*🙏முருகன் பாமாலை⚜️🦚...!*
(Enn iniya share shart nanbargalkkum thangal inimayaana kudumbathaarukkum irav vanakkam mukkiyamaaga thangal thaai thanathay avargalukkum irav vanakkam.
#irav vanakkam
*பாடல்:15..!*
திருவொற்றியூர்ப் புராணம் - செம்மல் (சாதிப்பூ) மலராகச் செவ்வேள் அடிகளில்:
தன் நிகர் உயர்ச்சித்தாய சடக்கர மனுவை எண்ணித்
துன்னிய தூய வாய்மைத் தொண்டர்தம் வேட்கையெல்லாம்
இன்னிதின் யாண்டுமீதற்கு இருகை அமையா என்று
பன்னிருகரம் படைத்த பரம்பொருள் பதங்கள் போற்றி.
*பொருள்:*
தன்னிகர் தானென விளங்கும் முருகனுக்குரிய ஆறெழுத்து மந்திரத்தை நினைத்து தன்னைவந்தடைந்த அடியார்கள் விரும்புகின்ற எல்லாவற்றையும் இனிதாக எவ்விடத்தும் தர இருகைகள் போதாது என்று பன்னிரண்டு கைகளைக் கொண்டுள்ள முருகனது திருவடிகளுக்கு வணக்கம்.
*மலரும்...*
🟫🧡🟫🧡🟫🧡🟫🧡🟫🧡🟫🟫🧡🟫🧡🟫🧡🟫🧡🟫🧡🟫