sinthanay sitharal.

4 Posts • 8K views
saravanan.
8K views 1 months ago
#sinthanay sitharal. சமுதாயத்தில் உள்ள அனைவருமே தனக்கு ஏதோ அடைய வேண்டிய லட்சியம் அல்லது தான் சாதிக்க வேண்டியது ஏதோ ஒன்று இருப்பதாக நினைத்துக் கொண்டு தங்கள் ஆற்றலை எல்லாம் அதில் செலவழித்துக் கொண்டே இருக்கிறார்கள். ஒருவருடன் ஒருவர் போட்டியிட்டுக் கொண்டும், பொறாமைப்பட்டுக் கொண்டும், மற்றவருடன் தன்னை ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டும் வாழ்வதையே வழக்கமாக்கிக் கொண்டு இருக்கின்றனர். ஆனால் வாழ்க்கை அப்படிப்பட்டதல்ல. இயற்கை (இறைவன்) ஒருவரைப் போல அது இன்னொருவரை உருவாக்கவில்லை. அப்பொழுதே நீங்கள் புரிந்து கொண்டிருக்களாம் நீங்கள் மற்றவரை போல வாழ வந்தவர் இல்லை என்று. அனைவருமே இளையராஜாவாகவோ, டோனியாகவோ ஆக வேண்டும் என்று விரும்புகின்றனர்.சினிமா வாழ்வில் புகழ் பெற வேண்டும் என்று தங்களுடைய வாழ்வை தொலைத்தவர்கள் எவ்வளவோ இருக்கிறார்கள். ஆனால் வெற்றி பெற்றவரின் வாழ்வே உங்களுக்குத் தெரிகிறது. தோற்றவர்களின் வாழ்க்கை மறைந்தே இருக்கிறது. யார்யார் எந்த வேலைக்காக இங்கு வந்தார்களோ அதை மட்டுமே அவர்களால் செய்ய முடியும்.அதேபோல் நான் எதுவுமே செய்ய மாட்டேன் என்று நீங்கள் வீட்டைப் பூட்டிக் கொண்டு உள்ளே இருந்தாலும் உங்களை வைத்து இயற்கை என்ன செய்ய வேண்டுமோ அதையும் செய்தே தீரும். உங்கள் இயக்கசக்தியும், இந்த பிரபஞ்சத்தை இயக்கும் இயக்க சக்தியும் வேறுவேறல்ல ஒன்றே. அதை உணர்ந்து அதனிடம் உங்களை ஒப்படைத்து விடுங்கள். அது உங்களை வைத்து என்ன செய்ய வேண்டுமோ அதை சரியாகவே செய்து விடும். நீங்கள் எதையும் எதிர்பார்க்காதீர்கள். அது உங்களை ஒரு குடியரசுத் தலைவராக உயர்த்தினாலும் சரி. அடையாளமே தெரியாத சாதாரணமான குடிமகனாக வைத்திருந்தாலும் சரி. அதில் இயற்கையில் எந்த ஏற்றத்தாழ்வும் இல்லை. குடியரசு தலைவருக்கும், குடிமகனுக்கும் வித்தியாசம் பார்ப்பதெல்லாம் உங்கள் அறியாமையே. அனைவரும் வாழப்பிறந்தவர்களே வாழ்க்கையை இயற்கையிடம் கொடுத்து வாழ்வை மட்டும் நீங்கள் வாழ்ந்து பாருங்கள் குடியரசுதலைவர் மட்டும் அல்ல வேறு எவ்வளவு பெரியவராக இருந்தாலும் உங்களுக்கு போட்டியாகவே தெரிய மாட்டார்.ஏனென்றால் நீங்கள் பிரபஞ்சத்திற்கே ராஜாவாக இருப்பீர்கள். இது வாழ்க்கையில் போராடி சில அனுபவங்களைப் பெற்றவர்களுக்கே. இன்னும் போராடவே ஆரம்பிக்காதவர்களுக்கு இதைப் புரிந்து கொள்ள முடியாது 😊😊😊
273 likes
2 comments 432 shares
saravanan
607 views 4 days ago
