Vinoth Kumar
583 views
கல்வி கற்கும் குழந்தை மனதில் கல்யாண கனவை விதைக்காதே.... குழந்தை திருமண தடுப்பு சட்ட விழிப்புணர்வு முகாம் எச்சூர் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு மார்க்க பந்து தலைமை தாங்கினார். கல்வி கற்கும் வயதில் மாணவர்களின் மனதில் திருமண கனவை விதைக்க கூடாது என்றும் இந்த வயதில் கல்வி தான் முக்கியம் என்றும் எடுத்துரைத்தார்கள். POCSO சட்டத்தின் விழிப்புணர்வையும் குழந்தைகளிடையே குட் டச் பேட் டச் தவிர்த்து இனி *நோ டச்* என்ற வாசகத்தை நெஞ்சில் பதிய வைத்தார்கள். பட்டா சட்ட பணிகள் குழுவின் தன்னார்வலர்கள் டாக்டர் இரா பாஸ்கரன் மற்றும் மலர் சாதிக் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து கருத்துரை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கு பெற்று தங்களின் சந்தேகங்களை கேட்டு அறிந்து பயனடைந்தார்கள். பள்ளியின் ஆசிரியர்களும் சமூக ஆர்வலர் திருமதி வளர்மதி அவர்களும் பங்கு பெற்று மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். #📺உள்ளூர் தகவல்கள்📰 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📰தமிழக அப்டேட்🗞️ #⚡ஷேர்சாட் அப்டேட்