ல.செந்தில் ராஜ்
ShareChat
click to see wallet page
@senthilrajl
senthilrajl
ல.செந்தில் ராஜ்
@senthilrajl
I Am Born To Win, I AM DIVINE.Think Big.
எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ 🙏💖எங்கேயும் எப்போதும் என்னுடனே🔥🙏அவ்வளவு எளிதில் விடமாட்டேன்🥰💖 எம்பெருமானே பிரார்தனைகள் கை கூடுகிறது என் அப்பனே 🌺🙏 கோடானு கோடி நன்றிகள்.🙏😇 #🙏🏼ஓம் நமசிவாய #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஆன்மீகம் #🙏ஹர ஹர மஹாதேவ்⭐
🙏🏼ஓம் நமசிவாய - ShareChat
00:45
கர்மாவின் ரகசியம் நல்லவர்களுக்கு ஏன் துன்பம்? கெட்டவர்களுக்கு ஏன் இன்பம்? நம் அனைவரின் மனத்திலும் ஒரு கட்டத்தில் எழும் மிகப் பெரிய கேள்வி இது: “கர்மா உண்மை என்றால்… கெட்டவர்கள் ஏன் தொடர்ந்து வெற்றி பெறுகிறார்கள்? நல்லவர்களோ ஏன் எப்போதும் போராடிக் கொண்டே இருக்கிறார்கள்?” ஊழல் செய்பவர்கள் அதிகாரத்தில் இருக்கிறார்கள். பேராசை கொண்டவர்கள் செல்வத்தை குவிக்கிறார்கள். இரக்கமற்றவர்கள் பதவியில் அமர்கிறார்கள். ஆனால்… நேர்மையாக வாழ்பவர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள். உதவி மனப்பான்மை கொண்டவர்கள் வறுமையில் வாடுகிறார்கள். சேவை செய்தவர்களுக்கு அங்கீகாரம் கிடைப்பதில்லை. இதைக் கண்டால் இயல்பாகவே கர்மாவின் மீது சந்தேகம் எழுகிறது. “நான் எவ்வளவு நல்லது செய்தாலும் என் வாழ்க்கை ஏன் இப்படி?” “அவன் செய்த அநியாயங்களுக்கு ஏன் தண்டனை வரவில்லை?” இந்தக் கேள்விகளுக்கான பதில்தான் — கர்மாவின் உண்மையான ரகசியம். கர்மா என்றால் என்ன? ‘Karma is a Boomerang’ என்று இந்து மதம் சாராதவர்கள்கூட கூறுகிறார்கள். உலகின் பெரும்பாலான பழமையான ஆன்மிக மரபுகள் அனைத்தும் ஒரே விஷயத்தையே வலியுறுத்துகின்றன: செயலுக்கு ஏற்ப விளைவு தவறாமல் வரும். கர்மா என்பது நமது செயல்களின் கணக்கு. நல்ல செயல் → நன்மை தீய செயல் → துன்பம் ஆனால்… இந்த விளைவு உடனடியாக வர வேண்டும் என்பதில்லை. கர்மா உடனடியாக தண்டிப்பதில்லை இதுதான் பலர் புரிந்து கொள்ளாத முக்கியமான விஷயம். கர்மா: அவசரப்படாது உணர்ச்சி வசப்படாது ஆனால்… ஒருபோதும் தவறுவதில்லை ஒருவரின் கர்ம வினை இந்தப் பிறவியிலேயே முடிந்து விட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அது: அடுத்த பிறவிக்கும் தொடரலாம் சந்ததிகளையும் பாதிக்கலாம் இதைத்தான் சிலப்பதிகாரம் மிக அழகாகச் சொல்கிறது: “ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்.” மகாபாரதம் சொல்லும் கர்மா பாடம் மகாபாரதத்தில் சத்தியவதி, தனது மகன்களின் வம்சமே அரசாள வேண்டும் என்பதற்காக, பீஷ்மர் அரச