நினைவுகள்
❤️❤️❤️❤️
காதலிக்கும் நேரங்களில் காதலிக்க மறுத்தேன்
உன் அருமை புரியும் போது
என்னை அறியாமல் கண் கலங்கியது
பாசத்திற்கு ஏங்கித் தவிக்கும் பாவியானேன்
குணம் அறியாமல் ஒதுக்கி வைத்தேன்
தனிமையின் பிடியில் சிக்கித் தவிக்கிறேன்
என்னுடையப் பயணம் நினைவுகளில் தொடர்கிறது
முடிவில்லா தொடர்கதையாகி விடுமோ பயத்தில்
குணமறியாமல் அழகு பெரிதாக நினைத்திருந்தேன்
ஆயுள் தண்டனைக் கைதியானேன் நீயின்றி
உனைக் காணும் வரைக்கும்
நித்திரைகாணாது
வருவாயா மன்னிப்பாயா ஏற்றுக்கொள்வாயா கண்ணே
எம். அமுதா
#என் காதல் கவிதை