ஈரானைச் சுற்றி வாளைத்துள்ள அமெரிக்கப் படைகள் – மத்திய கிழக்கில் உயரும் பதற்றம்'.
அடுத்த சில வாரங்களில் படைகள் குவிக்கப்படுவதன் மூலம், ஈரானைச் சுற்றி 30,000 முதல் 40,000 அமெரிக்க வீரர்கள் நிலைகொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் Marco Rubio சமீபத்தில் காங்கிரஸில் உரையாற்றும்போது, மத்திய கிழக்கில் உள்ள 8 அல்லது 9 அமெரிக்க இராணுவ தளங்களில் ஏற்கனவே 30,000 முதல் 40,000 வீரர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தினார். இதே நேரத்தில், ஈரான்மீது அரசியல் மற்றும் இராணுவ அழுத்தத்தை அதிகரிக்கும் நோக்கில் ஜனாதிபதி Donald Trump ஒரு “Massive Armada” என வர்ணிக்கப்படும் பெரிய கடற்படை படையணியை அந்தப் பகுதிக்கு அனுப்பியுள்ளார். இதில் USS Abraham Lincoln விமானம் தாங்கி போர்க்கப்பலும், பல ஏவுகணை தாங்கிய அழிப்புக் கப்பல்களும் அடங்கும். இந்தப் படை குவிப்பு நடவடிக்கைகள், ஈரான்–அமெரிக்க உறவுகளில் புதிய பதற்றத்தை உருவாக்கி, மத்திய கிழக்கில் பாதுகாப்பு சூழல் மேலும் தீவிரமடையக்கூடும் என்ற கவலைகளை சர்வதேச அளவில் எழுப்பியுள்ளது.
#iran #America #peace #PeacefulMoments #peaceful
#📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺உள்ளூர் தகவல்கள்📰