ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
721 views
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள தேத்தாக்குடி வடக்கு கிராமத்தை சேர்ந்தவர் பூங்குன்றன் (வயது 55). இவர் நாகை கீழ்வேளூர் ஒன்றியத்தில் உள்ள பள்ளியில் இடைநிலை ஆசிரியராக 10 ஆண்டுகளுக்கு மேலாக பணி செய்து வருகிறார். தனது 42வது வயதில் ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1-ல் தேர்ச்சி பெற்று பணிக்கு சேர்ந்தார். 86 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி இவரது மகன் ராகுல் (27) பி.இ, பி.எட். முடித்துள்ளார். இவர்கள் இருவரும் சமீபத்தில் நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2-ஐ எழுதி இருக்கின்றனர். நேற்று தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தந்தை, மகன் இருவரும் ஒரே நேரத்தில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தந்தை பூங்குன்றன் 85 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மகன் ராகுல் அவரை விட கூடுதலாக ஒரு மதிப்பெண் அதாவது 86 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். #🗞️பிப்ரவரி 1 முக்கிய தகவல் 📢 #💡போட்டித்தேர்வுக்கு தயாராகுதல் #📔நடப்பு நிகழ்வுகள்