பதவி பெறக்கூடாது அவர் சந்ததி ஆட்சி செய்யக் கூடாது அவர் வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சாரியாக இருக்க வேண்டும் என்று வாக்கு பெற்றுக் கொள்கிறாள். இது ஒரு பெரும் கர்ம பாவம். அதன் விளைவு? சத்தியவதியின் மகன்கள் அற்ப ஆயுளில் மரணம் அவள் வம்சமே மகாபாரதப் போரில் அழிவு பரீட்சித்து மன்னர் வரை அந்த கர்ம வினை தொடர்ச்சி ஒருவரின் பாவ வினை அவருடன் மட்டுமல்ல — அவரது சந்ததியையும் விடுவதில்லை. இராமாயணம் காட்டும் கர்ம உண்மை இராமாயணத்தில் தசரதன், அறியாமல் கண் தெரியாத பெற்றோரின் மகனை அம்பெய்தி கொன்றிருப்பான். அந்த ஒரே பாவத்தின் பலன்: அவனும் தனது உயிரைப் போல் நேசித்த மகன் ராமனைப் பிரிந்து புத்திர சோகத்தில் உயிரிழக்கிறான். கர்மா தாமதமாக வரும்; ஆனால் துல்லியமாக வரும். கெட்டவன் ஏன் சந்தோஷமாக இருக்கிறான்? ஒரு தீயவன்: செல்வம் சேர்க்கலாம் அதிகாரம் பெறலாம் புகழோடு வாழலாம் ஆனால் உண்மையில் என்ன நடக்கிறது தெரியுமா? அவன் தனக்கான தண்டனையை மேலும் மேலும் சேர்த்துக் கொண்டிருக்கிறான். அந்த இன்பங்கள்: கர்ம கடனாக மாறுகிறது எதிர்கால துன்பத்தை பெருக்குகிறது நல்லவன் ஏன் துன்பப்படுகிறான்? ஒரு நல்லவன் துன்பப்படும்போது: அவன் தனது பழைய கர்மக் கணக்கை முடித்துக் கொண்டிருக்கிறான். அவன்: விடிவு காலத்தை நெருங்குகிறான் முக்தி பாதையில் பயணிக்கிறான் அல்லது அடுத்த பிறவிக்கான உயர்ந்த வாழ்வை உருவாக்குகிறான் துன்பம் தண்டனை அல்ல; அது விடுதலைக்கு முன் வரும் சுத்திகரிப்பு. இதுதான் கர்மாவின் உண்மை கர்மா கணக்குப் போடுகிறது உடனடி தீர்ப்பு தராது ஆனால் இறுதி தீர்ப்பு தவறாது நல்லது ஒருபோதும் வீணாகாது கெட்டது ஒருபோதும் தப்பாது இதுவே கர்மாவின் நித்திய நீதி... கர்மா எவ்வாறு கழிகிறது அல்லது . கர்மாவின் பலன் எப்போது குறைகிறது? நம் மனதால் நல்லதே செய்த போதும் அல்லதாக நம்மில் இளையவர்களால் அவமானப்படும்போது கோபப்படாமல் ஏற்றுக் கொண்டால் கர்மாவின் பலன் குறையும் எந்த ஒரு சூழ்நிலையிலும் இறைவனை முழுமையாக நம்பி குலதெய்வ வழிபாடு இஷ்ட தெய்வ வழிபாடு முழு மன நம்பிக்கையோடு செய்யும்போது கர்மாவின் பலன் குறையும். . உதவி தேவைப்படுபவர்களுக்கு அவர்கள் கேட்காமலேயே உதவி செய்து அவர்களுக்கு செய்த உதவியை எந்த ஒரு நபருக்கும் தெரியப்படுத்தாமல் ரகசியமாக இருந்தால் கர்மாவின் பலன் குறையும் உலகத்தில் பிறந்த உயிர்கள் அனைத்தும் இறைவனின் படைப்பே என்பதை உணர்ந்து அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்தும் போதும் கர்மாவின் பலன் குறையும். சிவாய நம🙇 சிவமே ஜெயம் 🌹சிவமே தவம் . எங்கும் சிவ நாமம்‌ ஒலிக்கட்டும். சிவனே சரணாகதி* *அப்பனே அருணாச்சலா உன் பொற் கழல் பின்பிற்றி🦜🦜 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🙏ஆன்மீகம் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏🏼ஓம் நமசிவாய #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶
🙏ஹர  ஹர மஹாதேவ்⭐ - ShareChat
00:19
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #💐Have a nice day🤩
🌻🌻காலை வணக்கம்🌻🌻 - ShareChat
00:15
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #💐Have a nice day🤩 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
🌻🌻காலை வணக்கம்🌻🌻 - ShareChat
00:12
சிவ சிவ கனவில் சிவன் தேன்றினால் ! ********************************* தினமும் நாம் தூங்கும் பொழுது வினோதமான சில கனவுகள் வரும். நாம் தூங்குவதற்கு முன் யோசிக்கும் சில விஷயங்களும் கனவாக வர வாய்ப்புள்ளது. சிலருக்குக் கனவுகளில் வரும் சில காட்சிகள் நிஜத்திலும் நடக்கும். இது போல் சிவனைப் பற்றிய கனவு நமக்குத் தோன்றினால், அதற்கு என்ன அர்த்தம்?? அது போன்ற கனவுகளுக்கு நமது வாழ்க்கையுடன் என்ன சமந்தம் உள்ளது என்பதைப் பற்றி இங்குத் தெரிந்து கொள்ளுங்கள். அனைவருக்கும் சிவன் சமந்தமான கனவுகள் தோன்றாது. ******************************* ஆன்மீகக் கனவுகள் தோன்றுவதற்கான முக்கியமான காரணம், நீங்கள் உங்களைத் தாண்டியும் மற்றவர்களின் நலனைப் பற்றி யோசிக்கும் பொழுதுதான் தோன்றும். அப்படித் தோன்றும் கனவுகள் சில நடக்கப் போகும் சம்பவங்களை முன்கூட்டியே தெரிவிக்கப் போகிறது என்பது அர்த்தம். ******************************** சிவலிங்கம் ஒருவரது கனவில் தோன்றினால், அது அவர்கள் கடந்த காலத்தில் சிவனைத் தினசரி வழிபட்டதாலும், அவரைக் காண தவமாய் இருந்ததாலும், அது போன்ற கனவுகள் இப்பொழுது தோன்றும். அவர்களுக்கு நடக்கப் போகும் பிரச்சினைகள் விரைவில் தீரப்போகிறது என்பதை உணர்த்தவே இது போன்ற கனவுகள் தோன்றும். *********************************** சிவன், பார்வதி இருவரும் கனவில் தோன்றினால், நீங்கள் எதிர்பார்க்கும் வாய்ப்புகள் வந்தடையும். கனவில் சிவன், பார்வதி இருவரும் தோன்றுவது நல்ல சகுனமாகும். ******************************** கனவில் சிவ தாண்டவம் வந்தால், தொடர்ந்து வரும் பிரச்சினைகள் விரைவில் முடிவுக்கு வரும். பணத்தேவைகள் சில போராட்டங்களுக்குப் பின்பு கைக்கு வரும் என்பதை உணர்த்தும். ********************************* பெண்கள் கனவில் சிவன் கோவில் தோன்றுவது, அவர்களுக்கு இரு குழந்தைகள் பிறக்கப் போகிறது என்பதை