இதுதான் சாத்தான் வேதம் ஓதறது
நாஜிகள் யூதர்களைக் கொன்றனர்.
அதைவிடக் கொடூரமானவர்கள் இந்துத்துவ ஜிகாதிகள், சனாதன பயங்கரவாதிகள்.
ஒரு ரயிலெரிப்பைச் சாக்காக வைத்து இவன்கள் 3000 இஸ்லாமியரைக் கொன்று குவித்தனர். அதில் ஏகப்பட்ட பெண்கள். அதில் பலர் கர்ப்பிணிகள், குழந்தைகள் !
இவர்கள் அவர்களைக் கொன்ற விதம் நாஜிகளின் வதைகளைக் காட்டிலும் கொடூரமான முறைகள்.
குழந்தைகளைத் தலைகீழாகப் பிடித்து இரு வேறு உடல்களாகக் கிழித்து போடுவது
கர்ப்பிணிகளின் அடிவயிற்றில் ஆயுதங்கொண்டு நுழைத்து கருவறுப்பது
மண்ணெண்ணெயை குடிக்கச் செய்து வாய்க்குள் வத்திக்குச்சியை கொளுத்தி வீசுவது
பழைய டயர்களை சேகரித்து காலத்துக்காக காத்திருப்பது. பொழுது கைகூடும் போது அதை அப்பாவிகளின் கழுத்தில் போட்டு உடலோடு கட்டி அப்படியே எரித்து அதைப் போகியெனக் கொண்டாடுவது (இதற்கு இராவணவதம் என்று பெயராம். டெல்லி சீக்கியர் படுகொலைகளைச் செய்த சங்கிகள் இந்த முறையில்தான் பல்லாயிரம் பேரைக் கொன்றனர்)
இவையாவும் கற்பனை அல்ல. பல ஆவணங்களில் வாசித்தது. இன்னும் பல பயங்கரங்களை எழுதக் கூட முடியாது.
நன்கு பழகிய அக்கம்பக்கத்து வீட்டு பெண்களைக் கூட கலவரச் சாக்கில் கூட்டு வன்கலவி செய்தவன்கள். அதிலொரு பயங்கரம் அப்பன் - மகன், மாமன் - மருமகன், அண்ணன் - தம்பி என்று அந்தக் கும்பலில் இருப்பான்கள். எந்த நெருடலுமின்றி, உறுத்தலுமின்றி அந்தக் கொடூரங்களை கூட்டாக இழைத்தனர் !
சிக்கி சிறைக்குப் போகும் போது தியாகிகளாக அவர்களை பல இலட்சம் பேர் பார்த்தனர்.
விடுதலையானபோது மாவீரர்களாக அவர்களைப் போற்றி வரவேற்றும் வாழ்த்தினர்.
குல்பர்க் சொசைட்டி என ஜெமினியிடமோ, க்ரூக்கிடமோ கேட்டுப் பாருங்கள். அந்தப் பயங்கரவாதிகளை காறி துப்பும் சாக்கில் நம்மைப் பார்த்தும் நக்கலாக, எப்படிடா அவன்க கூட வாழுறீங்க என்று கேட்கும் !
ஒரு மாநாடுக்கு திரண்டு வருவதைப் போல 20000 பேர், அகமதாபாத் நகரெங்குமிருந்து திரண்டு வந்து, முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் அந்தப் பகுதியில், தன் கைகளில் சிக்கியவர்களையெல்லாம் துண்டு துண்டாக வெட்டிப் போட்டது அந்த பெருங்கூட்டம்.
கற்பனை பண்ணிப் பாருங்கள். 20000 பேரும் பயங்கர கொலையாயுதங்களுடன் வந்திருக்க, அவர்களிடம் சிக்கியவர்கள் 300 பேர் கொண்ட சிறுபான்மையினர் கூட்டம். அதில் ஒரு முன்னாள் எம் பியுமிருந்தார். ஓர் எம் பியாலேயே அவர்களிடமிருந்து தப்பவியலாதச் சூழலில் அப்பாவிகள் எப்படி உயிர் பிழைப்பது ?
அரசு ஆவணத்தில் 69 பேர் மட்டுமே கொல்லப்பட்டதாக உள்ளது, ஆனால் காணாமல் போனவர்கள் பலர். இன்றுவரை அதில் பலர் கிட்டவில்லை. ஏனெனில் கொன்றதோடு நில்லாமல் அவர்களின் சொத்துக்களை சூறையாடினர், தீக்கிரையுமாக்கினர். அந்த நெருப்பில் உயிரோடும், கொன்றவர்களையும் விட்டெறிந்தனர். பின் எப்படி கொல்லப்பட்டவர்களின் சரியான கணக்கு கிட்டும் ?
ஸ்ரீகுமார் IPS எழுதிய ஆவண நூலில் இதுபோல பல உண்மைகள் உள்ளன. குல்பர்க் சொசைட்டி படுகொலைகள் நிகழாமிலிருக்க தன்னாலான பல முயற்சிகளை செய்தவர். சஞ்சீவ் IPS இப்படியான ஒரு பெருங் கலவரக் கும்பலிடமிருந்து பல நூறு உயிர்களைக் காத்தவர்.
இந்த இருவருக்கும் கிட்டிய சிறப்புப் பரிசு என்ன தெரியுமா ? பிணையே இல்லாத கடுங்காவல் சிறை.
வரும் சனிக்கிழமை(28/02/2002) அந்தக் கொடூரத்தின் 24 வது வருட நினைவு நாள்.
அந்தக் கொடூர இந்துத்துவ பயங்கரவாதிகளுக்கெல்லாம் அன்று தலைவனாக இருந்தவன்தான் இன்று நாஜிகளால் கொல்லப்பட்டவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறான். தலைப்பை திரும்ப படிச்சிட்டு வாங்க.
இயற்கை மிகக் கொடூரமாக இவனை மட்டுமல்ல, இவனுக்கு இப்போதும் முட்டுக் கொடுக்க ஓடிவரும் மூடன்களையும் தண்டிக்க வேண்டும். மிக விரைவில் அது ஈடேற வேண்டும் !!!
#GujaratRiots
#👨மோடி அரசாங்கம்