💪 மே17 இயக்கம்
793 Posts • 116K views
Rationalist
656 views
ஜனநாயகன் படத்தை முடக்கிய பிஜேபியை எதிர்த்து துணிவாக நடிகர் விஜய் பேச வேண்டும். #🎥Trending வீடியோஸ்📺 #🎙️அரசியல் தர்பார் #தோழர் திருமுருகன் காந்தி #💪 மே17 இயக்கம் #விஜய்
17 likes
12 shares
Rationalist
445 views
“விருதுநகரில் டெக்ஸ்டைல் பார்க் – 1000 பேருக்கு வேலை!”ன்னு பாஜக இப்போது பிரச்சாரம் செய்துகொண்டு இருக்கிறது. கேக்க நல்லாதான் இருக்கு… ஆனா உண்மை என்ன? நன்றாக ஓடிக்கிட்டிருந்த பல டெக்ஸ்டைல் மில்களை மூடி, விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் நேரடியாக 18,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்க்கையை மண்ணில புதைத்த கும்பல் பாஜக. அந்த உண்மையெல்லாம் மக்களுக்கு தெரியாது என்ற திமிர்ல, இப்போ “1000 பேருக்கு வேலை”ன்னு பொய் விளம்பரம்! அருப்புக்கோட்டை சுற்றுவட்டாரத்தை எடுத்துக்கோங்க. ஒரு காலத்தில் அந்தப் பகுதி மக்களின் வாழ்வாதாரமாக இருந்த ஜெயவிலாஸ் குழும மில்கள் கிட்டத்தட்ட எல்லாம் மூடப்பட்டுடுச்சு. பல டெக்ஸ்டைல் மில்கள் இன்று விற்பனைக்கே வைத்தாலும் வாங்க ஆள் இல்ல.அவ்வளவு மோசமான நிலை. இந்த மில்களை நம்பி வாழ்ந்த 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இன்று “நாளை என்ன செய்வது?”ன்னு திக்குத்தெரியாம நிக்கிறாங்க. இதெல்லாம் பற்றி ஒரு வார்த்தை பேசாத பாஜக, இப்போ “டெக்ஸ்டைல் பார்க் – வேலை வாய்ப்பு”ன்னு நாடகம் ஆடுது. வட இந்திய பணக்காரர்களுக்கும், மார்வாடி–குஜராத் சேட்டுகளுக்கும் பிரச்சனை வந்தா, சீனா, ரஷ்யா, அமெரிக்கா என நாடு நாடாக ஓடி ஓடி ஒப்பந்தம் போடும் மோடி, ஆனா திருப்பூர், கோவை, விருதுநகர் மாதிரி இந்திய டெக்ஸ்டைல் துறையின் முதுகெலும்பான பகுதிகளுக்காக குறைந்த விலையில் நூல் கிடைக்க வழி செய்ய ஒரு நடவடிக்கையும் இல்லை! மாறாக, வங்கதேசத்திலிருந்து மிகக் குறைந்த விலையில் துணிகளை இறக்குமதி செய்து உள்நாட்டு உற்பத்தியை நாசம் பண்ணினார் மோடி அவருக்கு நன்றாக தெரியும் வங்கதேசத்திலிருந்து மிக குறைந்த அளவில் ஜவுளி பொருட்களை இறக்குமதி செய்தால் இதனால் தமிழ்நாடு மிக மோசமாக பாதிப்படையும் என்று ஆனால் பாதிப்படையப் போவது தமிழர்கள் தானே என்று ஒப்பந்தம் போட்டார். அதோடு பருத்திக்கு வரி உயர்வு – இதுதான் மோடியின் “டெக்ஸ்டைல் கொலை” திட்டம். இதன் விளைவு என்ன? கடந்த சில ஆண்டுகளில் இந்தியா முழுக்க 3000+ டெக்ஸ்டைல் மில்கள் மூடல். தமிழகத்திலேயே 800க்கும் மேற்பட்ட டெக்ஸ்டைல் மில்களுக்கு பூட்டு. 