||श्री:||ஸ்ரீ (969)
#ராமாநுஜர்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே ஶரணம்
என் மனமே ! ஓங்கியுயர்ந்து வளர்ந்த எம்பெருமான் திருமால் ஒலியை உண்டாக்கிப் பெருவெள்ளம் உண்டான உலகப் பிரளய காலத்தில் அப்பெருவெள்ளத்தில்,
உலகங்கள் அனைத்தையும் தன் திருவயிற்றில் அடக்கி வைத்துக்கொண்டு, ஒரு சிறு குழந்தையாகி ஆலந்தளிரில் மெல்ல மெல்லப் பள்ளி கொண்டருளினான்.
இவ்வுலகில் அத்தகைய எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணனையே சரணடைய வேண்டுமென்றெண்ணித் தெளிவுபெறக் கூடியவர் எவரேனும் உண்டோ! அவ்வாறு ஒருவருமில்லையே! என் மனமே ! நீயாவது அந்த எம்பெருமானை உன் மனதில் வைத்துக் கொண்டிருப்பாயாக !
பேயாழ்வார் திருவடிகளே ஶரணம்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