innraya SINTHANAY
609 Posts • 91K views
saravanan.
4K views
#sinthanay sitharal. சமுதாயத்தில் உள்ள அனைவருமே தனக்கு ஏதோ அடைய வேண்டிய லட்சியம் அல்லது தான் சாதிக்க வேண்டியது ஏதோ ஒன்று இருப்பதாக நினைத்துக் கொண்டு தங்கள் ஆற்றலை எல்லாம் அதில் செலவழித்துக் கொண்டே இருக்கிறார்கள். ஒருவருடன் ஒருவர் போட்டியிட்டுக் கொண்டும், பொறாமைப்பட்டுக் கொண்டும், மற்றவருடன் தன்னை ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டும் வாழ்வதையே வழக்கமாக்கிக் கொண்டு இருக்கின்றனர். ஆனால் வாழ்க்கை அப்படிப்பட்டதல்ல. இயற்கை (இறைவன்) ஒருவரைப் போல அது இன்னொருவரை உருவாக்கவில்லை. அப்பொழுதே நீங்கள் புரிந்து கொண்டிருக்களாம் நீங்கள் மற்றவரை போல வாழ வந்தவர் இல்லை என்று. அனைவருமே இளையராஜாவாகவோ, டோனியாகவோ ஆக வேண்டும் என்று விரும்புகின்றனர்.சினிமா வாழ்வில் புகழ் பெற வேண்டும் என்று தங்களுடைய வாழ்வை தொலைத்தவர்கள் எவ்வளவோ இருக்கிறார்கள். ஆனால் வெற்றி பெற்றவரின் வாழ்வே உங்களுக்குத் தெரிகிறது. தோற்றவர்களின் வாழ்க்கை மறைந்தே இருக்கிறது. யார்யார் எந்த வேலைக்காக இங்கு வந்தார்களோ அதை மட்டுமே அவர்களால் செய்ய முடியும்.அதேபோல் நான் எதுவுமே செய்ய மாட்டேன் என்று நீங்கள் வீட்டைப் பூட்டிக் கொண்டு உள்ளே இருந்தாலும் உங்களை வைத்து இயற்கை என்ன செய்ய வேண்டுமோ அதையும் செய்தே தீரும். உங்கள் இயக்கசக்தியும், இந்த பிரபஞ்சத்தை இயக்கும் இயக்க சக்தியும் வேறுவேறல்ல ஒன்றே. அதை உணர்ந்து அதனிடம் உங்களை ஒப்படைத்து விடுங்கள். அது உங்களை வைத்து என்ன செய்ய வேண்டுமோ அதை சரியாகவே செய்து விடும். நீங்கள் எதையும் எதிர்பார்க்காதீர்கள். அது உங்களை ஒரு குடியரசுத் தலைவராக உயர்த்தினாலும் சரி. அடையாளமே தெரியாத சாதாரணமான குடிமகனாக வைத்திருந்தாலும் சரி. அதில் இயற்கையில் எந்த ஏற்றத்தாழ்வும் இல்லை. குடியரசு தலைவருக்கும், குடிமகனுக்கும் வித்தியாசம் பார்ப்பதெல்லாம் உங்கள் அறியாமையே. அனைவரும் வாழப்பிறந்தவர்களே வாழ்க்கையை இயற்கையிடம் கொடுத்து வாழ்வை மட்டும் நீங்கள் வாழ்ந்து பாருங்கள் குடியரசுதலைவர் மட்டும் அல்ல வேறு எவ்வளவு பெரியவராக இருந்தாலும் உங்களுக்கு போட்டியாகவே தெரிய மாட்டார்.ஏனென்றால் நீங்கள் பிரபஞ்சத்திற்கே ராஜாவாக இருப்பீர்கள். இது வாழ்க்கையில் போராடி சில அனுபவங்களைப் பெற்றவர்களுக்கே. இன்னும் போராடவே ஆரம்பிக்காதவர்களுக்கு இதைப் புரிந்து கொள்ள முடியாது 😊😊😊
216 likes
1 comment 229 shares
saravanan.
