innraya SINTHANAY

601 Posts • 98K views
saravanan
568 views 23 hours ago
#innraya SINTHANAY சிந்தனை.*.( 18.04.2026.) .................................................................. *" வெறுப்புணர்ச்சி வேண்டாம்''..* ........................................................ உலகில் உங்கள் எதிர்ப்படும் எல்லோரையும் நண்பர்களாக்கிக் கொள்ள விரும்புகிறீர்களா? அப்படியானால் வெறுப்பு எனும் கறுப்பு உணர்வை துடைத்து எறிய வேண்டும். அது முடியுமா?.. ஏன் முடியாது? . குழந்தைகளாக இருக்கும் போது அந்த நமக்கு உணர்வு இல்லையே.பெரிய ஆளாக வளர வளரத்தானே வெறுப்பு உணர்வும் வேர் விட்டு படர்ந்து விருட்சமாக இன்று வளர்ந்து இருக்கிறது.. வெறுப்பு என்ற விரும்பத்தகாத ஒரு குணத்தை மட்டும் நீங்கள் கைவிட்டுப் பாருங்கள். உலகில் உள்ள அனைவருமே உங்களுக்கு நண்பர்களாகத் தான் இருப்பார்கள். குழந்தைகளாக இருக்கும் போது மனதில் துளிர் விடாத வெறுப்பு, சூழ்நிலையின் தாக்கத்தாலும், உடன் பழகுபவர்களாலும் வளர்ப்பாலும் நம் மனதில் மெல்லக் குடி புகுகிறது. விளைவு? பக்கத்து வீட்டுக்காரரிடம் இருந்து, பக்கத்து நாடு வரை நமது வெறுப்பைக் காட்டுகின்றோம். இந்த வெறுப்பு உணர்வால் நமக்குக் கிடைப்பது ஒன்றும் இல்லை. நண்பர்களின் வழி காட்டல், உறவினர்களின் உதவி, பெற்றோர்களின் பாசம், ஆகியவற்றை இழப்பது தான் மிச்சம். கடைசியில் நாம் தனிமரமாக நிற்க வேண்டியது தான். உங்கள் மனதிற்குள் வெறுப்புணர்வு நுழைந்து விட்டால் அவ்வளவு தான். அனைவருமே உங்களுக்கு எதிரியாகத் தோன்றுவார்கள். சரி.இந்த வெறுப்புணர்ச்சியை ஒழிக்க நாம் என்ன செய்ய வேண்டும்..? உங்களுடன் பழகுவோரிடம் பொறுமையையும், அன்பையும் காட்ட வேண்டும். இனம், நிறம், சாதி, மதம், பொருளாதாரக் காரணிகளால் வெறுக்கப்பட்டு ஒதுக்கப்பட்டு இருக்கும் மக்களிடம் நாம் அன்பு காட்ட வேண்டும்.- அவர்களுக்கு ஆதரவான, ஆறுதலான வார்த்தைகளை வழங்க வேண்டும். நம்முடன் பழகுவோரிடமும் இந்த வெறுப்புக் காரணிகளைக் வெளிக்காட்டக் கூடாது. வெறுப்புணர்வால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெறும் ஆதரவு மட்டுமே அளிப்பது போதாது. வெறுப்புணர்வுடன் குறுகிய மனப்பான்மையுடன் அலைபவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரச்சாரம் செய்ய வேண்டும். வெறுப்புணர்வு எங்கு உள்ளது. எப்படி, எதனால் உருவாகிறது என்பதைக் கண்டறிய வேண்டும். *ஆம்.,நண்பர்களே..,* முதலில் நாம் நம்மை சோதித்துக் கொள்வோம்.. தவறான, முழு விவரம் தெரிந்து கொள்ளாமல் மற்றவர்கள் மீது வரும் எண்ணங்களே வெறுப்பு உணர்வுக்கு அடிப்படை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்தப் பழக்கத்தை உங்கள் மனதில் தொடர்ந்து நிலை நிறுத்தினால், நாளடைவில் உங்கள் வெறுப்பு உணர்வு ஒழிந்து அன்பு மலரும்... (உடுமலை சு.தண்டபாணி...)💐💐💐
11 likes
12 shares
saravanan
457 views 1 days ago
#innraya SINTHANAY 𝐓𝐇𝐎𝐔𝐆𝐇𝐓 𝐎𝐅 𝐓𝐇𝐄 𝐃𝐀𝐘 The struggles you face today 🌧️ Are shaping the strength you’ll carry tomorrow 💎 Embrace every challenge with courage 💪 Trust the journey and stay persistent ⏳ Victory belongs to those who never quit 🔥 Your mindset is the foundation of achievement 🧠 Nurture it with positivity and discipline 🌿 Let resilience guide your journey 🌊 Stay focused on your goals 🎯 And success will naturally follow 🔥 🍂𝐆𝐎𝐎𝐃 𝐓𝐈𝐌𝐄𝐒 🍂 🍀💥🍀💥🍀💥🍀💥🍀💥🍀💥
15 likes
11 shares
saravanan
456 views 16 days ago
#innraya SINTHANAY சிந்தனை. ''பாராட்டுங்கள்...!'' எப்பொழுதும் எல்லோரும் விரும்பும் ஒரு செயல் எதுவென்றால் மற்றவர்கள் தன்மைப் பாராட்டுவது தான். ஆனால்!, அவர் உயிரோடு இருக்கும் பொழுது அவரைப் புகழ மறுப்பவர்கள், அவரது பிரிவிற்கு பின் புகழ்ந்து பேசுகிறார்கள். அதனால் தான் உயிரோடு இருக்கும் பொழுது பலருடைய அருமை தெரியாமலேயே போய் விடுகிறது... *ஒருவருடைய உன்னதமான செயலை அவர் வாழும் காலத்திலேயே பாராட்ட வேண்டும்... நம் அருகில் கூட சாதனையாளர்கள் இருக்கலாம். அவரை இனம் கண்டு கொண்டு பாராட்ட வேண்டும். பாராட்டுவதற்கு ஒருபோதும் தயக்கம் காட்டக் கூடாது...! நாம் அனைவரும் பாராட்டிற்காக ஏங்குகிறோம். இதில் யாரும் விதிவிலக்குகள் இல்லை. அடுத்தவரைப் பாராட்டினால், நமது மதிப்பு குறைந்து விடும் என்று நாம் தவறாக நம்புகிறோம். அல்லது பாராட்டுவதால் தலைக்கனம் அதிகமாகி விடும் என்று தவறாக நினைக்கிறோம்... சமுதாயத்திற்கு நற்செயலை செய்தவரை உடனே பலர் முன்னிலையில் பாராட்ட வேண்டும். அதுவும் காலம் தாழ்த்தாமல் பாராட்டி விட வேண்டும்... 😊😊😊
13 likes
12 shares