innraya SINTHANAY
579 Posts • 84K views
saravanan.
554 views
#innraya SINTHANAY 🙏🏻 💐💐🌹🌹 *இன்றைய சிந்தனை (29.01.2026)* ....................................................................... *''கிடைக்கும் வாய்ப்பை...!"* ............................................................. எல்லோருக்கும் எல்லாம் அதற்கு உண்டான வயதில் கிடைப்பது அரிது. ஆனால்!, அவர்கள் வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் முன்னுக்கு வந்தவர்கள்... ஒபாமா தனது நாற்பத்து நான்காவது வயதில் அமெரிக்காவின் அதிபர் ஆனார். ஆனால்!, டொனால்ட் டிரம்ப் தனது எழுபதாவது வயதில்தான் அதிபர் ஆகிறார்... பில்கேட்ஸ் தனது முப்பதுகளிலேயே உலகின் பெரிய செல்வந்தரானார். ஆனால்!, நிறுவனத்தை தனது ஐம்பதாவது வயதில்தான் தொடங்கி அமான்சியோ ஓர்டேகா எண்பது வயதில்தான் உலகின் இரண்டாவது பெரிய செல்வந்தரானார்... ஒருவருக்கு அவர் விரும்பிய வேலை வாய்ப்பு தானாகவே தேடி வருகிறது. இன்னொருவருக்கோ எல்லா திறமைகள் இருந்தும் சரியான வேலையோ அல்லது தொழிலோ அமைவது இல்லை... இருபத்தி இரண்டு வயதில் தனது வியாபாரம் தொழிலில் செல்வந்தரான ஒருவர் நாற்பது வயதில் எல்லாம் இழந்து ஏழ்மை ஆகிறார். ஒருவர் நாற்பது வயது வரை தன் தொழில் வியாபாரத்தில் அனைத்து விரயங்களை அனுபவித்து ஐம்பதாவது வயதில் செல்வந்தராகிறார்... சர்ச்சில் தனது எண்பத்து இரண்டாவது வயதில் 'History of English Speaking People' என்ற புத்தகத்தை எழுதினார். பெர்னாட்ஷா தனது தொண்ணுற்று மூன்றாவது வயதில் 'Pertouched Pepler' என்ற நாவலை எழுதினார். டால்ஸ்டாய் தனது எண்பத்து இரண்டாவது வயதில் ''I Cannot Be Silent'' என்றார். வில்லியம் ஷேக்ஸ்பியர் தனது ஐம்பதாவது வயதை தாண்டிய பிறகே முப்பத்து ஏழு நாடகங்களை இயற்றினார்... *ஆம் நண்பர்களே...!* 🟡 *உங்களுக்கு ஒன்று கிடைத்துவிட்டால் அது கிடைக்காமல் போராடும் மற்றவரை ஏளனம் செய்யாதீர்கள். உங்களை மற்றவரோடு ஒப்பிட்டு உங்களிடம் இல்லாததை நினைத்து புலம்பாதீர்கள். யார் கண்டது...?அடுத்த நொடி நமக்கு என்ன நடக்கும் என்று,..!* 🔴 *இந்த உலகமே ஒரு பெரிய விபத்தால் உருவானது தான். எனவே எதிர்காலத்தில் நடக்க விருப்பதை எல்லாம் கட்டுப்படுத்த நினைப்பது இயலாது. இங்கே இப்போது இந்த நொடியில் என்ன செய்து கொண்டு இருக்கிறீர்களோ!, அதை முழுமையாக விழிப்புணர்வுடன் செய்யுங்கள்...!!* ⚫ *அடுத்த நொடி உறுதியாக அழகாய் மலரும். தேவைகளை உறுதியாக நிறைவு செய்துகொள்ள முடியும். வாழ்க்கை என்பது வாய்ப்புகளால் நிரம்பியது, நாம் பயன்படுத்தும் வாய்ப்பை பொறுத்தே நம் வாழ்க்கை அமையும், இதைப் புரிந்து கொண்டவர்கள் மட்டுமே மகிழ்வாக வாழ்கிறார்கள்...!!!* *- உடுமலை சு. தண்டபாணி*✒️ 🌹🌹💐💐 🙏🏻 💐💐🌹🌹
5 likes
9 shares
saravanan.
