innraya SINTHANAY

639 Posts • 98K views
saravanan
454 views 11 days ago
#innraya SINTHANAY சிந்தனை. ''பாராட்டுங்கள்...!'' எப்பொழுதும் எல்லோரும் விரும்பும் ஒரு செயல் எதுவென்றால் மற்றவர்கள் தன்மைப் பாராட்டுவது தான். ஆனால்!, அவர் உயிரோடு இருக்கும் பொழுது அவரைப் புகழ மறுப்பவர்கள், அவரது பிரிவிற்கு பின் புகழ்ந்து பேசுகிறார்கள். அதனால் தான் உயிரோடு இருக்கும் பொழுது பலருடைய அருமை தெரியாமலேயே போய் விடுகிறது... *ஒருவருடைய உன்னதமான செயலை அவர் வாழும் காலத்திலேயே பாராட்ட வேண்டும்... நம் அருகில் கூட சாதனையாளர்கள் இருக்கலாம். அவரை இனம் கண்டு கொண்டு பாராட்ட வேண்டும். பாராட்டுவதற்கு ஒருபோதும் தயக்கம் காட்டக் கூடாது...! நாம் அனைவரும் பாராட்டிற்காக ஏங்குகிறோம். இதில் யாரும் விதிவிலக்குகள் இல்லை. அடுத்தவரைப் பாராட்டினால், நமது மதிப்பு குறைந்து விடும் என்று நாம் தவறாக நம்புகிறோம். அல்லது பாராட்டுவதால் தலைக்கனம் அதிகமாகி விடும் என்று தவறாக நினைக்கிறோம்... சமுதாயத்திற்கு நற்செயலை செய்தவரை உடனே பலர் முன்னிலையில் பாராட்ட வேண்டும். அதுவும் காலம் தாழ்த்தாமல் பாராட்டி விட வேண்டும்... 😊😊😊
13 likes
12 shares
saravanan
543 views 11 days ago
#innraya SINTHANAY சிந்தனை".*.( 03.04.2026) ............................................. *"எது புத்திசாலித்தனம்''...?* ....................................... ஒருவர் வியாபாரத்தில் புத்திசாலியாக இருப்பார். மற்றவர் கம்ப்யூட்டர் துறையில் புத்திசாலியாக இருப்பார். இன்னொருவர் செருப்பு தைப்பதில் அனுபவசாலியாக இருப்பார். மற்றொருவர் சமையல் செய்வதில் கெட்டிக்காராக இருப்பார். ஒருவர் அரசியலில் கொடி கட்டிப் பறப்பார். இப்படி ஒரு குறிப்பிட்ட செயலில் திறமையாக இருந்து விட்டால், இவர்கள் புத்திசாலிகள் என்று அர்த்தம் உள்ளதாகி விடுமா..? இவர்களால் தத்தம் தொழில் தொடர்பற்ற மற்றவற்றில் நிலைகளில் வெற்றி அடைய முடியாமல் போகலாம். அப்போது இவர்களின் தொழில் சாமர்த்தியம் அர்த்தமற்றதாகி விடும். இவர்கள் பணம் சம்பாதிப்பதிலும், வியாபாரத்திலும், அரசியலிலும் வெற்றி அடையலாம். இப்படி பிழைப்பையே வாழ்க்கையின் நோக்கமாக இருப்பவர்களை புத்திசாலிகள் என்று அழைக்க முடியாது. இவர்கள் தங்கள் வாழ்க்கையை நல்வழியில் ஈடுபடுத்தாமல், வசதிகளை மட்டும் அதிகப்படுத்திக் கொள்பவர்களின் அந்த மாதிரி புத்திசாலித்தனம் நமக்குத் தேவை இல்லை. நாம் எப்போதும் பிரச்னைகளால் அறிவு மந்தமாகி விட்டது என்ற அவசர முடிவுக்கு வந்து விடாதீர்கள். எந்த சூழ்நிலையை நாம் எப்படி அணுகிறோம் என்பதில் தான் பிரச்னைக்கு தீர்வு இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையை நாம் விரும்பவில்லை என்பதால், அந்தச் சூழ்நிலையைத் துரத்தி விட முடியாது. அப்போது நாம் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி, என்ன செய்தால் குறைவான பாதிப்பு இருக்கும் என்று செயல்பட வேண்டும். எனவே எந்த சூழ்நிலையையும் விருப்பு, வெறுப்பு இன்றி நோக்குங்கள். ஒவ்வொரு நிகழ்வையும் நம் முன்னேற்றத்திற்கு எவ்வாறு பயன்படுத்தலாம் என்று கொஞ்சம் நம் புத்திசாலித்தனத்தோடு திறந்த மனதோடு ஆராயுங்கள். பிரச்னையா?, இல்லையா? என்பது நிகழ்வில் இல்லை. அதை நாம் எப்படி புத்திசாலித்தனத்தோடு நாம் ஏற்கின்றோம் என்பதில் தான் இருக்கிறது. *ஆம் நண்பர்களே.,* கிடைத்ததை வைத்து வாழ்க்கையில் மேல் நோக்கி எப்படிப் போவது என்று பார்ப்பது தான் உண்மையான ''புத்திசாலித்தனம்..'' (ஆக்கம். உடுமலை சு.