525 views
#innraya SINTHANAY 🙏🏻 💐💐🌹🌹 *இன்றைய சிந்தனை* (27.02.2026) ............................................ *"தன்னம்பிக்கை, உழைப்பு, விடாமுயற்சி...!"* ............................................. வாழ்க்கையிலே முன்னேற நினைக்கிறவர்களுக்கு தன்னம்பிக்கை மிகவும் முக்கியம். இந்தத் தன்னம்பிக்கையை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்... நமது மழலைச் செல்வங்களுக்கு இளம் பருவத்திலேயே தன்னம்பிக்கையை ஏற்படுத்தினால் அவர்களால் சாதிக்க முடியாதது ஏதுமில்லை... வாழ்க்கையில் வெற்றி பெற எதுவும் தேவையில்லை; தன்னம்பிக்கை ஒன்று போதும் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர். தன்னம்பிக்கையே வெற்றிக்கு முதல்படி... ஏழை மனிதர் ஒருவர் தெரு வழியாக நடந்து போய்க் கொண்டு இருந்தார். தெருவில் ஒரு பழங்கால நாணயம் கிடந்தது. அதை எடுத்துப் பார்த்தார். அந்த நாணயத்தில் துளை இருந்தது. துளையிட்ட நாணயம் கிடைத்தால் ஆகூழ் (அதிர்ஷ்டம்) என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது... எனவே!, மகிழ்ச்சியாக அதை எடுத்துத் தன்னுடைய சட்டைப் பையிலே பத்திரமாக வைத்துக் கொண்டார். வீட்டிற்குச் சென்ற பின் அதனை ஒரு நெகிழிப் பொதியில் போட்டு, அதை ஒரு துணிப் பொதியில் முத்திரை வைத்து பத்திரப் படுத்திக் கொண்டார்... தனக்கு வந்த ஆகூழ்தனை தன் மனைவியிடமும் தெரிவித்தார். அதை எப்போதும் தனது சட்டைப் பையில் வைத்துக் கொண்டு அதைத் தொட்டுப் பார்த்துக் கொள்வார்... ஆனால்! அதனை வெளியில் எடுக்க மாட்டார். அந்த நாணயம் தனக்கு வாழ்வில் உயர்வைத் தரும் என்று நம்பி, தனது முழுத் திறனையும் பயன்படுத்தி உழைக்க ஆரம்பித்தார்... பின்னர் வியாபாரம் செய்ய ஆரம்பித்து அதிலும் வெற்றி பெற்றார். அதன் பின்னர் பல வியாபார முயற்சிகளில் ஈடுபட்டு அனைத்திலும் வெற்றி பெற்றார்... பணம், பதவி, புகழ் எல்லாம் அவரை வந்து சேர்ந்தது. அவரை எல்லோரும் பாராட்ட ஆரம்பித்தார்கள். அவர் எதைத் தொட்டாலும் வெற்றி என்ற நிலை... எல்லாம் அந்த துளையிட்ட நாணயத்தின் மகிமை என்று நினைத்தார் அந்த மனிதர். இப்படியே பல ஆண்டுகள் கழிந்தன... ஒரு நாள் அந்த நாணயத்தை கண்ணாலே பார்க்க வேண்டும் என்ற ஆசை அந்த மனிதருக்கு வந்தது. அப்போது தன் மனைவியை அழைத்து, நீண்ட நாளைக்குப் பிறகு என்னுடைய இந்த ஆகூழ் நிறைந்த நாணயத்தை இன்று வெளியே எடுத்துப் பார்க்கப் போகிறேன் என்று கூறினார் அந்த மனிதர்... உடனே மனைவி, இப்போது அதனைப் பார்க்க வேண்டாமே என்று மெதுவாகக் கூறினார். இல்லை!, இல்லை! பார்த்தே ஆகவேண்டும்! என்று சொல்லி, சட்டைப் பையில் கையை விட்டு பொதியைத் திறந்து, நாணயத்தை வெளியே எடுத்தார் அந்த மனிதர்... அவருக்கு ஒரே வியப்பு!. அந்த நாணயத்தில் துளையே இல்லை. அப்படியே குழம்பிப் போய் நின்றார். அப்பொழுது அவரது மனைவி, உங்க சட்டை பையில் காசு இருப்பது நினைவு இல்லாமல் நான் தான் ஒரு நாள் உங்க சட்டை தூசியாக இருக்கு என்று சாரளத்திற்கு (ஜன்னலுக்கு) வெளியே உதறினேன். அது தெருவில் விழுந்து விட்டது. எவ்வளவோ தேடிப் பார்த்தேன். கிடைக்கவில்லை. நீங்கள் கொடுத்த நாணயம் அது இல்லை என்பது உங்களுக்குத் தெரிந்தால் வருத்தப்படுவீர்கள் என்பதற்காக, வேறு ஒரு நாணயத்தை அதே போன்று பொதியில் போட்டு சட்டைப் பையில் போட்டு வைத்தேன் என்று கூறினாள்... இது எப்போது நடந்தது...? என்று கேட்டார் அந்த மனிதர். உங்களுக்கு காசு கிடைத்த மறு நாளே இது நடந்தது என்றாள் மனைவி... இதைக் கொஞ்சம் ஆலோசித்துப் பாருங்கள். அந்த மனிதருக்கு ஆகூழைக் கொடுத்தது அந்த நாணயம் இல்லை. அவருடைய தன்னம்பிக்கை, உழைப்பு, விடாமுயற்சி தான்... *ஆம் நண்பர்களே..,!