😠மானம்கெட்ட மோடி அரசாங்கம்😠
8K Posts • 24M views
Rationalist
573 views 2 months ago
*இந்திய தேர்தல் ஆணையத்தை முற்றுகையிட்ட மே பதினேழு இயக்கம்*- மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை, 12 நவம்பர், 2025. கடந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னரே எஸ்ஐஆர்-ஐ நடத்தி இருக்கலாமே? அப்போது ஏன் நடத்தவில்லை?எஸ்ஐஆர்-க்காக அவர்கள் கொடுத்திருக்கக்கூடிய படிவத்தில், வாக்குரிமைக்காக கொடுக்க வேண்டிய ஆவணங்கள் என்று 13 ஆவணங்களைப் பட்டியலிடுகிறார்கள். நம்முடைய முகவரிக்கான ஆவணம், அடையாள அட்டை, நம் பெற்றோரின் ஆவணம் என 12 ஆவணங்களைப் பட்டியலிடுகிறார்கள். கடைசியாக 13வது ஆவணமாக ‘பீகாரினுடைய தேர்தல் பட்டியலில் நம் பெயர் இருக்கிறதா இல்லையா’ என்கின்ற விவரத்தை தேர்தல் ஆணயம் எதற்காக கேட்டிருக்கிறது? பாரதிய ஜனதா கட்சி எஸ்ஐஆர் திட்டத்தின் மூலமாக இந்தியா முழுவதும் திருட்டுத்தனமான வேலையை செய்கிறது. எஸ்ஐஆர் கேட்கும் எல்லா ஆவணங்களையும் கொடுப்பது என்பது கடவுச்சீட்டு(Passport) அனுமதிச்சீட்டு(Visa) போன்றவற்றிற்கு ஆவணங்கள் கொடுப்பதை விட சிக்கலானதாக இருக்கிறது. கடவுச்சீட்டு போன்றவற்றிற்கு ஆவணங்களை சரி பார்ப்பதற்கே பல நாட்களாகும். அவ்வாறெனில் ஒரு மாத காலத்திற்குள்ளாக 6 கோடி மக்களின் தகவலை இவர்களால் எவ்வாறு சரிபார்க்க இயலும்? விரிவாக வாசிக்க 👇 https://may17kural.com/wp/indian-election-commission-siege-protest-by-may17-movement/ மே 17 இயக்கக் குரல் 9444327010 #✍️மே17 இயக்கக் குரல் #😠மானம்கெட்ட மோடி அரசாங்கம்😠 #🚨கற்றது அரசியல் ✌️ #📰தமிழக அப்டேட்🗞️ #📺அரசியல் 360🔴
18 likes
10 shares
sakthi m
709 views 4 months ago
#📢 செப்டம்பர் 22 முக்கிய தகவல்🤗 #🎙️அரசியல் தர்பார் #📰தமிழக அப்டேட்🗞️ #📺அரசியல் 360🔴 #😠மானம்கெட்ட மோடி அரசாங்கம்😠 சவுதி அரேபியா - பாகிஸ்தான் இடையே மிக முக்கியமான பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளது. இதன்மூலம் ஒரு நாட்டின் மீதான எந்தவொரு தாக்குதலும் இருநாடுகளின் மீதான தாக்குதலாகவே கருதப்படுமாம். மிகப்பெரிய அளவில் விவாதிக்கப்பட்டிருக்க வேண்டிய இந்த விடயத்தை இந்திய ஊடகங்கள் அனைத்துமே லாவகமாக கடந்துபோயிருக்கின்றன. அணுஆயுத நாடான பாகிஸ்தானை தன் இராணுவக்கூட்டாளியாக இணைத்துக்கொண்டதன் மூலம் இனிமேல் சவுதி அரேபியாவும் அணுஆயுதங்களை வைத்துள்ள நாடாகவே கருதப்படும். இதன்மூலம் தேர்தல் ஆதாயங்களுக்காக அவ்வப்போது பாகிஸ்தானோடு ஒரண்டை இழுக்கும் மோடி அரசாங்கத்தின் நடுமண்டையில் மிகப்பெரிய ஆப்பு இறக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகள் அனைத்தையும் நாசமாக்கி வைத்துள்ள மோடி அரசாங்கத்திற்கு இந்த ஒப்பந்தந்தின் மூலம் என்னென்ன புதிய சிக்கல்கள் வருமென்று இனிமேல்தான் தெரியவரும். சவுதிஅரேபியாவின் ராஜதந்திர வெற்றிகளில் இந்த ஒப்பந்தம் மிகப்பெரிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. பொருளாதாரச் சிக்கலில் மாட்டிக்கொண்டு சீரழியும் பாகிஸ்தானுக்கும் இராணுவ ரீதியாக மிகப்பெரிய ஆறுதலைக் கொடுத்திருக்கிறது. அண்மையில் மோடி அரசாங்கம் பெருமைப் பட்டுக்கொண்ட ஆபரேசன் சிந்தூர் போன்ற அட்டாக்குகள் அனைத்திற்கும் நிரந்தராமான முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டன. முற்போக்குச் சிந்தனைத் திறனற்ற மூடர்களான சங்கிகளின் கைகளில் மாட்டிக்கொண்டு விழி பிதுங்கி நிற்கிறது நம் இந்தியா…
8 likes
11 shares