#சினிக்கூத்து மணிரத்தினத்திற்கு நிகராக வைக்க வேண்டியவர்... மலையாளி என்று ஒதுக்கி விட்டோமோ ??
.
Prathap pothen - இவரை நாம் நடிகனாக கொண்டாடிய அளவுக்கு ஒரு இயக்குனராக கவனிக்க மறந்து விட்டோம்
.
இவர் ஒரு மலையாளியாக இருந்தாலும் இவர் தமிழில் தான் அதிக படம் இயக்கியிருக்கிறார்
.
நான் சிறுவயதில் சீவலப்பேரி பாண்டி, லக்கி மேன் போன்ற படங்கள் இவர்தான் இயக்குனர் என்று தெரியாமல் TV யில் பார்த்தேன்..
.
என் பேஸ்புக் நண்பர் வெங்கடேஷ் மூர்த்தி... சத்யராஜ் நடித்த ஜீவா என்ற படத்தை... பார்க்க சொல்லி கேட்டார்... நானும் தட்டி கழித்துக் கொண்டே வந்தேன்.. மூன்று நாளுக்கு ஒரு முறை மெசேஜ் வந்துவிடும் அந்த படத்தை பார்த்தீர்களா என்று
.
அந்தப் படத்தை நான் பார்த்தே ஆக வேண்டும் என்று அடம் பிடித்தார் என்றே சொல்லலாம்...
.
அப்படி என்னதான் இந்த படத்துல இருக்குன்னு எடுத்து பார்த்தேன்
.
பார்த்த பிறகு தான் மிகவும் வருத்தப்பட்டேன் இந்த படத்தை இவ்வளவு நாள் எப்படி பார்க்காமல் விட்டோம் என்று
.
தமிழில் நாம் தலையில் தூக்கி கொண்டாட வேண்டிய ஒரு மிகப்பெரிய ரைட்டரை... ஒரு நேர்த்தியான மற்றும் stylish ஆன இயக்குனர் Prathap pothan னை ... தமிழ் சினிமா கொண்டாடாமல் விட்டுவிட்டது என்று அப்போது தான் தெரிந்தது
.
Jeeva (1988 ) - இந்த movie நீங்கள் இப்பொழுது எடுத்துப் பார்த்தாலும் சண்டைக் காட்சிகளைத் தவிர.. மற்ற எல்லா காட்சிகளும்.. இந்த இயக்குனர் இந்த வருடம் தான் இயக்கி இருக்கிறார்.. என்று நினைப்பீர்கள்..
அந்த அளவுக்கு எல்லா காலத்துக்கும் suit ஆகும் அளவுக்கு மேக்கிங் இருக்கும்
.
நீங்கள் ஒரு சில்க் ஸ்மிதா வெறியனாக இருந்தால்.. இந்த படம் உங்களுக்கு ஒரு மிகப்பெரிய விருந்து.. சில்க் ஸ்மிதாவை இந்த அளவு கவர்ச்சியாக காட்டியது.. வேறு எந்த படமும் இருக்காது என்றே தோன்றும்
.
லக்கி மேன் படத்தை எடுத்தவர் prathap pothen என்று எனக்கு தெரியும்.. அதனாலேயே... அப்பொழுது இருந்த கமர்சியல் டைரக்டர் என்று நானும் இவரை கவனிக்க மறந்து விட்டேன்
.
ஜீவா படத்தை பார்த்த பிறகு ரைட்டிங்கில் இவரை குருவாக ஏற்றுக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து விட்டேன்
.
எனக்கு தெரிந்து என்பது காலகட்டத்தில் ஒரு கதையின் ரைட்டிங்கில்... அதிகம் கவனம் செலுத்தியவர் இவர் தான் என்று எனக்குத் தோன்றுகிறது
.
எனக்கு மேக்கிங் பிடித்த அளவுக்கு இயக்குனர் மணிரத்தினத்திடம் ரைட்டிங்.. பிடிக்காது
.
ஆனால் மணிரத்தினம் இருந்த அதே காலகட்டத்தில்.. ஒருவர் மேக்கிங் மட்டும் ரைட்டிங்கில்... அன்று இருந்த இயக்குனர்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி... ஒரு அவார்டுக்கு அனுப்பினால் இந்த படத்தின் writing கை பாராட்டுவார்கள்... அதே நேரத்தில் நம் மக்களுக்கு பிடித்த கமர்சியல்.. கதையாகவும் பேலன்ஸ் செய்து...எடுக்கக்கூடிய பிரதாப் போத்தன் என்ற போதிதர்மர் அப்பவே வாழ்ந்திருக்கிறார் நாம் தான் அவரைக் கண்டு கொள்ளவில்லை என்று இப்போதுதான் தெரிகிறது😇😇
.
