innraya SINTHANAY

588 Posts • 117K views
saravanan.
559 views 14 hours ago
#innraya SINTHANAY 🙏🏻 🌺🌺🌺 *இன்றைய சிந்தனை* ( 10.08.2026 ) ................................................... *குறள் சொல்லும் நீதி...!* …………………………………............ குறள் 423: *( உண்மை தெரியாமல் நம்பாதீர்கள்...!)* .................................................... எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு. விளக்கம்... ....................... எந்தவொரு பொருள் குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல், உண்மை எது...? என்பதை ஆராய்ந்து தெளிவது தான் அறிவுடைமையாகும்... ஆம்.!, கருத்துக் கூறுவோர் எவராக இருந்தாலும், அவர் மீது கொண்ட பற்றின் காரணமாகவோ, மதிப்பின் காரணமாகவோ, புகழ் பெற்றவர், செல்வாக்கு கொண்டவர், உயர்நிலையில் இருப்போர் என்பதற்காகவோ அவர் சொல்வதை எல்லாம் அப்படியே ஏற்கக் கூடாது... நெருங்கிய நண்பராயிருப்பவர் ஒருவர், தாழ்ந்த பொருளைக் கூறினும், நட்பு கருதி அதை ஏற்கக் கூடாது... அதுபோல் பகைவரேயானாலும் சிறப்பான உயர்ந்த பொருளைக் கூறின், அவர்களிடம் உள்ள வெறுப்பால், அதைத் தள்ளி விடாது ஏற்க வேண்டும்...! சொல்பவர் தரம் நோக்காது உண்மைத் தன்மையை உணர வேண்டும்...! எத்தகைய செய்தியாக இருந்தாலும், அதனை யார் சொல்லி இருந்தாலும், அதை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் அல்லது இகழ்ந்து தள்ளாமல், அதன் உண்மைப் பொருளை ஆராய்வதே அறிவாகும்... உலகத்தில் ஒட்டி வாழ்ந்தாலும் உண்மைத் தன்மையுடன் இருப்பதே அறிவு...! *ஆம் நண்பர்களே...!* நூலறிவாலும் கேள்வியறிவாலும் பெற்றதை நுணுகிப் பார்த்து உண்மையை அல்லது சரியானது எது என்று பகுத்து அறிந்து கொள்ள வேண்டும்...! எவரையும் எல்லாம் அறிந்தவராகக் கருதி அவர் சொல்வனவற்றிற்கெல்லாம் அடிமையாகாமல், அவர் கூறும் ஒவ்வொரு கருத்தையும் சீர்தூக்கிப் பார்த்து மெய்ப்பொருள் காண வேண்டும்...!! -உடுமலை சு. தண்டபாணி ✒️ 💐💐💐🌺🌺🌺 🙏🏻 🌺🌺🌺
11 likes
19 shares
saravanan.
738 views 3 days ago
#innraya SINTHANAY *இன்றைய சிந்தனை* ( 07.08.2026 ) ............................................................ *குறள் சொல்லும் நீதி...! ( ''அடக்கம்'')* ………………………………….................................. குறள் 121: .................... அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும். விளக்கம்... ..................... அடக்கம் அழியாத புகழைக் கொடுக்கும். அடங்காமை வாழ்வையே இருளாக்கி விடும். அடக்கம் என்பதை ஒரு ஒழுக்கமாக நம் முன்னவர்கள் கருதியிருக்கிறார்கள்... மனம் அடங்கினால் சிந்தனை ஒன்று படும். சிதறாத சிந்தனை அறிவை வளர்க்க உதவி செய்யும். அலைபாயாத மனம் இருந்தால் ஆசை தறிகெட்டு ஓடாது...! சொல்லாடலில் அடக்கம். தேவையற்ற பேச்சுக்கள் , புரட்டு, பொய், என்று சொற்குற்றங்கள் விலகிப் போகும். பேச்சில் அடக்கம் இருந்தால் கட்டுப்பாடு அற்று ஓடும் புலன்களை அடக்கினால் வாழ்வில் பல சிக்கல்கள் தவிர்க்கப்படும்... அளவுக்கு அதிகமான கொழுத்த உணவுகள், கட்டுபாடற்ற பணத்தாசை இவை எல்லாம் மனிதனை வீழ்த்தும்... புலன் அடக்கம் இருந்தால் வாழ்வில் வெற்றிகள் வந்து சேரும். சேர்ந்த வெற்றிகள் நிலைக்கும்.. அடக்கம் என்ற ஒரு குணம் அமைந்து விட்டால், ஓடுகின்ற ஆற்றில் மரக்கட்டையை எறிந்தால் அந்த ஆறு கட்டையை கடலில் கொண்டு சேர்த்து விடும். கட்டை ஒண்ணும் செய்ய வேண்டாம். அந்த ஆற்றில் கிடந்தால் போதும்... மிகுந்த கூட்ட நெரிசல் உள்ள ஒரு புகைவண்டி நிலையத்தில், வண்டியை விட்டு இறங்கினால், அந்தக் கூட்டமே நம்மை வாசல் வரை கொண்டு சேர்த்து விடும்... ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்குப் போக வேண்டும் என்றால், சரியான வண்டியில் ஏறி அமர்ந்து விட்டால் போதும், அந்த வண்டி நம்மை சேர வேண்டிய இடத்தில் சேர்த்து விடும்... ஆனால்!, அடக்கமின்மை இருளுள் தள்ளி விடும். எங்கே இருக்கிறோம் என்று தெரியாது, என்ன இருக்கிறது என்று தெரியாது, எங்கே போகிறோம் என்றும் தெரியாது. கண் தெரியாத இருட்டு... புலன் அடக்கம் இல்லாதவரைப் பார்த்தால் தெரியும் , ஏதோ கண் தெரியாதவரைப் போல தவறான பாதையில் அவர்கள் செல்வது தெரியும்... இருட்டில் இருப்பவருக்கு பக்கத்தில் என்ன இருக்கிறது என்று தெரியாது... அழகான மனைவி, அன்பான பிள்ளைகள், சொத்து சுகம் இவற்றையெல்லாம் கவனிக்காமல், வேறொன்றின் பின் செல்வார்கள், அருகில் உள்ளது அவர்களுக்குத் தெரியாது... மருத்துவர் சொல்லி இருப்பார் புகை பிடிக்கக் கூடாது, மது அருந்தக் கூடாது என்று.., ஆனால்!, கேட்காமல் நேரே அந்தக் கடைக்குத் தான் அவர்கள் செல்வார்கள்... புலன் அடக்கம் இல்லாதவர் கண்டதின் பின் சென்று உடல் நலத்தையும் அழித்து, சொத்தையும் அழித்து, சுற்றத்தையும் இழப்பார்கள்... நன்கு ஆலோசித்துப் பாருங்கள், ''அடக்கம் எவ்வளவு உயர்ந்தது'' என்று. ''அடக்கமின்மை'' எத்தனை துன்பங்களுக்கு காரணம் என்று... *ஆம் நண்பர்களே...!* அடக்கம் உயர்வு தரும்; அதுவே வெற்றிக்கு வழி...! அடங்காமை துன்பத்தில் ஆழ்த்தி விடும்...!! தன் நிறை, குறைகளை அறிந்தவர்கள் அடக்கத்தில் சிறந்தவர்களாக இருப்பார்கள்...!!! சான்றோரின் உயர்பண்பு என்பது அடக்கம் தான், அடங்காமை அல்ல... -உடுமலை சு. தண்டபாணி✒️ 💐💐💐🙏🏻🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
7 likes
6 shares
saravanan.
486 views 7 days ago
#innraya SINTHANAY *இன்றைய சிந்தனை* ( 03.08.2026 ) ...................................................... *''அனைத்து சிக்கல்களுக்கும் தீர்வு உண்டு...!"* .......................................................... நமக்கு ஏற்பட்ட சிக்கல்களின் ஆரம்பமான இடத்தை விட்டு பல நேரங்களில் நாம் தீர்வுகளைத் எங்கோ தேடுகின்றோம்... ஆம்.!, சிக்கல்களுக்கான தீர்வை நம்மிடம் தேடுவதை விடுத்து வெளியில் தேடுகின்றோம். நாம் என்ன தவறு செய்தோம்...? எதனால் இந்த சிக்கல்கள் நேர்ந்தது...? என்று சிந்தித்து தெளிவு பெறுவதில்லை... சரி.!, நாம் தான் சிக்கல்களுக்கு கட்டியங்காரனாக இருந்து விட்டோம், சிக்கல்கள் நேர்ந்தவுடன் அதை உறுதியாக எதிர்கொள்கிறோமா...? - என்றால் அதுவும் இல்லை...! (கட்டியங்காரன் - சூத்திரதாரி) ஆனால்!, எல்லாவற்றுக்கும் தீர்வு ஒன்று இருக்கிறது, மாற்று வழிகள் பல உண்டு’ என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். தீர்வு இல்லாத சிக்கல் என்று எதுவுமில்லை... காலம் எதற்காகவும் எவருக்காகவும் காத்திருப்பது இல்லை. வாழ்க்கை ஒரு வட்டம் போல் முடிந்த இடத்தில் தொடருவதும் இல்லை... அச்சம், கவலை, வெறுப்பு, போன்ற குப்பைகளை நம் மன வீட்டிலிருந்து தூக்கி எறியாவிட்டால் வாழ்க்கை நிறைவு பெறாது... *ஆம் நண்பர்களே...!* எல்லா பூட்டுகளுக்கும் சாவி உண்டு, அனைத்து சிக்கல்களுக்கும் தீர்வு உண்டு...! வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படுவது இயற்கையே. அதைக் கண்டு அஞ்சுவது அறிவுடைமை ஆகாது, அவற்றை எதிர்கொள்வதே சிறந்தது...! கவலையுறுவதால் மட்டுமே சிக்கல்களில் இருந்து விலக முடியாது, இன்னும் கூற வேண்டுமானால், கவலையுறும் பொழுது சிக்கல்கள் இன்னும் பெரிதாகி விடும்... தீர்க்கவியலாத துன்பம் வாழ்க்கையில் ஏதுமில்லை, ஆனால் அவற்றைத் தீர்க்க வழிமுறைகளை அறியாமல் தான் நாம் துன்பத்தைக் கண்டு அஞ்சுகிறோம்... திறக்க முடியாத பூட்டுகள் ஏதுமில்லை, அதற்கான சாவியைத் தேடிப்பிடித்தால் போதும்...! -உடுமலை சு. தண்டபாணி✒️ 🌹🌹🌹🙏🏻🌺🌺🌺🌺🌺🌺🌺
11 likes
15 shares