sinthanay sitharal.

• 8K views
saravanan.
640 views 5 days ago
#innraya SINTHANAY *இன்றைய சிந்தனை* ( 20.07.2026) ........................................................ *''இயற்கை கற்பிக்கும் பாடம்"* ................................................... இயற்கை நமக்கு எடுக்கிற வகுப்பு தான் இயற்கைச் சீற்றங்கள். இயற்கைச் சீற்றங்கள் வந்த போது நாம் அழிவினை மட்டுமே பார்க்கிறோம், ஆனால்!, எத்தனை மனிதர்களுக்கு இவ்வளவு தான் வாழ்க்கையா...? என்ற பேருண்மையை உணர்த்தி இருக்கிறது என்பதை நாம் பார்ப்பதில்லை... எத்தனை தொண்டு செய்யும் உள்ளங்களை ஒவ்வொரு இயற்கைப் பேரிடர்களும் இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தி இருக்கிறது என்பதை நாம் காண்பதில்லை... நமக்குத் தான் ஓடுவதற்கே நேரம் சரியாக இருக்கின்றதே...! கண்ணுக்குத் தெரியாத ஒரு தீநுண்மி இன்று உலகையே முடக்கி விட்டதே...! இப்படியொன்று நடக்குமா...? என எவரும் கணித்திருக்கவே முடியாது, ஆனால் நடந்திருக்கிறது... பெருஞ் செல்வந்தர்கள், ஆளுமைச் சமூகத்தினர் என எந்தவிதப் பாகுபாடும் இல்லை. ஏழைக்கு எட்டாத கேளிக்கை விடுதிகள், திரையரங்குகள் போன்றவை இன்று மூடப்பட்டிருக்கின்றன... காலம் காலமாக நம்பிய தெய்வங்கள் எல்லோரையும் கைவிட்டது, அனைத்து மத வழிபாட்டு தளங்களும் மூடப்பட்டு இருக்கிறது... இன்னும் சில மாதங்கள் நீடித்தால் இன்று செல்வந்தர் என நம்பிக் கொண்டிருக்கும் பலர் ஏழைகளாக மாறிப் போவார்கள்...! இந்தப் பதிவை எழுதிக் கொண்டிருக்கும் பொழுது 'கொரோனா' என்னும் தீநுண்மி பாதிப்பினால் உலகம் முழுவதும் அறுநூறாயிரத்திற்கும் மேல் இறந்திருக்கிறார்கள் என்று 'உலக சுகாதர நிறுவனம்' அறிவித்திருக்கிறது... எண்ணிக்கையாகக் காணும் போது இதன் வலிகளைப் பெரிதாக உணராமல் நமக்கென்ன என்று எண்ணிக் கொண்டு நம்மால் கடந்து செல்ல முடிகிறது... ஆனால்! இறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு குடும்பம் இருக்கிறது, அவர்களுக்குப் பின்னால் ஒரு கதை இருக்கிறது. அவை மட்டும் நமக்குத் தெரிந்தால் நாம் அனைவருமே மன நோயாளிகளாக மாறிப் போவோம்...! இதில் எவருமே இப்படியொரு நிலை வந்து இறந்து போவோம் என நினைத்திருக்கவே மாட்டார்கள். ஆனால்!, உறுதியற்றது தானே வாழ்க்கை... உறுதியற்ற இந்த வாழ்க்கையில் நாம் ஓடிக் கொண்டே இருப்பதை இனியாவது நிறுத்திக் கொள்வோம், ஓடி உயரங்களை அடைபவர்கள் வாழ்க்கையில் மகிழ்வாக இருக்கிறார்கள் எனக் கூறிடவியலாது... எத்தனை மாடமாளிகைகளில் இன்னல்களோடு இரவில் உறங்குகிறார்கள். மிகப்பெரிய மகிழுந்துகளில் எத்தனை பணம் படைத்தோர் மன அழுத்தத்தோடு பயணிக்கிறார்கள் என அவர்களுக்குத் தான் தெரியும்... ஆனால்!, உண்மையை நாம் உணராமல் அங்கே செல்ல முயற்சி செய்து கொண்டே இருக்கின்றோம், இங்கே பத்தாயிரம் ஊதியக்காரர்களும் வாழுகிறார்கள், நூறாயிரக் கணக்கில் ஊதியக்காரர்களும் வாழுகிறார்கள்.... ஆகவே!, பணம் எப்போதுமே பொருட்டல்ல, 'காலம்' அதுவே தலைமைப் பொருள்...! *ஆம் நண்பர்களே...!* மன வருத்தமின்றி வாழ்வதற்கு இது போதுமென உங்களுக்குத் தோன்றுகிற வரை ஓடுங்கள். பிறகு நின்று விடுங்கள், இருப்பதை வைத்துக் கொண்டு அமைதியாக வாழப் பழகுங்கள்...! ஆம்!, இவ்வளவு தான் வாழ்க்கை என்பதை முதலில் புரிவோம்...! - உடுமலை சு. தண்டபாணி 🌺🌺🌺🙏🏻💐💐💐💐💐💐💐💐
12 likes
13 shares
saravanan.