உணர்த்தும். கனவில் கோவில்கள் தோன்றினால், நோய்கள் அண்டாது என்றும் கூறுவார்கள்!!! ****************************** சிவனின் தலையில் உள்ள பொளர்ணமி நிலவு கனவில் தோன்றினால், வாழ்க்கையில் மிக முக்கியமான முடிவுகளை எடுக்கும் தருணம் வந்துவிட்டது என்பதை உணர்த்துவதற்கு!!! சிவ சிவ நமசிவாய வாழ்க #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஆன்மீகம் #🙏ஹர ஹர மஹாதேவ்⭐
🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 - ShareChat
00:15
🕉🙏🌺ஓம் நமசிவாய 🌺🙏🕉 🕉🙏🌺தேய்பிறை சோமவார பிரதோஷம் இன்று சிவபெருமானை வணங்கினால் இத்தனை நன்மைகளா?16/03/2026🌺🙏🕉 🕉சோமவார பிரதோசம் சிறப்பு வாய்ந்தது. இன்றைய தினம் சிவனை தரிசித்தால் கடன், வறுமை, நோய்ப்பயம் போன்றவை விலகும். பிரதோஷ தரிசனம் காணும்வரை உணவு தவிர்த்து முழு விரதம் இருக்க வேண்டும். சோம வார பிரதோஷ நாளில் இருக்கும் விரதம் ஆயிரம் சாதாரண தினப் பிரதோஷப்பலனைத் தரும் என்பது நம்பிக்கை. இன்றைய தினம் கோவிலுக்கு செல்ல முடியாத நிலை உள்ளதால் வீட்டில் பூஜை அறையில் காப்பரிசி படையலிட்டு சிவனை வணங்கலாம். 🕉சோமன் என்றால் சிவன், சோமவாரம் திங்கட்கிழமை, சிவனுக்கு உகந்த திங்கட்கிழமை பிரதோஷம் தீராத வினையெல்லாம் தீர்த்துவைப்பவன் வேதநாயகன், பரமேஸ்வரன். அதிலும், பிரதோஷ காலத்தில் திருநீலகண்டனை வழிபட்டால் அத்தனை தோஷங்களும் நீங்கும் என்கின்றன ஞானநூல்கள். 🕉சிவ ஆலயத்திற்கு சென்றாலே நந்தியின் காதில் கஷ்டங்களை கூறி வணங்குவது பலரது வழக்கம் பிரதோஷ நாளில் நந்தியிடம் அதிக வேண்டுகோள் வைப்பார்கள். பிரதோஷ வழிபாடு சிவனுக்கு உகந்தது. மாலை நேரத்தில் பிரதோஷ நேரத்தில் சிவனையும் நந்தியையும் வழிபட வேண்டும். 🕉நம்பிக்கையோடு நமசிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை உளமார ஜபித்து, பிரதோஷ காலத்தில் நந்தியம்பெருமானுக்கு நடக்கும் அபிஷேக ஆராதனையிலும், ஈஸ்வர பூஜையிலும் கலந்துகொண்டு இறைவனை வழிபட்டால் நினைத்தது நடக்கும் தீவினை விலகும்; நன்மையெல்லாம் பெருகும். 🕉தேய்பிறை சோமவார பிரதோஷம் 🕉சிவபெருமானை நினைத்து தியானம் செய்வதற்கு மிக உகந்த நேரம் பிரதோஷ நேரம் தான். பிரதோஷ நேரத்தில் உலகம் ஒடுங்குகிறது. எனவே ஈசனிடம் நாம் ஒடுங்க அதுவே சரியான நேரம். பிரதோஷ நேரத்தில் சிவன் ஆடுகின்ற ஆனந்த நடனத்தை தேவர்களும், முனிவர்களும் கண்டுகளிப்பதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது. 