ஜீவாவின் கதை பார்த்தீர்கள் என்றால்.. ஒரு வேலை வெட்டி இல்லாத போட்டோகிராபர்.. அவருக்கென்று ஒரு அழகான குடும்பம் அம்மா தங்கச்சி.. தங்கச்சியை காதலிக்கும் இவரின் நண்பர்.. நிழல்கள் ரவி... கஷ்டமே படாமல் படத்தின் ஓபனிங்கிலேயே அமலா என்று அழகான காதலி
.
ஒரு வழியாக அமலா மூலம் இவருக்கு ஒரு போட்டோகிராபர் வேலை கிடைக்கிறது மாதம் 2500 ரூபாய் சம்பளம்... இதை வைத்து என் தங்கச்சியை கல்யாணம் செய்து கொடுப்பேன் கார் வாங்குவேன் என்று அவர் சொல்லும்போது இன்று பார்க்க சிரிப்பு வந்தாலும் அந்த காலகட்டத்தில் 2500 பெரிய சம்பளம் போல என்று நினைத்துக் கொண்டேன்
.
அந்த வேலை கிடைக்க காரணம் இவர் ரகசியமாக சில்க்கை எடுத்த ஒரு போட்டோ தான்.. வேலை கொடுத்தவர் நீ மீண்டும் போய் சில்க்கை சந்தித்து அவரை நம் கேலண்டர் போட்டோவுக்கு மாடலாக ஆக்க வேண்டும் என்று சொல்லி விடுகிறார் சத்யராஜ்ம் எப்படியோ கண்டுபிடித்து சில்க்கை மாடலாக போட்டோ போஸ் கொடுக்க சம்மதமும் வாங்கி வருகிறார்... ஆனால் சில்க் ஸ்மிதா ஏற்கனவே வில்லன் கேங்கால் ஒரு பிரச்சனையில் இருக்கிறார்.. சில்க் ஸ்மிதா இ***கும்பொழுது அவரிடம் இருந்த ஒரு டைரியை சத்யராஜின் addressற்கு அனுப்பி வைத்துவிட்டு இ**ந்து விடுகிறார்.. ஆனால் அது சத்யராஜ் அட்ரஸ்க்கு செல்லாமல் ஜனகராஜ் இடம் மாட்டிக் கொள்கிறது
.
அதற்குள் வில்லன் அந்த டைரி சத்யராஜிடம் தான் இருக்கிறது என்று நினைத்து.. அந்த டைரியை சத்யராஜிடம் இருந்து வாங்க வேண்டும் என்று அவன் அம்மா தங்கை என்று மனசை பதபதைக்கும் விஷயங்களை செய்கின்றனர்
.
அங்கு படம் விறுவிறுப்பாக சூடு பிடிக்கும் கிளைமாக்ஸ் வரை engage ஆக வைத்திருப்பார் இயக்குனர்
.
கிளைமாக்ஸ் இல் வில்லன் reveal காட்சிகள் எழுதப்பட்ட இடம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது
.
யாரும் மிஸ் பண்ண கூடாத ஒரு படம் யூ***பில் இருக்கிறது வி பி என் உபயோகித்து பார்த்துக் கொள்ளுங்கள்
.
இந்தப் படத்தில் பிரதாப் போத்தன் abrakadabra மந்திரம் என்ற ஒரு பாட்டில் cameo ரோல் செய்திருப்பார்
.
இந்தப் பாட்டில் தான் பிரபுதேவா முதன் முதலில் குழந்தை டான்ஸராக ஆடி இருப்பார்
.
ஆனால் prathap pothen னே.. தமிழ் சினிமாவில் தன்னை ஒதுக்குகிறார்கள் என்று ஒரு இன்டர்வியூவில் ஆதங்கப்பட்டு இருப்பார்
.
80ஸ் actors reunion ஒன்று நடந்தது அதில் பிரதாப் போத்தனக்கு அழைப்பே வரவில்லை அதை அவர் பேஸ்புக்கில் போட அது வைரலானது
.
இதேபோல் ஒரு இளையராஜா பங்ஷனில் இவரை பின் சீட்டில் உட்கார வைக்க இவர் கோபப்பட்டு எழுந்து சென்றது அப்பொழுது ஒரு பிரச்சினை ஆனது
.
ஆக மொத்தம் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்க வேண்டியவர்கள் யாரும் உச்சத்தில் இல்லை என்பது தெரிகிறது.Don't miss it Ever Green film.
#ரெங்கா! #renga-vamba! #காலை வணக்கம். வலைதளப் பதிவு இருந்து