#innraya SINTHANAY சிந்தனை".* (11.03.2026)
---------------------------
*"விமர்சனம்...*
---------------------------
பெரும்பாலும் மற்றவர்களுடன் உறவை பாதிக்கக் கூடிய முக்கியமான செயலாக சில நேரங்களில் அமைந்து விடுவது என்னவென்றால் மற்றவர்களை மனம் நோகும்படி விமர்சனம் செய்வதால். ஒவ்வொரு மனிதருக்கும் சுய கெளரவம் இருக்கின்றது..
உங்களின் விமர்சனம் அவர்களின் சுயகெளரவத்தை எள்ளளவும் பாதிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.. கூடுமானவரை அவரின் சுய கெளவரத்தை உயர்த்தும் வகையிலும், நமது சொற்களும், விமர்சனமும் இருக்க வேண்டும்.. ஒருவேளை அவர் தவறு செய்து இருந்தால் மற்றவர்கள் முன்னிலையில் விமர்சனம் செய்வதைக் கூடுமானவரை தவிர்த்து விடுங்கள்.விமர்சனம் செய்வதை தனியாகவும், இரகசியமாகவும் வைத்துக் கொள்ளுங்கள்.. விமர்சனம் செய்தே ஆக வேண்டும் என்ற சூழல் ஏற்ப்பட்டால் அவர் செய்த தவறை மட்டும் விமர்சனம் செய்யுங்கள்..அவரின் மற்ற குணங்களை விமர்சனம் செய்யாதீர்கள்.
விமர்சனம் செய்வது அவரின் நன்மைக்கே என்று அவர் உணரும் வகையில் மென்மையாகவும்,
அன்பாகவும், பொருத்தமான வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து பேசுங்கள்..
*ஆம்..நண்பர்களே.* .ஒரு செயலைக் குறித்து பலமுறை விமர்சனம் செய்யாதீர்கள்.. ஏனெனில், மீண்டும், மீண்டும் ஒருவரின் தவறை சுட்டிக் கொண்டே இருந்தால் யாரும் விரும்ப மாட்டார்கள்.. மற்றும் அவர் உங்களை அவர் தவிர்க்க இது வாய்ப்பாக அமையலாம்.
(ஆக்கம்.உடுமலை சு.தண்டபாணி.....................)💐💐💐💐💐💐💐