரசாங்கம்