🕉எத்தனை பிரதோஷங்கள் 🕉பிரதோஷம் நித்தியப் பிரதோஷம், பட்சப் பிரதோஷம், பிரளயப் பிரதோஷம் என இருபது வகை பிரதோஷங்கள் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. பிரதோஷ காலங்களில் ஈசனை தரிசிப்பதால், சகல பாவங்களும் விலகி, புண்ணியம் சேரும், சகல செளபாக்கியங்களும் உண்டாகும். இந்திரனுக்கு சமமான புகழும் செல்வாக்கும் கிட்டும். அன்று செய்யப்படும் எந்த தானமும் அளவற்ற பலனைக் கொடுக்கும். பிறப்பே இல்லாத முக்தியை கொடுக்கும் என்றெல்லாம் புராணங்கள் தெரிவிக்கின்றன. 🕉நந்தியிடம் வேண்டுதல் 🕉சிவபெருமானுக்கு பாதுகாவலனாக இருப்பதுதான் நந்தி. சிவனை பார்க்க செல்பவர்கள் அதன் காவலனான நந்தியிடம் தங்கள் குறைகளையும் வேண்டுதல்களையும் சொன்னால் நந்திபெருமான் சிவனிடம் கொண்டு சேர்ப்பார் என்பது நம்பிக்கை. அந்த வேண்டுதல் நிறைவேறவும் செய்யும். நந்தியின் காதில் சொல்லும் நடைமுறை என்பது எல்லா கோவில்களிலும் இருக்கிறது. பெரிய கோவிலில் உள்ள சிறிய நந்தியிடம் சொன்னால் மகா நந்திக்கும் கேட்கும். வேண்டுதல் சீக்கிரமே நிறைவேறும் என்பதுதான் இதன் கூடுதல் சிறப்பு 🕉வறுமை விலகும் 🕉பிரதோஷ நாளில் சிவனை தரிசித்தால் கடன், வறுமை, நோய்ப்பயம் போன்றவை விலகும். பிரதோஷ தரிசனம் காணும்வரை உணவு தவிர்த்து முழு விரதம் இருக்க வேண்டும். சோம வார பிரதோஷ நாளில் இருக்கும் விரதம் ஆயிரம் சாதாரண தினப் பிரதோஷப்பலனைத் தரும் என்பது நம்பிக்கை. இன்று ஆலயம் செல்ல முடியாத நிலை உள்ளதால் பூஜை அறையில் சிவன் படத்திற்கு வில்வ மாலை, திராட்சை மாலை அணிவித்து வணங்கலாம். 🕉தடைகள் நீங்கும் ⚛அபிஷேகப்பிரியாரான சிவனுக்கு தேன், பால், பன்னீர், சந்தனம், வில்வ இலை, தாமரை பஞ்சாமிர்தம் வாங்கித்தரலாம். சிவ பெருமானுக்கும் நந்திக்கும் தூய பசும்பால் அபிஷேகத்திற்கு வாங்கித்தரலாம். கொண்டக்கடலை எலுமிச்சை சாதமோ தயிர் சாதமோ, சர்க்கரைப் பொங்கலோ வெண்பொங்கலோ இறைவனுக்கு நைவேத்தியம் செய்து, பக்தர்களுக்கு கொடுப்பதன் மூலம் தடைகள் நீங்கும் முன்னேற்றம் கிடைக்கும் 🕉அபிஷேக பொருட்கள் ⚛பிரதோஷத்தை முன்னிட்டு சிவனுக்கும் நந்திக்கும் என்ன பொருள் வாங்கிக்கொடுத்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம். பால் - நோய் தீரும் நீண்ட ஆயுள் கிடைக்கும். தயிர் - பல வளமும் உண்டாகும், தேன் - இனிய சாரீரம் கிடைக்கும். பழங்கள் - விளைச்சல் பெருகும், பஞ்சாமிர்தம் - செல்வம் பெருகும், நெய் - முக்தி பேறு கிட்டும். இளநீர் - நல்ல மக்கட் பேறு கிட்டும். சர்க்கரை - எதிர்ப்புகள் மறையும். எண்ணெய் - சுகவாழ்வு, சந்தனம் - சிறப்பான சக்திகள் பெறலாம், மலர்கள் - தெய்வ தரிசனம் கிட்டும். 