#innraya SINTHANAY சிந்தனை.*.( 29.03.2026). .................................. *" குழந்தைகளை விளையாட அனுமதியுங்கள்''* .................................. குழந்தைகளின் இயல்பான வளர்ச்சியில், ஆரோக்கியம் விளையாட்டுக்கு முக்கியப் பங்கு உள்ளது என்பதை பெற்றோர் உணர்வதே இல்லை இன்றைக்கு எத்தனை பெற்றோர் தங்களின் குழந்தைகளை விளையாட அனுமதிக்கிறார்கள்? . இன்றைய போட்டி நிறைந்த உலகில் கல்வி என்பது பிள்ளைகளின் வாழ்க்கையில் மிக முக்கியம் ஆனது என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. அதே சமயம் குழந்தைகளின் ஆரோக்கியம் என்பதும் முக்கியமானது என்பதை பல பெற்றோர் மறந்து விடுகின்றனர். படிப்பில் தங்களின் பிள்ளை முதல் ஆளாக வர வேண்டும் என ஏதேதோ செய்து மெனக்கெடும் பல பெற்றோர்கள், அதே போல ஆரோக்கியமாக தன் பிள்ளை இருக்க வேண்டும் என்று நினைப்பதே இல்லை. இப்போது பல பள்ளிகளில் விளையாட்டு எனபது பெயர் அளவில் மட்டுமே இருக்கிறது. மேலும் பல குழந்தைகளுக்கு விளையாட்டுக்களின் பெயர் கூடத் தெரிவதில்லை... இன்றைய சூழலில் மாணவர்களைப் படித்து அதிக மார்க் வாங்கும் இயந்திரங்களாக உருவாக்குவதில் பள்ளிகளுக்கு இடையே பெரும் போட்டி ஏற்பட்டு உள்ளது. இதில் விளையாட்டு உட்பட வேறு தனித்திறமைகளை குழந்தைகளிடம் கண்டறிந்து அவற்றை வளர்க்க உதவும் பள்ளிகளும், ஆசிரியர்களும் மிகக் குறைவு. பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தாலும் குழந்தைகளுக்கு விளையாட வாய்ப்புகள் மிகவும் குறைவு. விடுமுறை நாட்களிலும் வீட்டுப்பாடம்,ட்யூசன் போன்றவைகள் குழந்தைகளின் நேரத்தை தீர்த்து விடுகிறது. விளையாட்டு என்பது உடலுக்கு மட்டும் பலம் சேர்ப்பது அல்ல. விளையாட்டு என்பது குழந்தைகள் சகமனிதர்களுடன் தயக்கமில்லாமல் பழகவும், வெற்றி தோல்விகளை எளிதாக எடுத்துக் கொள்ளவும், விட்டுக் கொடுக்கும் உதவும் ஒரு வழி. தாங்கள் விளையாடாமல் டி.வி.யில் மற்றவர்கள் விளையாடுவதை வேடிக்கை மட்டும் பார்க்கும் குழந்தைகள் எப்படி ஆரோக்கியமாக இருப்பார்கள்? தினமும் அதிகாலையில் இருந்து இரவு உறங்கும் வரை படிப்பும், எழுத்தும் என்று இருக்கும் குழந்தைகளுக்கு, உடல் நலம் இன்மையும் மனஉளைச்சலும் ஏற்படுவது இயல்பு. குழந்தைகளுக்குக் கல்வியைப் போலவே உடல் ஆரோக்கியமும் கிடைக்கும்படி செய்வதே பெற்றோரின் கடமை. *ஆம்.,நண்பர்களே..,* தினமும் மாலை நேரத்தில் குழந்தைகளை விளையாட அனுமதிக்க வேண்டும். அது அவர்களின் மன,உடல் நலத்திற்கு நன்மையைத் தரும் என்பதை உணர வேண்டும் குழந்தைகள் குழந்தைகளாக இருந்து குழந்தைப் பருவத்திற்கே உண்டான மகிழ்ச்சியை முழுமையாக அவர்கள் அனுபவிக்கட்டும். அதற்கு பெற்றோர் தடையாக இல்லாமல் உறுதுணையாக இருப்பது அவசியம். (ஆக்கம் உடுமலை சு.தண்டபாணி....)💐💐💐💐💐 -
