முனைவர் ச.சு.ஜைனுதீன் நிறுவனத் தலைவர் மு.ம.க.
480 views
#நல்லதே பேசு நல்லதே நினை ஆர். நல்லகண்ணு அவர்களுக்கு வீரவணக்கம் திண்டிவனத்தில் இரங்கல் கூட்டம் திண்டிவனம், பிப்.27– இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர், தகைசால் தமிழர் மற்றும் சுதந்திரப் போராட்ட தியாகி ஆர். நல்லகண்ணு அவர்கள் மறைவையொட்டி திண்டிவனத்தில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி இன்பவொளி ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த இரங்கல் கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சி மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். இக்கூட்டத்தில் முஸ்லிம் மக்கள் கழகம் நிறுவனத் தலைவர் முனைவர் ச.சு. ஜைனுதீன் கலந்து கொண்டு இரங்கல் உரையாற்றினார். அவர் தனது உரையில், “ஆர். நல்லகண்ணு அவர்கள் எளிமை, நேர்மை மற்றும் பொதுசேவைக்கான அர்ப்பணிப்பின் உருவகமாக விளங்கினார். அவரின் அரசியல் வாழ்வு இளைஞர்களுக்கு முன்மாதிரியாக இருக்கும்” என்றார். மேலும் நிகழ்வில் திமுகவின் மாநில பொறுப்பாளர் மயிலம் முன்னால் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்இரா . மாசிலாமணி.இந்திய தேசிய காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஆர். ரங்க பூபதி, நகர தலைவர் விநாயகம், வழக்கறிஞர் அஜிஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வழக்கறிஞர் முனியாண்டி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட நகர நிர்வாகிகள், எஸ்.டி.பி. ஐ.கட்சியின் ஜப்பார்.யூசுப், முஸ்லிம் மக்கள் கழகத்தின் இ. சர்தார் அஹமத், அ. தாவூத் அலி, முகம்மது சாதிக், ப. ராஷித் உள்ளிட்டோர் கலந்து கொண்டு இரங்கல் தெரிவித்தனர். இரங்கல் கூட்டத்தின் முடிவில் அனைவரும் எழுந்து நின்று மௌன அஞ்சலி செலுத்தினர்.