கண் தெரியாதவர்
- நான் தோற்றத்தைப் பார்த்து ஏமாந்தது கிடையாது..
காது கேளாதவர்
- நான் ஒட்டுக் கேட்டதே கிடையாது.
வாய் பேசாதவர்
- நான் பொய் பேசியதே கிடையாது..
குள்ளமானவர்
- நான் யார் முன்னும் தலைகுனித்து நின்றது கிடையாது.
கை இல்லாதவர்
- நான் யார் குறையையும் பார்த்துக் கை கொட்டிச் சிரித்தது கிடையாது..
கால் இல்லாதவர்
- நான் காசு பணம் வந்ததும் கால் மேல் கால் போடுவது இல்லை...
அதனால் தான் எங்களை மாற்றுத் திறனாளி என்கிறார்கள்..
நீயோ ஊனம் என்கிறாய்..
எங்களால் செய்ய இயலாத செயல்கள் செய்யும் நீ தான் ஊ --!!
அந்த வார்த்தையை உபயோகிக்க மாட்டேன்,
ஏனென்றால் அந்த வார்த்தையின்
வலி எனக்குத் தெரியும் !!!!
பகிர்வு
#🩺💊 புதிய தாக தெரிந்து கொள்வோம்💊🩺