* 🟡 நம்முடைய வளர்ச்சியைத் தீர்மானிப்பது தன்னம்பிக்கை. நம்மைச் சுற்றியுள்ள உலகம் நம்மை ஏளனப்படுத்தலாம், அலட்சியப்படுத்தலாம், நம் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடலாம், நம் திறனைக் குறைத்து மதிப்பிடலாம், நமக்கு உதவிக்கரம் நீட்டத் தயங்கலாம், நமக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய பாராட்டு, அங்கீகாரத்தை கொடுக்க மறுக்கலாம். ஆனால்!, நம் தன்னம்பிக்கை, ஆசை, கனவு, மன உறுதி, சுயமரியாதையை யாராலும் தட்டிப் பறிக்க முடியாது...! 🔴 எதை வேண்டுமானாலும் அடைய ஆசைப்படுங்கள். ஆனால்!, அந்த ஆசை நியாயமானதாக இருக்க வேண்டும். அதை சாதிக்க திறமை, திட்டமிடல், விடாமுயற்சி, கடின உழைப்பு ஆகியவை வேண்டும். விடாமுயற்சியுடன் செயல்பட்டால் எதிலும் எளிதாக வெற்றி பெறலாம்...! ⚫ தன்னம்பிக்கை மனதில் இருந்தால் வெற்றி உறுதி. நம்பிக்கை இருக்குமிடத்தில் விடாமுயற்சி இருக்கும். விடாமுயற்சியே வெற்றியைக் கொண்டு வந்து விடும். எண்ணம், சொல், செயல் மூன்றிலும் நேர்மை இருக்குமானால் தீயிற்கு நிகரான ஆற்றல் நம்மிடம் உண்டாகி விடும்...!!! - உடுமலை சு. தண்டபாணி✒️ 🌹🌹💐💐 🙏🏻 💐💐🌹🌹💐💐💐
14 likes
12 shares
saravanan.
594 views
#innraya SINTHANAY சிந்தனை.... மாற்றங்கள் மனங்களிலும் குணங்களிலும் வர வேண்டும் மாற்றங்கள் மனங்களிலும், குணங்களில், வந்தால் தான் வாழ்க்கை இனிமையாகும். ஒரு புகழ்பெற்ற ஞானியிடம் சிலர் சென்று,நாங்கள் புண்ணிய யாத்திரை சென்று புனித நதியில் நீராடி வரலாம் என்று இருக்கிறோம்.!நீங்களும் எங்களோடு வந்தால் நன்றாக இருக்கும் என அவரை அழைத்தார்கள்...! ஞானியோ, இப்போது வருவதற்கான சாத்தியம் இல்லை என்று கூறி விட்டு,அவர்களிடம் ஒரு பாகற்காயை தந்து,எனக்காக ஒரு உதவி செய்ய முடியுமா?"என்று அவர்களைப் பார்த்துக் கேட்டார். அவர்கள் "என்ன செய்ய வேண்டும் கட்டளை இடுங்கள் மகராஜ்' என்றனர். ரொம்ப பெரிய வேலை எல்லாம் இல்லை .நீங்கள் புனித நதியில் முழுகும் போதெல்லாம்,இந்தப் பாகற்காயையும் முழுக்கி என்னிடம் திரும்பக் கொண்டு வந்து இதை சேர்த்து விடுங்கள்"என்றார். அன்பர்கள் ஞானி சொன்ன மாதிரியே செய்தனர்..!திரும்ப வந்து அவரிடம் அந்தப் பாகற்காயை பத்திரமாக ஒப்படைத்தனர். அவர் அந்த பாகற்காயை சிறு துண்டுகளாக நறுக்கி, எல்லாருக்கும் ஒரு துண்டைக் கொடுத்தார்..! புனித நதியில் முழுகி வந்த பாகற்காய் இப்போ சாப்பிட்டுப் பாருங்க தித்திக்கும் என்றார்...! ஆர்வமுடன் வாங்கிய அன்பர்கள் வாயில் போட்டு மென்ற வேகத்தில் முகம் மாறியது.......! தித்திக்கும்னு சொன்னீங்க. ஆனா கசக்குதே...! என்றார்கள். ஞானியிடம் ஏமாற்றத்துடன்.. பார்த்தீர்களா...? பாகற்காய் எத்தனை தான் நதியில் முழுகினாலும், அதன் சுபாவத்தை மாற்றிக் கொள்ளவில்லை.அதைப் போலவே, நாம் நமது தவறான செயல்களையும், தீய பக்கங்களையும், துர்குணங்களை மாற்றிக் கொள்ளாமல், எந்த புண்ணிய தீர்த்தத்தில் ஆயிரம் முறை முழுகினாலும், எந்தக் கோயிலுக்கோ,சர்ச்சுக்கோ, மசூதிக்கோ ,குளத்துக்கோ , புண்ணிய ஸ்தலங்களுக்கோ 1008 முறை வலம் வந்து விழுந்து, விழுந்து வணங்கினாலும்.... எந்தப் பயனும் வந்து விடப் போவதில்லை .....?? மாற்றங்கள் மனங்களிலும், குணங்களில், வந்தால் தான் வாழ்க்கை இனிமையாகும்....!!! என்றார் அந்த ஞானி. வாழ்க வளமுடன். 😊😊😊
7 likes
9 shares