18 likes
15 shares
saravanan
473 views 7 hours ago
#innraya SINTHANAY சிந்தனை."*.( 02.04.2026) .............................. *''நிகழ்காலம் மட்டுமே...''* ................................ யாரும் யாரை விடவும் உயர்ந்தவர் என்றோ, தாழ்ந்தவர் என்றோ, மதிப்பு மிக்கவர் என்றோ, அறிவானவர் என்றோ, அழகானவர் என்றோ, படித்தவர் என்றோ உங்களையும், நீங்கள் மற்றவரையும் நினைக்க வேண்டாம். இந்த பூமியில் ஒவ்வொரு மனிரும் சிறப்புக்கு உரியவர் தான். அனைவருமே தத்தம் துறைகளில் சிறப்பானவர்களே.. இச்சமூகத்தால் ஒடுக்கப்பட்ட ஒவ்வொரு மனிதர்கள், இச்சமூகத்தில் பெரிதாய் மதிக்கப்படாத ஏழைகள், படிக்காத பாமரர்கள், வெட்ட வெளியில், உச்சி வெயிலில் வேர்வை சொட்ட நிலத்தில் உழைத்துக் களைப்பவர்கள் (ஆண், பெண்) யாவருக்கும், எல்லோருக்கும் உள்ளதைப் போல், சுயமரியாதை,கோபம், வலி, மகிழ்ச்சி,பசி, உறக்கம்,இழி சொல்லின் வலி, புறக்கணிப்பின் வலி போன்ற தனிமனித உணர்ச்சிகள் அத்தனையும் அனைவருக்கும் உண்டு. மேற்குறிப்பிட்ட இவர்களை நேசிக்காவிட்டாலும் பரவாயில்லை., சொல்லால் , பார்வையால், செயலால், புறக்கணிப்பால் நம்பிக்கை துரோகத்தால், ஏளனச்சிரிப்பால் நெட்டித் தள்ளி வதை செய்து விடாதீர்கள். . உலகப் புகழ் பெற்ற ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் ஒருநாள் பூங்காவில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு ஒரு சிறுமி பந்துடன் வந்தாள். டால்ஸ்டாய் அருகே வந்து, அவரைப் பார்த்து ‘என்னோடு விளையாட வர்றீங்களா..? என்று கேட்டாள்.அவரும் ஒப்புக் கொண்டு அந்தச் சிறுமியுடன் சிறிது நேரம் விளையாடினார். மாலை நெருங்கவே, அந்தச் சிறுமி டால்ஸ்டாயிடம், ‘நான் போய் வருகிறேன்’ என்று கூறி விட்டுக் கிளம்பினாள். அதைக் கேட்ட டால்ஸ்டாய், ''உன் அம்மாவிடம் சொல்லு, நான் டால்ஸ்டாயுடன் விளையாடினேன் என்று’ என்றார். அதற்கு அந்தச் சிறுமி, நீங்களும் உங்கள் அம்மாவிடம் சொல்லுங்கள், நான் மேரியுடன் விளையாடினேன் என்று’ என்றாள். உலகப் புகழ் பெற்ற தன்னை, அவள் தனக்கு இணையாக நினைத்ததை எண்ணி, தன் கர்வத்துக்கு அவர் வெட்கப்பட்டார்.. *ஆம்.,நண்பர்களே..,* மனிதர்கள் யாராயினும் அவர்கள் அனைவரும் சமம். உயர்ந்தவர், தாழ்ந்தவர்,படித்தவர், படிக்காதவர்,, ஏழை, பணக்காரன் என்ற நிலை மாற வேண்டும்.. சமத்துவம் நிலவ வேண்டும் என்றால் மக்கள் மனதில் மாற்றம் ஏற்பட வேண்டும்.அதை நம்மிடம் இருந்து தொடங்குவோம்..இனி ஒரு புதிய உலகம் அமைப்போம்.. சக மனிதர்களை மதிப்போம்.. மனிதனாக வாழ்வோம்.. ( ஆக்கம். உடுமலை சு. தண்டபாணி..)💐💐💐💐💐💐
10 likes
20 shares