ல.செந்தில் ராஜ்
783 views
3 days ago
மனநிறைவான வாழ்க்கை! "சாம்பார் ரசம் இனி 2-ஆவது ரவுண்டு வராது அடுத்து மோர்தான்... ரசம் வேணுங்கறவங்க இப்போவே ஊத்திக்கோங்க" என்று சாப்பாடுப் பந்தியில் சொல்வார்கள். பல கல்யாணங்களில் கடைசியாகப் பந்தி நடக்கும்போது தலைமை சமையல்காரர் பரிமாறுபவரிடம் "ஏத்தி ஏத்தி தாராளமா போடு, மீதம் வைக்கவேண்டாம்" என்று சொல்வதைக் கேட்டிருப்போம். கடந்தகால வாழ்க்கையில் அறியாமை மிகுதியால் வீணடித்த அற்புதமான நேரம் பற்றி இப்போது எண்ணிப் பார்த்தால் மனம் நிறைவு கொள்ளாது. பிறகு ஆகட்டும் பார்த்துக்கொள்ளலாம் என்று நினைக்க அது இன்னொரு சுற்று வராது. அதுபோல் வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் இருக்கும்போது அவசர அவசரமாக விட்டதைப் பிடிக்கிறேன் என்று ஏற்றி ஏற்றி அதிகமாக எதையும் உள்வாங்கிக் கொள்ளவும் முடியாது. பலமும் ஆற்றலும் குறைந்துவிடும். நாம் வாழ்கிற அந்த எஞ்சிய காலத்தில் தானம் தருமங்களை மட்டும் ஏற்றிச் செய்யலாம். காலமும் நேரமும், வாய்ப்பும் உழைப்பும், பயனும் பலனும், வாழ்க்கைப் பயணத்தில் நல்ல அனுபவத்தைப் பெற்றுத் தந்தால் அதுவே மனநிறைவு. மூத்தோர் சொல் கேட்டும், கற்றவர்கள் குழுவில் பழகியும், குருவின் ஆன்மிக வழிகாட்டுதலும், தெளிந்த விவேகமும், ஞானமும், திறனுள்ள முயற்சியும், அளவான எதிர்பார்ப்பும் இருந்துவிட்டால் வாழ்க்கை இனிதே! 👌 -எஸ்.சந்திரசேகர் #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #💐Have a nice day🤩 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #😇Take care Quotes📜 #🌹Happy Wednesday