மிகக் கவனமாய்
நகர்ந்து கொள்ளப்
பழகியிருக்கிறேன்
என்னை வருத்தும்
சிலரின் சொற்கள்
செயல்களில் இருந்து
பதில் சொல்லிக்
கொண்டிருக்கவோ
நீருபிக்கவோ
தேவையில்லை
நான் எதுவென
எனக்கே நன்றாகத் தெரியும்
எத்தனை முறை அறைந்தாலும்
புத்தனுக்கு கோவம் வராது
அத்தனை கல்லெனத்தான்
நீங்களே எரிந்து
நீங்களே ஓய்து
நீங்களே சலிப்படையும் வரை
உங்களுக்கு எதிரியாய்
நான் இருப்பேன்
வருந்தத் தேவையில்லை
அன்பர்களே ... #✍️கவிதை📜