RamaswamyAnnamali
559 views
#பத்திஸ்டேட்ஸ் மாதம் 04ம் நாள் 16-பிப்ரவரி-26 திங்கள் கிழமை* திருவோணம் நக்ஷத்திரம் கூடிய நாளில்* சந்திரன் போன்ற முக காந்தியில் குளிர்ந்த அருளை பொழியும் பச்சைமாமலை மேனியன் சங்கு சக்ர தாரி அரவிந்தலோசனன் திருமால் பெருமாளை போற்றி பாடி பணிந்திடுவோம் வாரீர் தன்னை கண்டாலே மடியிலிருந்து தானாகவே பால் சுரக்கும் தாய்ப்பசுவை தேடி ஓடி வருவதை போல் ஓடிவந்தேன் கன்றுபோல் , காளிங்கன் முடியதன் மேல் ஓரடியை இட்ட உன் தாமரை பாதத்தை என் சென்னி இடுவாயே கோபாலா மான்போல் அமைதியாய் வாழ நினைக்கும் எனை சிங்கமதுபோல் என் வினைகள் துரத்தி விரட்டுகின்றதே தாய் மந்தி உடல் பிடித்த சேயாய்யாவது எனை, வாய் கவ்விச் சேய் சுமக்கும் பூனையாய் நீயேவாது எனை காத்திடு செக்கதனைச் சுழன்றிழுக்கும் மாடதனை ஒத்திருக்கும் செயலதுவாய்ப் பிறந்து இறந்து வாழும் பிறவிநோயை நீக்கி உன் தமர்க்கே அடிமை செய்யும் தொழில் அருள்வாயே உன் தாமரை பாதங்களில் அடைக்கலம் தந்தருள் கோவிந்தா . முயல்வதெலாம் நானெனினும் முன்நடப்பது நீயன்றோ மயர்வறவே எனைச்செய்து வரதா உனையே தொழவைத்து பயனிலாதத் தொல்வினையை பாவியேனை விட்டகற்றி தயவருளி எனைக்காப்பாய் செல்வ திருமகள் மணாளனே 🪷🪷🪷