#மார்ச்_6,
#மைக்கேல்ஏஞ்சலோ
இத்தாலிய நாட்டைச் சேர்ந்த ஓவியர், சிற்பி, கட்டிடக் கலைஞர், கவிஞர் என்று பன்முகத் தன்மைகொண்ட மைக்கேல் ஏஞ்சலோவின் பிறந்த நாள் (மார்ச்-6, 1475) இன்று.
16-ஆம் நூற்றாண்டில் மைக்கேல் ஏஞ்சலோ வரைந்த ஓவியங்கள் மேற்கத்திய கலை வரலாற்றில் ஒர் ஈடு இணையற்ற தாக்கத்தை ஏற்படுத்தியது. மைக்கலாஞ்சலோவின் நீண்ட கால வாழ்க்கையில், அவர் படைத்தவைகள் அனைத்தும் அவரது அதிசயிக்கத்தக்க திறமைக்குச் சான்றாக அமைகின்றன. மைக்கலாஞ்சலோவின் புகழ் பெற்ற படைப்புக்களான, பியேட்டா (Pietà), டேவிட் ஆகியவை 16ஆம் நூற்றாண்டின் இருபதுகளின் பிற்பகுதியிலும், முப்பதுகளின் ஆரம்பத்திலும் உருவாக்கப்பட்டவை. ஒவியம் தொடர்பாக இவருக்கு பெரிய பெயர் இல்லாதபோதும், மேற்கத்திய ஓவியக் கலைத் துறையில் பெரும் செல்வாக்குச் செலுத்திய இரண்டு ஓவியங்களையும் இவர் படைத்துள்ளார். இவை ரோம் நகரிலுள்ள சிசுடைன் சிற்றாலய உட்கூரையிலும் அதன் பீடத்தின் பின்னுள்ள சுவரில் வரையப்பட்டுள்ள "கடைசித் தீர்ப்பு" ஓவியங்களாகும். இவருடைய வாழ்வின் பிற்பகுதியில் வாடிகன் நகரின் புனித பேதுரு பேராலயத்தின் குவிமாடத்தை (dome) வடிவமைத்தார்.
#life #lifes