#📢 செப்டம்பர் 22 முக்கிய தகவல்🤗 #🎙️அரசியல் தர்பார் #📰தமிழக அப்டேட்🗞️ #📺அரசியல் 360🔴 #😠மானம்கெட்ட மோடி அரசாங்கம்😠
சவுதி அரேபியா - பாகிஸ்தான் இடையே மிக முக்கியமான பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளது. இதன்மூலம் ஒரு நாட்டின் மீதான எந்தவொரு தாக்குதலும் இருநாடுகளின் மீதான தாக்குதலாகவே கருதப்படுமாம்.
மிகப்பெரிய அளவில் விவாதிக்கப்பட்டிருக்க வேண்டிய இந்த விடயத்தை இந்திய ஊடகங்கள் அனைத்துமே லாவகமாக கடந்துபோயிருக்கின்றன.
அணுஆயுத நாடான பாகிஸ்தானை தன் இராணுவக்கூட்டாளியாக இணைத்துக்கொண்டதன் மூலம் இனிமேல் சவுதி அரேபியாவும் அணுஆயுதங்களை வைத்துள்ள நாடாகவே கருதப்படும்.
இதன்மூலம் தேர்தல் ஆதாயங்களுக்காக அவ்வப்போது பாகிஸ்தானோடு ஒரண்டை இழுக்கும் மோடி அரசாங்கத்தின் நடுமண்டையில் மிகப்பெரிய ஆப்பு இறக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகள் அனைத்தையும் நாசமாக்கி வைத்துள்ள மோடி அரசாங்கத்திற்கு இந்த ஒப்பந்தந்தின் மூலம் என்னென்ன புதிய சிக்கல்கள் வருமென்று இனிமேல்தான் தெரியவரும்.
சவுதிஅரேபியாவின் ராஜதந்திர வெற்றிகளில் இந்த ஒப்பந்தம் மிகப்பெரிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. பொருளாதாரச் சிக்கலில் மாட்டிக்கொண்டு சீரழியும் பாகிஸ்தானுக்கும் இராணுவ ரீதியாக மிகப்பெரிய ஆறுதலைக் கொடுத்திருக்கிறது.
அண்மையில் மோடி அரசாங்கம் பெருமைப் பட்டுக்கொண்ட ஆபரேசன் சிந்தூர் போன்ற அட்டாக்குகள் அனைத்திற்கும் நிரந்தராமான முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டன.
முற்போக்குச் சிந்தனைத் திறனற்ற மூடர்களான சங்கிகளின் கைகளில் மாட்டிக்கொண்டு விழி பிதுங்கி நிற்கிறது நம் இந்தியா…