2 லட்சம் பேருக்கு நேரடியாகவே தொழில் இழப்பு. சமீப காலத்தில மட்டும் 300 மில்கள் மூடப்பட்டுவிட்டது. https://www.thehindu.com/news/national/tamil-nadu/over-300-textile-mills-shut-in-tamil-nadu-in-last-few-years-says-report/article70664034.ece இவ்வளவு பேருடைய வாழ்க்கையை சீரழித்து விட்டு, அதே விருதுநகர் மாவட்ட மக்களிடம் டெக்ஸ்டைல் பார்க் போடுவோம் – 1000 பேருக்கு வேலைன்னு சொல்றதுக்கு இது பொய்யா? இல்ல மக்களை முட்டாள்னு நினைக்கிற அகங்காரமா? “தமிழ் மக்களை எப்படியும் ஏமாற்றலாம்”ன்னு நினைக்கிற இந்த பாஜக திமிரை தமிழ்நாடு தான் அடக்கணும், அடக்கும். ஒருபக்கம் மக்களின் வாழ்வாதாரத்தை அழிச்சிட்டு, மறுபக்கம் மத பிரச்சனையில மக்களை மூழ்கடிக்க முயற்சி பண்ணுற இந்த கும்பலை அரசியலா தோற்கடிக்கறதுதான் விருதுநகர் மக்களின் முதல் கடமை. வேலை கொடுத்தவங்க யார்? வேலை பறிச்சவங்க யார்? இந்த கேள்விக்கு பதில் தெரிஞ்சா, இந்த “டெக்ஸ்டைல் பார்க்” நாடகம் எவ்வளவு பெரிய ஏமாற்று வேலைன்னு புரியும். #கார்ப்பரேட் களின் கை கூலி பிஜேபி #தமிழின எதிரி RSS-பாஜக #📺அரசியல் 360🔴 #🚨கற்றது அரசியல் ✌️ #✍️மே17 இயக்கக் குரல்
16 likes
9 shares
Rationalist
547 views
நேற்று மே 17 இயக்கத்தின் சார்பாக நடந்த இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்திற்காக காத்துக் கொண்டு இருந்த நேரம் அருகில் இருக்கிற தேநீர் கடையில் தேனீர் அருந்த நானும் தோழர் ஒருவரும் சென்றிருந்தோம். அப்போது அங்கே காவலுக்காக வந்திருந்த காவலர்களில் இருவர் தேநீர் அருந்த வந்தார்கள். எங்களைப் பார்த்ததும் எதுக்கு சார் இந்த போராட்டம் என்று கேட்டார்கள். காவலுக்காக வந்திருக்கிறீர்கள் என்ன போராட்டம் என்று எல்லாம் உங்களுக்கு சொல்ல மாட்டார்களா என்று கேட்டேன். இல்லை சார். திருமுருகன் காந்தி சார் வருகிறார் என்று மட்டும் தான் தெரியும். போராட்டம் எதற்கு என்னவென்று எல்லாம் சொல்ல மாட்டார்கள் என்று சொன்னார். சரியென்று நான் வேறு ஒன்றும் இல்லைங்க 80 வருடமாக தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க முயற்சிக்கிறார்கள். நாமும் ஒவ்வொரு முறையும் எதிர்க்கிறோம். ஆனாலும் நாய் வாலை நிமிர்த்த முடியாது என்பது போல அவர்களை திருத்த முடியவில்லை. இப்போது தென்னக ரயில்வேயில் இருக்கக்கூடிய அனைத்து இடங்களிலும் இந்திக்கு முதன்மை கொடுத்து தமிழை பின்னுக்கு தள்ளி இருக்கிறார்கள். அதனால் இந்தி எழுத்தை அழிக்கும் போராட்டத்தை தான் இன்னைக்கி முன்னெடுக்கிறோம். தமிழ்நாட்டில் எதற்கு இந்தி என்று சொன்னேன். அவர் பாமரருக்கு உரிய பதிலான நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான். தமிழ் வேண்டும் தான் சார். ஆனா நார்த் இந்தியாவில் வேலைக்கு போகும் போது இந்தி தெரியாமல் சிரமப்படுகிறோமே என்று கேட்டார். அதனால் வேலை கிடைக்காமல் போகிறதே சார் என்று அவருக்குள்ள