#veerukonndu Elu. இன்று வலிமையோடு இருக்கிறேன் ஏன் என்றால் அன்றொரு நாள் வலுவிழந்து வாடி வதங்கி மோசமான நிலையைக் கடந்து வந்து உள்ளேன்.
இன்று நான் பயமற்றவனாக இருக்கிறேன், ஏன் என்றால் அன்று பலமுறை பயந்து பயந்து பயம் பழகி பயமறியாதவனாக மாற்றி விட்டது என்னை.
பல முறை அறிவிலித்தனமாகி பலரை நம்பி ஏமாற்ற அனுபவமே இன்று எம்மை அறிவாளியாக இல்லை என்றாலும் நிலைமையை சட்டென்று உணர்ந்து சுதாகரித்துக் கொண்டு செயல்படும் புத்திசாலியாக மாற்றியுள்ளது அனுபவம்.
இவை யாவும் நிகழக் காரணம் என் விதியே. ஆனால் நிகழ்ந்தவை என் வாழ்வை வளப்படுத்த, பலப்படுத்தக் காரணம் நேர்மறை சிந்தனையே, approach anything and everything with a positive attitude. 😊😊😊