தண்டபாணி ........)💐💐🙏🏻❤❤
17 likes
10 shares
saravanan
623 views 12 days ago
#innraya SINTHANAY சிந்தனை."*.( 02.04.2026) .............................. *''நிகழ்காலம் மட்டுமே...''* ................................ யாரும் யாரை விடவும் உயர்ந்தவர் என்றோ, தாழ்ந்தவர் என்றோ, மதிப்பு மிக்கவர் என்றோ, அறிவானவர் என்றோ, அழகானவர் என்றோ, படித்தவர் என்றோ உங்களையும், நீங்கள் மற்றவரையும் நினைக்க வேண்டாம். இந்த பூமியில் ஒவ்வொரு மனிரும் சிறப்புக்கு உரியவர் தான். அனைவருமே தத்தம் துறைகளில் சிறப்பானவர்களே.. இச்சமூகத்தால் ஒடுக்கப்பட்ட ஒவ்வொரு மனிதர்கள், இச்சமூகத்தில் பெரிதாய் மதிக்கப்படாத ஏழைகள், படிக்காத பாமரர்கள், வெட்ட வெளியில், உச்சி வெயிலில் வேர்வை சொட்ட நிலத்தில் உழைத்துக் களைப்பவர்கள் (ஆண், பெண்) யாவருக்கும், எல்லோருக்கும் உள்ளதைப் போல், சுயமரியாதை,கோபம், வலி, மகிழ்ச்சி,பசி, உறக்கம்,இழி சொல்லின் வலி, புறக்கணிப்பின் வலி போன்ற தனிமனித உணர்ச்சிகள் அத்தனையும் அனைவருக்கும் உண்டு. மேற்குறிப்பிட்ட இவர்களை நேசிக்காவிட்டாலும் பரவாயில்லை., சொல்லால் , பார்வையால், செயலால், புறக்கணிப்பால் நம்பிக்கை துரோகத்தால், ஏளனச்சிரிப்பால் நெட்டித் தள்ளி வதை செய்து விடாதீர்கள். . உலகப் புகழ் பெற்ற ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் ஒருநாள் பூங்காவில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு ஒரு சிறுமி பந்துடன் வந்தாள். டால்ஸ்டாய் அருகே வந்து, அவரைப் பார்த்து ‘என்னோடு விளையாட வர்றீங்களா..? என்று கேட்டாள்.அவரும் ஒப்புக் கொண்டு அந்தச் சிறுமியுடன் சிறிது நேரம் விளையாடினார். மாலை நெருங்கவே, அந்தச் சிறுமி டால்ஸ்டாயிடம், ‘நான் போய் வருகிறேன்’ என்று கூறி விட்டுக் கிளம்பினாள். அதைக் கேட்ட டால்ஸ்டாய், ''உன் அம்மாவிடம் சொல்லு, நான் டால்ஸ்டாயுடன் விளையாடினேன் என்று’ என்றார். அதற்கு அந்தச் சிறுமி, நீங்களும் உங்கள் அம்மாவிடம் சொல்லுங்கள், நான் மேரியுடன் விளையாடினேன் என்று’ என்றாள். உலகப் புகழ் பெற்ற தன்னை, அவள் தனக்கு இணையாக நினைத்ததை எண்ணி, தன் கர்வத்துக்கு அவர் வெட்கப்பட்டார்.. *ஆம்.,நண்பர்களே..,* மனிதர்கள் யாராயினும் அவர்கள் அனைவரும் சமம். உயர்ந்தவர், தாழ்ந்தவர்,படித்தவர், படிக்காதவர்,, ஏழை, பணக்காரன் என்ற நிலை மாற வேண்டும்.. சமத்துவம் நிலவ வேண்டும் என்றால் மக்கள் மனதில் மாற்றம் ஏற்பட வேண்டும்.அதை நம்மிடம் இருந்து தொடங்குவோம்..இனி ஒரு புதிய உலகம் அமைப்போம்.. சக மனிதர்களை மதிப்போம்.. மனிதனாக வாழ்வோம்.. ( ஆக்கம். உடுமலை சு. தண்டபாணி..)💐💐💐💐💐💐
10 likes
20 shares