554 views
#innraya SINTHANAY 🙏🏻 💐💐🌹🌹 *இன்றைய சிந்தனை (28.01.2026)* ....................................................................... *''கவலை...! கவலை...!! கவலை...!!!"* ........................................................................... மனிதர்கள் அனைவரையும் ஆட்கொண்டுள்ள நோய் “கவலை". இங்கு இருக்ககூடிய மனிதர்களில் கவலை இல்லாத மனிதர்கள் எவரேனும் உண்டா...? எல்லா மனிதர்களுமே ஏதோ ஒரு வகையில் கவலையில் மூழ்கிக் கொண்டுதான் இருக்கிறோம். தாயின் கருவறையில் இருந்து கல்லறைக்கு சென்ற பின்பும் கூட மனிதனின் கவலைகள் ஓய்ந்தபாடில்லை... உதாரணமாக: பிறந்த குழந்தைக்கு தாய்ப்பாலும், தாயின் அரவனைப்பும் கிடைக்குமா...? கிடைக்காதா...? என்ற கவலை... பள்ளி செல்லும் குழந்தைக்கு ஆசிரியரின் அரவணைப்பும், பெற்றோர்களின் பாசமும் கிடைக்குமா...? கிடைக்காதா...? என்ற கவலை... இளைஞர்களுக்கு உடல் அளவிலும், மனதளவிலும், ஆயிரக்கணக்கான கவலைகள்... நன்கு படித்து நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும், இப்படி பல. நன்கு படித்து தேர்விலே நல்ல மதிப்பெண் பெற்றவருக்கு நல்ல கல்லூரியில் இடம் கிடைக்குமா...? கிடைக்காதா...? என்ற கவலை... தேர்விலே தோல்வி அடைந்தவருக்கு ஏன் இந்த உலகத்தில் வேண்டும், தன்னுடைய எதிர்காலம் எப்படி இருக்கபோகும் என்ற கவலை... கல்லூரியில் படித்து நல்ல மதிப்பெண் பெற்றவருக்கு நல்ல வேலை கிடைக்குமா...? கிடைக்காதா...? என்ற கவலை... வேலை கிடைத்தவர்களுக்கு நல்ல ஊதியம் கிடைக்குமா...? கிடைக்காதா...? என்ற கவலை... நல்ல ஊதியம் கிடைத்தவர்களுக்கு தன்னுடைய பணத்தை எப்படி பத்திரமாக சேமித்து வைப்பது என்ற கவலை... திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்குமா...? கிடைக்காதா...? என்ற கவலை... வயது முதிர்ந்தவர்களுக்கு தன்னுடைய பிள்ளைகள் தங்களை இந்த முதிர்ந்த வயதில் கவனித்துக் கொள்வார்களா...? மாட்டார்களா...? என்ற கவலை... இப்படியாக கருவரை முதல் கல்லறைக்கு பின்னும் மனிதனின் கவலை நீண்டு கொண்டே செல்கிறது. ஆக!, ஏதோ ஒரு வகையில் நாம் அனைவரும் கவலையுற்றுதான் இருக்கிறோம்... *ஆம் நண்பர்களே...!* 🟡 *ஒவ்வொரு விநாடியும் வாழ்க்கை நம்மை விட்டு நழுவிக் கொண்டிருக்கின்றது. ஒரு நொடிப் பொழுதினில் முப்பது கிலோமீட்டர் வேகத்தில் அது பறந்து கொண்டிருக்கின்றது...!* 🔴 *எதுவும் நம் கையில் நிற்பதுமில்லை. இன்றைக்கு என்பது மட்டும்தான் நமது பிடியில் சிக்கிக் கொண்டுள்ளது. அதைப் பயன்படுத்திக்கொண்டு, கவலையில்லாமல் வாழப் பழகிக்கொள்ள வேண்டும்...!!* ⚫ *கவலையுறுமாறு ஏதேனும் நடந்துவிட்டால், உடனே அந்தக் கவலையை எதிர்த்து நின்று வெற்றிகொள்ள தம்மைத் தயாராக்குபவரே அறிவாளி. நடந்து விட்டதை முதலில் நாம் ஏற்றுக் கொண்டாக வேண்டும். அப்பொழுதுதான் நடக்க வேண்டியதை தீர்மானித்துக் கொள்ளலாம்...!!!* *- உடுமலை சு. தண்டபாணி*✒️ 🌹🌹💐💐 🙏🏻 💐💐🌹🌹
12 likes
10 shares
saravanan.
