திருநீற்றுச் சுவடு
538 views
#🙏ஆன்மீகம் #காலை வணக்கம் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🔱🕉️சமயபுரம் மாரியம்மன் #🔱🕉️அம்மன் ஓம் சக்தி 🔱#📷 பக்தி படம் 🔱🕉️#🔱🕉️அம்மன் பக்தி ஸ்டேட்டஸ் #பக்தி மாதம் 19ம் நாள் 03-மார்ச்-26 செவ்வாய் கிழமை மங்கள வாரம் பௌர்ணமி பூர நக்ஷத்திர நாளில் மகாதேவன் பங்கிலுறை அம்பிகையை அம்பாள் நட்சத்திரமான பூரம் அன்று பௌர்ணமி வருவது மிகவும் விசேஷமானதால் . இன்றைய தினத்தில் விரதமிருந்து அம்பாளை வழிபட்டால் அனைத்து செலவங்களையும் பெற மாசில்லா பூரண பக்தி நிறைந்த மனதோடு போற்றி பாடி பூஜித்து வணங்கிடுவோம் வாரீர் புவனங்கள் யாவையும் ஆளுகின்ற புவனேஸ்வரி, புரமெரித்தோன் இடப் புறமிருக்கும் பரமேஸ்வரி நம்பினவர் கைவிளக்கே ஸர்வேஸ்வரி, என் கவலைகளைத் கணப்பொழுதில் தீர்த்துவிடும் காளீஸ்வரி பொன்னம்பலத்தில் குடியிருக்கும் சிவகாமி , சிற்றம்பலத்தில் நின்று ஆளும் மரகதவல்லி மீனாக்ஷி பக்தர்களின் பாபங்களை கரைத்திடும் கங்கை கரை அமர்ந்த விசாலாக்ஷி காஞ்சியில் அருளிடும் காமாக்ஷி தாயே, உன்னிடத்தில் சொல்லாமல் வேறு எந்தஉறவிடத்தில் முறையிடுவேன் என் அன்னை நீயிருக்க உலகில் மற்ற அன்னியரைக் கெஞ்சிடுதல் முறையில்லை அம்மா எனை காத்திருக்க வைக்காமல் என் கவலைகளை தீர்த்துவிட ஓடி வாம்மா கன்றுக்கு தாய் பசுதானே சொந்தம், முழுமைக்கும் நீ எந்தன் அன்னையன்றோ, என்றைக்கும் நான் உன் பிள்ளையன்றோ, பெற்ற அன்னைக்கே உபசாரம் செய்ய வேண்டுமோ அருள் செய்திட தாமதம் செய்வதேனோ என் நெஞ்சில் உன் திருநாமம் பொழியவேண்டும், நான் எழுதும் கவிதையிலே உன் நாமம் வாழ வேண்டும் நான் கற்றதெல்லாம் மேன் மேலும் பெருக வேண்டும், உனை பூரண பக்தியோடு நான் சதா துதிக்க வேண்டும் என் அம்பளவு விழியாலே உனை என்றும் அடிபணியும் ஆசைக்கோர் அளவுமில்லை என் இருகண்களுக்குள் உன் கருணைபொழியும் முக எழில் அடங்கவில்லை கும்பிட கைகளுக்கு சக்தி கொடு உன் சந்நிதி சுற்றிவர கால்களுக்கு சக்தி கொடு, உன்னருளை புகழ்ந்து போற்றி பாடிட என் நாவுக்கு சக்தி கொடு அன்னையே சரணம் 🌹🪷🌷