Arunachalam
563 views
அரசு பயங்கரவாத கொடூரமான ஆள் தூக்கி சட்டமான ஊபா (UAPA) சட்டத்தை ரத்து செய்ய போராடுவோம் ==================== தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட உள்ள சூழலில் தேர்தலில் பாசிச பாஜகவை முறியடிப்பதற்கு திமுக கூட்டணியை ஆதரிப்பது என்று முற்போக்கு வழக்கறிஞர்கள் முடிவு செய்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. பாசிசம் என்பது தமிழகத்தில் மட்டும் தனியாக நுழையப் போவதில்லை நாடு முழுவதும் பயங்கரவாத தாக்குதலாக மதச் சிறுபான்மையினர் மீது அறிவு துறையினர் மீதும் கொடூரமான தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்து மதம் என்று சொல்லக்கூடிய பார்ப்பன மதத்திற்கு உள்ளேயே உள்ள பெரும்பான்மை மக்களான சூத்திர பஞ்சம சாதிகள் மற்றும் பழங்குடியினர் மீதும் கொடூரமான தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஆர்எஸ்எஸ் பாஜக உள்ளிட்ட சங்பரிவார அமைப்புகள் யாரை கையை காட்டுகிறதோ அவர்கள் மீது ஊபா சட்டத்தை பாய்ச்சுவதன் மூலம் விசாரணையும் இல்லை; பெயிலும் இல்லை என்று சிறையில் அடைக்கப்படுகின்றனர். கோவை மாவட்ட பியூசிஎல் அமைப்பைச் சேர்ந்த தோழர் பொன். சந்திரன் முன் வைத்துள்ள கட்டுரையின் இணைப்பாக ஒரு காணொளி வெளியாகியுள்ளது. இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை இந்த காணொளி விளக்குகிறது. ---------------------------- https://youtu.be/kPgCDb122JM?si=5X4HKIPzgyapIgXn #👨மோடி அரசாங்கம் ----------------------------- வழக்கறிஞர்களும், மனித உரிமை ஆர்வளர்களும் அரசு பயங்கரவாத கொடூரமான ஆள் தூக்கி சட்டமான ஊபா (UAPA) சட்டத்தை ரத்து செய்யவும், பாசிச பாஜக கொண்டுவந்துள்ள மக்கள விரோத சட்டங்களை திரும்பபெறவும் போராடுவோம். மக்கள் கலை இலக்கியக்கழகம் தமிழ்நாடு. 20-02-2026