547 views
#innraya SINTHANAY 🙏🏻 💐💐🌹🌹 *இன்றைய சிந்தனை (22.01.2026)* ……………………………………………............................... *‘’நல்லவர்களோடு இணைந்து...!"* ……………………………………………............................. "எனக்கு அதிகமாக தேவைப்படுபவர் யாரென்றால்!, என்னால் இயன்றதைச் செய்யுமாறு தூண்டும் மனிதர்கள்!” என்றார் அமெரிக்க அறிஞர் எமர்சன்... நம்மைச் சுற்றியும் எத்தனை மனிதர்கள்...! சிறுவர்கள், இளைஞர்கள், நடுத்தர வயதுடையவர்கள், முதியவர்கள, என்று எத்தனை மனிதர்கள்!, இவர்களுக்கு தங்கள் குறிக்கோள் எதுவென்று தெரியவில்லை. அதற்கான விழிப்புணர்வும் இல்லை... அதனால்தான்!,அவர்களின் அளவிட முடியாத ஆற்றல்கள் உறங்கிக் கிடக்கின்றன... நடுவயதைக் கடந்த எத்தனையோ நபர்கள், அதன் பிறகு பேரறிஞர்களாக., தொழில் வல்லுநர்களாக வளர்ந்ததை வரலாறுகள் கூறுகின்றன... அதற்கு உந்துகோலாக இருந்தது எது...? அது ஒரு சொற்பொழிவாக இருக்கலாம். ஒரு நூலாக இருக்கலாம், அல்லது ஒரு நண்பரின் தனிப்பட்ட அறிவுரையாகவும் இருக்கலாம்... ஐம்பதாயிரம் குழந்தைகளை முப்பது ஆண்டுகள் ஆராய்ச்சி செய்த வல்லுநர்களின் முடிவு என்ன வென்றால்.., பிறந்த குடும்பம் - கோத்திரத்தை விட., சூழ்நிலைகளும், சுற்றுச் சார்புகளும் திறன்மிக்கவை. இவைகளே குழந்தைகளை அதிகமாக பாதிப்படைய வைக்கிறது... தோல்வி அடைந்தவர்களை பேட்டி எடுக்கும் வாய்ப்பு கிடைத்தால்!, அவர்கள் பெரும்பாலோரின் தோல்விக்குக் காரணம் அவர்களை ஊக்குவிக்க யாரும் இல்லாததே காரணம் என்று அறிய முடியும்... அதனால்!, உங்களை ஊக்குவிக்கும் உங்களின் திறமைகளை வெளிப்படுத்தும் சூழ்நிலைகளுக்கே எப்போதும் ஆயத்தமாக இருங்கள். உங்களை அறிந்து உங்களுக்கு உதவி செய்யும்... நீங்கள் முழு மனிதர்களாக மாற, உற்சாகமூட்டும் மனிதர்களுடன் நெருங்கிய உறவை வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் பதிவுகளை உங்களுக்குப் பிறகும் இந்த மண்ணுலகில் விட்டுச் செல்ல உதவுபவர்களோடு தொடர்பு கொள்ளுங்கள்... *ஆம் நண்பர்களே...!"* 🟡 *ஆர்வமானது தொற்றுநோயைப் போன்றது, நீங்களும் முன்னேறத் துடிப்போருடன் இருக்கும் காலம் வரை அந்தப் பண்புகளால் ஈர்க்கப்படுவீர்கள். உங்களுக்கு சோம்பல் ஏற்படும் போதேல்லாம் முன்னேறிச் செல்பவர்களின் சுறுசுறுப்பு உங்களையும் தூண்டிவிடும்....!* 🔴 *வாழ்க்கையில் முன்னேற துடிப்பவர்களுக்கான உரைகள் இதுதான், ஒவ்வொருவரும் தத்தமது பணிகளின் மேல் கொள்ளும் கொழுந்து விட்டெரியும் ஆவல்தான்!, உச்சியை அடைய நினைத்தால் ஏறித்தான் ஆகவேண்டும். கால்கள் வலிக்கும் களைப்பாகும். இதெல்லாம் உங்களுக்கு சாத்தியமில்லை என்று மனம் அச்சுறுத்திப் பார்க்கும்...!!* ⚫ *'ஒய்வெடுத்துக்கொள் என்று சபலம் காட்டும்' தளராதீர்கள்...!, செய்வதை முழுமையாக விருப்பத்துடன் செய்தால், எந்த வலியும் வேதனை தராது. உச்சியை அடைந்ததும் அத்தனை களைப்பும் நலமாகும்...!!!* *- உடுமலை சு. தண்டபாணி*✒️ 🌹🌹💐💐 🙏🏻 💐💐🌹🌹
13 likes
16 shares