💞அல்ஹம்துலில்லாஹ் வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ்!
“ரப்பனா! (எங்கள் இறைவனே!) எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக; மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக; இன்னும் எங்களை(நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!” 2:201
யா அல்லாஹ்!
எங்களுக்கு நலன்களுக்கான வாசல்களைத் திறந்துவிடுவாயாக!
உன் பாதுகாப்பிற்கான வாசல்களைத் திறந்துவிடுவாயாக!
ஆரோக்கியத்திற்கான வாசல்களைத் திறந்துவிடுவாயாக!
உன் அருட்கொடைகளுக்கான வாசல்களைத் திறந்துவிடுவாயாக!
பரக்கத்தினுடைய வாசல்களை திறந்துவிடுவாயாக!
ஆற்றலுக்கான வாசல்களைத் திறந்துவிடுவாயாக!
பேரன்பிற்கான வாசல்களைத் திறந்து
விடுவாயாக!
ரஹ்மத்தினுடைய வாசல்களைத்
திறந்துவிடுவாயாக!
ரிஜ்குடைய வாசல்களைத்
திறந்துவிடுவாயாக!
கல்விஞானத்திற்கான
வாசல்களைத் திறந்துவிடுவாயாக!
உன்னுடைய மன்னிப்பிற்கான வாசல்களைத் திறந்துவிடுவாயாக!
சொர்க்கத்திற்கு என்னை
அழைத்துச் செல்லும் வாசல்களைத்
திறந்துவிடுவாயாக!
யா அர்ஹமர் ராஹீமீன்!
யா அல்லாஹ்!
எங்களை இவ்வுலகத்தில் கண்ணியத்தோடு வாழ வைப்பாயாக மறுமையில் மன்னிப்போடு உன் சொர்க்கத்தில் எங்களை வாழ வைப்பாயாக யா ரஹ்மானே!
அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னும்
கேட்ட துஆ வைக் கேட்கிறோம்
ஏற்றுக்கொள்வாயாக யா ரஹ்மானே
لا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ ، لَهُ المُلْكُ ، وَلَهُ الحَمْدُ ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ ، اللَّهُمَّ لاَ مَانِعَ لِمَا أَعْطَيْتَ ، وَلاَ مُعْطِيَ لِمَا مَنَعْتَ ، وَلاَ يَنْفَعُ ذَا الجَدِّ مِنْكَ الجَدُّ
லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு
லா ஷரீக்க வஹு லஹுல் முல்க்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்
அல்லாஹும்ம லா மானிஅعலிமா அعஃத்தைத்த வலா முعஉத்தி லிமா
மன அத்த வலா யன்ஃபع உ தல் ஜத்தி மின்கல் ஜத்து.
அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாருமில்லை.அவனுக்கு இணையானவன் யாருமில்லை
ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது
அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றல் உள்ளவன்
யா அல்லாஹ்!
நீ கொடுத்ததைத்
தடுப்பவர் யாருமில்லை.
நீ தடுத்ததைக் கொடுப்பவரும் யாருமில்லை
எந்த செல்வந்தனின் செல்வமும் உன்னிடம் எந்தப் பலனும் அளிக்காது
யா அல்லாஹ் எங்கள் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றுவாயாக!
ஆமீன்.
#🕋யா அல்லாஹ்