539 views 10 days ago
#innraya SINTHANAY *இன்றைய சிந்தனை* ( 15.07.2026) ................................................... *'' துணிவே துணை...!"* ................................................... நாம் ஒரு செயலை செய்யும் பொழுது "நாம் தவறேதும் இழைத்து விட்டால் என்ன நிகழுமோ" என ஆலோசித்துக் கொண்டிருப்பதை விட, துணிந்து முயற்சித்துப் பாருங்கள்.. கிடைத்தால் வெற்றி...! இல்லையேல் அனுபவம்...!! இரண்டுமே நமக்குத் தேவை தான்...!!! உண்மையைக் கூறினால் அனைவருக்குமே அப்படியொருவர் இருக்கத் தான் செய்கிறார்கள். அது வேறு யாரும் இல்லை, நமக்கு நாமே தான்...! ஒரு நிமிடம் ஆலோசித்துப் பாருங்கள், நீங்கள் உங்கள் வாழ்க்கையில் பல இன்னல்களான சூழ்நிலைகளைக் கடந்திருப்பீர்கள், அவற்றையெல்லாம் கடந்து அந்தப் பாடங்களை எல்லாம் மனதில் சுமந்து தான் இன்று இருக்கிறீர்கள்...! இப்பொழுது கூறுங்கள், எந்த ஒரு சூழ்நிலையிலும் உங்களுக்காக ஒருவர் இருக்கத் தானே செய்கிறார். யார் அவர்...? ஆம்..! அவர் நீங்கள் தான்...! என்ன நிகழ்ந்தாலும், எவற்றை இழந்தாலும் சோர்ந்து விட மாட்டேன். காரணம் நான் நூறு வெற்றிகளைக் கண்டவன் அல்ல, நான் ஆயிரம் தோல்விகளைக் கண்டவன் என்றார் 'தாமஸ் ஆல்வா எடிசன்' அவர்கள்... ஒரு செயலில் நல்லது நடந்தால் பெருமை கொள்ளுங்கள். இல்லையா...? அதைவிட பெருமை கொள்ளுங்கள், அடுத்தமுறை சற்று விழிப்புணர்வுடன் செயல்பட்டால் இதைவிட சிறப்பான ஒன்று கூட நாளை உங்களுக்குக் கிடைக்கலாம்... அதனால் தான் நம் செயலில் வெற்றி ஈட்டினாலும் சரி, தோல்வியாக இருந்தாலும் சரி, அவற்றை எந்தவித நடுக்கமும் இல்லாமல் மனதை அமைதியாக நடுநிலையில் நின்று ஏற்றுக் கொள்ள வேண்டும்... எது நடந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளும் மனநிலை மட்டும் உங்களுக்கு இருந்து விட்டால், வாழ்க்கையில் பல துயரங்கள் உங்களை விட்டு நீங்கி விடும்... *ஆம் நண்பர்களே...!* என்ன நிகழ்ந்தாலும் எனக்கு துயரமில்லை என்று துணிந்தவர்கள் எவரோ, அவர்களே வாழ்க்கையில் வெற்றி பெறுகின்றார்கள்...! - உடுமலை சு. தண்டபாணி 🌷🌷🌷💐🙏🏻🌹🌹🌹🌹🌹
15 likes
11 shares