ல.செந்தில் ராஜ்
1.5K views
ஆண்டாண்டாக அழுது புரண்டாலும் இறந்தவர் திரும்ப வரப்போவதில்லை நமக்கும் அதேபோல் இறப்பு உறுதியாக வரும். ஆதலால் நமக்கென மட்டுமே என சேர்த்து வைக்காமல் நம்மால் முடிந்த பொருளை தேவைப்படுவோர்க்கு கொடுத்து வாழதல் வேண்டும். // இறக்கும் நாள் குறிக்கப்பட்டு தான் பிறக்கிறோம். ஆனால் நம் மனதில் என்றும் இங்கு இருப்போம் என்ற நினைப்போடு வாழ்கிறோம். ஆகையால் பிறர் இறப்பை கண்டு வருந்துகிறோம் அக்கணம் நமக்கும் நேரம் வரக்கூடும் என்ற உண்மையை நினைவில் கொள்ளவேண்டும். எனவே ஒவ்வொரு கணமும் தெய்வ சிந்தனையோடு நல்லதையே நினைத்து நல்லதையே செய்து வாழப் பழகிகொள்ளவேண்டும் // #வெண்பா ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ மாநிலத்தீர் வேண்டா நமக்கும் அதுவழியே நாம்போம் அளவும் எமக்கென் என் இட்டு உண்டு இரும் #நல்வழி #ஔவை #🔥 ருத்ராபிஷேகம்🕉️ #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🔱 மகா சிவராத்திரி நல்வாழ்த்துக்கள் 🕉️ #✨ மகா சிவராத்திரி ஸ்டேட்டஸ் 🙏🏻 #🙏🏼ஓம் நமசிவாய