⍣⃝𓄂☞coffee day ⍣⃝𓄂☞
628 views
2 months ago
கண் தெரியாதவர் - நான் தோற்றத்தைப் பார்த்து ஏமாந்தது கிடையாது.. காது கேளாதவர் - நான் ஒட்டுக் கேட்டதே கிடையாது. வாய் பேசாதவர் - நான் பொய் பேசியதே கிடையாது.. குள்ளமானவர் - நான் யார் முன்னும் தலைகுனித்து நின்றது கிடையாது. கை இல்லாதவர் - நான் யார் குறையையும் பார்த்துக் கை கொட்டிச் சிரித்தது கிடையாது.. கால் இல்லாதவர் - நான் காசு பணம் வந்ததும் கால் மேல் கால் போடுவது இல்லை... அதனால் தான் எங்களை மாற்றுத் திறனாளி என்கிறார்கள்.. நீயோ ஊனம் என்கிறாய்.. எங்களால் செய்ய இயலாத செயல்கள் செய்யும் நீ தான் ஊ --!! அந்த வார்த்தையை உபயோகிக்க மாட்டேன், ஏனென்றால் அந்த வார்த்தையின் வலி எனக்குத் தெரியும் !!!! பகிர்வு #🩺💊 புதிய தாக தெரிந்து கொள்வோம்💊🩺