⍣⃝𓄂☞coffee day ⍣⃝𓄂☞
640 views
2 months ago
_*ஒரு பாம்பு தனது சட்டையை*_ _*உரித்துப் போடுவதைப் போல நாமும் நமது கடந்த காலத்தை*_ _*மீண்டும் மீண்டும் உரித்துப் போட வேண்டும் என்கிறார் புத்தர்.*_ _*அதோடு எதிர்காலம் குறித்த கற்பனையில் மூழ்காமல் நிகழ்காலத்தில் மனதை செலுத்தச் சொல்கிறார்.*_ _கடந்த காலத்தை வைத்து எந்த மனிதரையும் நாம் எடை போடக் கூடாது எனவும் அவர் வலியுறுத்துகிறார். மனிதர்களின் வாழ்க்கை மாறுகிறது, புதிதாக கற்கின்றனர், கற்றதை கைவிடுகின்றனர், பழையதை கடந்து வருகின்றனர். எனவே நாம் ஒவ்வொருவரையும் ஒவ்வொன்றையும் நிகழ்காலத் தன்மைகளோடு அணுகுவதுதான் சரியானது._ _*மாற்றத்தை ஏற்கிற, நிகழ்காலத்தில் வாழ்கிற மனமே ஆரோக்கியமானது என்பதால்தான் புத்தர் அதற்கான மனக் கட்டுப்பாடுகளையும் பயிற்சிகளையும் மேற்கொள்ள ஊக்குவித்தார். மனித இனம் அறிவாற்றலில் முன்னோக்கி நகர வேண்டுமானால் அதற்கு கடந்த காலத்தைக் கைவிடும் கலை தெரிந்திருக்க வேண்டும்.*_ _நாம் புரிந்துகொள்ள வேண்டியது ஒன்றுதான்: கடந்த காலம் எவ்வளவு சிறப்புகளைக் கொண்டிருந்தாலும் அதற்கு உயிரில்லை; கடந்த காலம் எவ்வளவு மோசமானதாக இருந்தாலும் அதற்கும் உயிரில்லை. ஒவ்வொரு கணமும் புதியது, ஒவ்வொரு நாளும் புதியது என்பதைவிட நம்பிக்கையளிக்கும் விஷயம் ஏதாவது இருக்கிறதா இயற்கையின் இந்த உன்னத உண்மையைப் புரிந்து, நிகழ்காலத்தின் எல்லா நிலைகளிலும் மகிழ்ந்திருப்போம்._ #🩺💊 புதிய தாக தெரிந்து கொள்வோம்💊🩺