#பத்திஸ்டேட்ஸ் #🙏ஆன்மீகம் #🙏 ஓம் நமசிவாய சிவபெருமானைப் பற்றி பேசா நாளெல்லாம் பிறவா நாளே🌺 இன்று திருநாளைப்போவார் நாயனார் குருபூசை 🌺 ஏழ்மையான குடும்பத்தில், தாழ்ந்த குலத்தில் பிறந்த நந்தனார் அனுதினமும் சிவபெருமானின் பாதக்கமலங்களையே சிந்தித்து தனது வருமானத்தில் தனக்கென்று ஏதும் எடுத்துக்கொள்ளாமல் அனைத்தையும் சிவத்தொண்டிற்க்கே பயன்படுத்தினார். தாழ்ந்த குலத்தில் பிறந்ததால் கோயிலுக்குள் சென்று பெருமானை தரிசிக்க அஞ்சி வாயிலிலேயே நின்று மனமுருகி வணங்குவார். ஒருநாள் திருப்புன்கூர் என்ற தலத்தில் பெருமானை தரிசிக்க செல்ல ,அங்கு நந்தியம்பெருமான் மறைக்க , பெருமான் ஆணையின் படி நந்தி விலகி தரிசனம் பெற்றார். அனுதினமும் தில்லைக்கு செல்ல மனம் கொண்டு நாளை போகலாம் என்று இருந்துவிடுவார். அதனாலேயே திருநாளைப்போவார் எனப்பெயர்பெற்றார். ஒருநாள் முடிவோடு தில்லை எல்லையை அடைந்த நந்தனார், தமது குலம் கருதி மனம் வருந்தி எல்லையிலேயே தங்கிவிட்டார். இறைவனுக்கு சாதி, குலம் ஓர் தடை இல்லை என்பதையும், நந்தனாரின் பக்தியையும் உலகறியச் செய்ய நந்தனார் கனவிலும், தில்லைவாழ் அந்தணர்கள் கனவிலும் இறைவன் தோன்றி நந்தனாரை தீயில் மூழ்கி திருக்கோயில் வந்தடைவார் அவரின் பக்தியை மனதில் கொண்டு சாதி , குலம் பாராமல் ஏற்றுக்கொள்ள ஆணையிட்டார். அதன்படி தேவர்கள் பூமாரி பொழிய நந்தனார் தில்லையில் புகுந்து இறைவனின் திருப்பாதத்தில் சோதியாய் கலந்தார்.🌺 திருநாளைப்போவார் நாயனார் திருத்தாள் போற்றி 🌺 திருச்சிற்றம்பலம் 🌺