𝐀𝐧𝐞𝐞𝐬𝐡𝐚_𝐕𝐉
698 views
இன்று சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் T20 உலகக்கோப்பை போட்டிக்காக, ரசிகர்கள் விசில் கொண்டு வர சென்னை போலீசார் தடை விதித்துள்ளனர். மைதானம் வெளியிலும் விசில் விற்பனையும் தடுக்கப்பட்டுள்ளது. கவனிக்க வேண்டியது — இந்தத் தடை ICC, BCCI, TNCA அல்லது மைதான நிர்வாகத்தின் முடிவு அல்ல; இது முழுக்க முழுக்க காவல்துறை தீர்மானம், தேர்தல் பாதுகாப்பு காரணம் என கூறப்படுகிறது. TNCA தடைப்பட்ட பொருட்களின் பட்டியலிலும் விசில் இல்லை. அப்படியிருக்க, திடீரென விசில் தடை ஏன்❓ அனைவருக்கும் தெரியும் — விசில் என்பது தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் சின்னம். ஒரு கிரிக்கெட் போட்டியில்கூட ஆயிரக்கணக்கான விசில் சத்தம் எழுந்தால், அது மக்கள் மனநிலையை வெளிப்படுத்தும் என்ற பயமே ஆளும் தரப்புக்கு இருப்பது தெளிவாக தெரிகிறது. இது பாதுகாப்பு விஷயம் அல்ல; மக்களின் குரலை கட்டுப்படுத்தும் முயற்சிதான். ஆனால் மாற்றத்தின் காற்றை யாராலும் தடுக்க முடியாது. மைதானத்திற்குள் இல்லாவிட்டாலும், மக்கள் மனதில் விசில் ஓசை தொடர்ந்து ஒலிக்கும். #தலைவர் விஜய் (TVK) #தமிழக வெற்றி கழகம் (TVK) #tvk #✨💗TVKFORTN💗✨ #✨💗TVKForTN 💗✨