பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த அன்புத்தம்பி மாரியப்பன் தங்கவேலு அவர்கள் உயரம் தாண்டுதல் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் தருகிறது.
ஏற்கனவே கடந்த 2016 ஆம் ஆண்டு தங்கப்பதக்கமும், 2020 ஆம் ஆண்டு வெள்ளிப்பதக்கமும் வென்ற தம்பி மாரியப்பன் தங்கவேலு, தற்போது வெண்கலம் வென்றதன் மூலம் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ந்து மூன்றாம் முறையாக பதக்கம் வென்ற சாதனையைப் படைத்துள்ளது ஒட்டுமொத்தத் தமிழினத்திற்கும், தமிழ் மண்ணிற்கும் அளவிலாப் பெருமையைச் சேர்த்திருக்கிறது.
இம்மகிழ்வான தருணத்தில் அவரது வெற்றிக்குத் துணைநின்ற பெற்றோருக்கும், ஆக்கமும் ஊக்கமும் தந்து வளர்த்தெடுத்த ஆசிரியப் பெருமக்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் என்னுடைய பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்புத்தம்பி மாரியப்பன் தங்கவேலு அவர்கள் மென்மேலும் சாதனை புரிய என்னுடைய நெஞ்சம் நெகிழ்ந்த அன்பும், வாழ்த்துகளும்!
- செந்தமிழன் #சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
#நாம்தமிழர்கட்சி
#🥳ஹாட்ரிக் பதக்கம் வென்ற மாரியப்பன்🏅