AM. Basith Rahman sithayankottai
376.5K views
1 days ago
யா அல்லாஹ், மிக்க கருணையும் தாராளமும் எங்கள் மீது அன்பு உள்ளவனே! உனது கருனையின் மாதம் ரமலான் மாதம் புறப்படவிருக்கும் நிலையில், அது எங்கள் இதயத்திற்கு வெளிச்சம் தந்ததற்காகவும், நீ வழங்கிய மன்னிப்பிற்காகவும், உன்னை வணங்குவதற்கு நீ எங்களுக்குக் கொடுத்த பலத்திற்காகவும் நன்றி கூறுகிறோம். நாட்கள் கடந்தாலும் முயற்சிகளை பலகீனமாக ஆக்காதே யா அல்லாஹ், எங்கள் இதயத்தை நம்பிக்கையில் உறுதிப் படுத்துவாயாக, எங்கள் நாவை உனது நினைவால் ஈரமாக்குவாயாக, எங்கள் கைகள் தர்மத்தில் நிலைத்து இருக்க செய்வாயாக எங்கள் நோன்பு , எங்கள் பிரார்த்தனை, எங்கள் இஃதிகாஃப் மற்றும் எங்கள் மனந்திரும்புதலை ஏற்றுக்கொள். எங்கள் குறைகளை மன்னித்து, உனது கருணையால் அவற்றை மாற்றியருளும். வரும் ரமலானை நாங்கள் அதை மீண்டும் சந்திக்கும் வரை எங்களை உயிருடன் வைப்பாயாக, நாங்கள் அவ்வாறு செய்யாவிட்டால், தூய்மையான இதயத்துடனும் அமைதியான ஆத்மாவுடன் உன்னை சந்திப்போம். ஆமீன். #🌙ஈத் முபாரக்🤲 #🌜சந்த் முபாரக்💐 #🌙ஈத் கொண்டாட்டம்😍 #🌙ஈத் ஸ்டேட்டஸ்💐 #🕋ஜும்மா முபாரக்🤲