sinthanay sitharal.

• 8K views
saravanan.
767 views 29 days ago
#innraya SINTHANAY சிந்தனை* 🌷09.05.2026🌷 வாழ்வில் நாம் ஒவ்வொருவரும் எதாவது ஒன்றை அடைய முயற்சியைத் தொடங்கியிருப்போம்... ஆனால், முயற்சியின் தொடக்கத்தில் இருந்த உத்வேகமானது சில நாள்களில் இல்லாமல் போய் விடுகின்றது... ஏனென்றால், நாம் எதிர்பார்த்த பலன் ஆனது உரிய காலத்தில் கிடைப்பதில்லை என்பதே நிதர்சமான உண்மை... ஓவ்வொரு முயற்சியிலும் அது எடு்த்துக் கொள்ளும் காலமானது வேறுபடும்... ஆனால் நம் மனமானது இதனை ஏற்றுக் கொள்ளத் தான் மறுக்கின்றது... எச்செயலைத் தொடங்கினாலும் அதில் இடைவிடாது உழைத்தலே பலனைத் தரவல்லது... போராடிப் பெறுவது மட்டுமே வெற்றியாகும்... எளிதாய்க் கிடைப்பதை யாருமே கொண்டாடுவதில்லை... வாழ்க்கைப் பயணத்தில், நமக்கு நடந்த பெரும்பாலான நிகழ்வுகளை ஆராய்ந்தால்... ஒவ்வொரு தடையும், ஒவ்வொரு வெற்றியைத் தன்னுள் மறைத்து வைத்திருந்தது என்பது புரியும்... அது போன்று தான் தோல்வியும்... தோல்வி என்பது நம்மை நாம் மாற்றி அமைத்துக் கொள்வதற்கான சரியான அறிவிப்பு என்று கூட சொல்லலாம்... வெற்றி வந்தால் பெற்றுக் கொள்வோம்... தோல்வி வந்தால் கற்றுக் கொள்வோம்... சிந்தித்து செயலாற்றுங்கள். வாழ்த்துகள்... வாழ்க வளமுடன். 😊😊😊
19 likes
21 shares