அறியாமையால் இந்த கேள்வியை கேட்டார். நான் சொன்னேன் அதற்காகத்தான் சார் இந்த போராட்டம் என்று சொன்னேன். அவருக்கு புரியவில்லை என்னவென்று கேட்டார். பட்டியலில் உள்ள 22 அங்கீகரிக்கப்பட்ட மொழிகளையும் ஏற்றுக் கொண்டு விட்டால் எல்லா மொழிகளிலும் தேர்வு நடக்கும். அப்படி நடக்கும் போது எல்லா மொழி பேசுபவர்களும் போட்டி போட முடியும் யாருக்கு திறமை இருக்கிறதோ அவர்கள் முன்னே வரலாமே ஏன் இந்திக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து அந்த மொழியை மட்டும் எல்லோரும் படிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். இந்தி தான் இந்தியா என்றால் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் மராத்தி குஜராத்தி இவர்களெல்லாம் இந்தியாவில் யார் என்று கேட்டேன். ஐரோப்பிய யூனியன் மொத்தம் 27நாடுகளைக் கொண்டது. அதில் 24 மொழிகளையும் அரசின் அலுவல் மொழியாக வைத்திருக்கிறார்கள். அவர்களால் அது முடியும் என்கிற பொழுது இந்தியாவால் ஏன் முடியவில்லை? இவர்களின் நோக்கம் இந்தியாவில் உள்ள எல்லா மொழிகளுக்கும் சமமான முக்கியத்துவத்தை கொடுப்பது அல்ல, இந்திக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து அதன் மூலம் சமஸ்கிருதத்தை அனைவரும் படிக்கச் செய்து அதன் மூலம் பார்ப்பனர்களின் மொழி தான் சிறந்தது என்றும், அவர்களே சிறந்தவர்கள் என்றும் நம்மை நம்ப வைப்பதற்காக தான் இதை செய்கிறார்கள் என்றேன். அதனால் தான் இந்திக்காரர்களை பார்த்து பார்த்து தமிழ்நாட்டுக்கு அனுப்புகிறார்களோ போகிற போக்கைப் பார்த்தால் தமிழ்நாடு இந்திக்காரர்களின் நாடு ஆகிவிடும் போல இருக்கு சார். இங்க காவலுக்கு வந்த பிறகு தான் தெரிகிறது ஒரு நாளைக்கு எக்கச்சக்கம்பேர் வந்து கொண்டே இருக்கிறார்கள் சார் என்று சொல்லிவிட்டு, பையா எனக்கு ஒரு சாயா கொடு என்று சொன்னார். உடனே அருகில் இருந்த இன்னொரு காவலர் பாருங்கள் சார் எங்கள் வாயாலேயே சாயா என்று சொல்ல வைத்து விட்டார்கள். இப்படியே போனால் தமிழுக்குப் பதில் இந்தி தான் பேசணும் போல இருக்கு தமிழ்நாட்டிலேயே என்று வருத்தப்பட்டு விட்டு நாங்களும் நிறைய தெரிஞ்சுக்கணும் போல, இல்லன்னா என் வாயாலேயே தமிழ் எதற்கு அப்படின்னு சொல்ல வச்சிருவாங்க போல இருக்கு அப்படின்னு சொல்லிட்டு சரி சார் நான் கிளம்புறேன் என்று போய்விட்டார். இப்படி படித்தவர்களுக்கே நிறைய போதாமைகள் இருக்கிறது. இந்த போதாமைகளை பயன்படுத்தி தான் இந்தி என்னும் அரக்கியை தமிழ்நாட்டின் மீது திணிக்கிறது ஒன்றிய அரசு. ஆகவே எப்பாடுபட்டாலும் இந்தி திணிப்பை எதிர்த்தே ஆக வேண்டும். #🚨கற்றது அரசியல் ✌️ #📺அரசியல் 360🔴 #💪 மே17 இயக்கம் #தமிழ்த்தேசியம் #தோழர் திருமுருகன் காந்தி
12 likes
14 shares