🕉என்ன படைக்கலாம் 🕉பச்சரிசி, பாசிப்பருப்பு ஆகியவற்றை தண்ணீரில் ஊற வைத்து பிறகு அதை வடிகட்டி வெல்லம், தேங்காய்ப்பூ சேர்த்து காப்பரிசி தயாரிக்க வேண்டும். பிரதோஷ காலத்தில் இந்த காப்பரிசி நிவேதனத்தை சிவன் நந்திக்கு சமர்பிப்பது மிகவும் சிறப்பானது. நந்தியம்பெருமானுக்கு அருகம்புல் அல்லது வில்வ மாலை சார்த்தி நெய் விளக்கு ஏற்றி பூஜை செய்யலாம். வீட்டில் எலுமிச்சை சாதமோ தயிர் சாதமோ, சர்க்கரைப் பொங்கலோ வெண்பொங்கலோ இறைவனுக்கு நைவேத்தியம் செய்து, பக்தர்களுக்கு கொடுப்பதன் மூலம் தடைகள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும்.🕉🙏🌺 🕉சிவ தரிசனம் ⚛பிரதோஷ நேரத்தில் நமசிவாய மந்திரம் ஜபிப்பதால், நமது முன்னோர்கள், ஏழு தலைமுறையினர் செய்த பஞ்சமாபாதகங்கள் யாவும் அழிந்துவிடும் எனப்படுகிறது. பிரதோஷ காலத்தில் பார்வதியுடன் கூடிய சந்திரசேகரன் ரிஷப வாகனத்தில் ஆலயத்தை மூன்று முறை வலம் வருவதைப் பார்த்தால் சிறப்பு. முதல் சுற்றில் செய்யப்படும் வேதபாராயணத்தையும், இரண்டாம் சுற்றில் செய்யப்படும் திருமுறை பாராயணத்தையும், மூன்றாம் சுற்றில் நாதஸ்வர இன்னிசையையும் உடன் வலம் வந்தபடி கேட்பதால் தோஷங்கள் நீங்கும். பிரதோஷ காலத்தில் சக்தியோடும், முருகப்பெருமானோடும் இணைந்த சோமாஸ்கந்த மூர்த்தியாகத் தரிசித்தால் குடும்ப உறவுகள் மேம்படும். இந்த நேரத்தில் நடராஜ மூர்த்தியை வழிபட்டால் வாழ்வில் முன்னேற்றம் கிடைக்கும். ⚛பிரிந்தவரையும் ஒன்று சேர்க்கும் மகிமை வாய்ந்த சோமவார விரதம் ⚛சோமவார விரதத்தை மேற்கொள்ளும் நாளில் அதிகாலையில் பெண்கள், நீராடிய பிறகு, வீட்டில் விளக்கேற்றி விரதத்தைத் தொடங்கலாம் 🕉சோமன் என்ற சொல்லுக்கு பார்வதியோடு இணைந்த சிவபெருமான் என்ற பொருள் உண்டு. திங்கட்கிழமையை சோம வாரம் எனக் கூறுவார்கள். திங்கட்கிழமை சிவனுக்கு மிகவும் உகந்த நாள். திங்கட்கிழமை கடைபிடிக்கும் விரதம் சோமவார விரதம் என கூறப்படுகிறது. 🌺🙏🕉ஓம் நமசிவாய🕉🙏🌺 🌺🙏🕉சிவாய நம ஓம்🕉🙏🌼 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🙏ஆன்மீகம் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼ஓம் நமசிவாய
🙏ஹர  ஹர மஹாதேவ்⭐ - ShareChat
01:44
🕉🙏🌺ஓம் நமசிவாய 🌺🙏🕉 🕉🙏🌺தேய்பிறை சோமவார பிரதோஷம் இன்று சிவபெருமானை வணங்கினால் இத்தனை நன்மைகளா?16/03/2026🌺🙏🕉 🕉சோமவார பிரதோசம் சிறப்பு வாய்ந்தது. இன்றைய தினம் சிவனை தரிசித்தால் கடன், வறுமை, நோய்ப்பயம் போன்றவை விலகும். பிரதோஷ தரிசனம் காணும்வரை உணவு தவிர்த்து முழு விரதம் இருக்க வேண்டும். சோம வார பிரதோஷ நாளில் இருக்கும் விரதம் ஆயிரம் சாதாரண தினப் பிரதோஷப்பலனைத் தரும் என்பது நம்பிக்கை. இன்றைய தினம் கோவிலுக்கு செல்ல முடியாத நிலை உள்ளதால் வீட்டில் பூஜை அறையில் காப்பரிசி படையலிட்டு சிவனை வணங்கலாம். 🕉சோமன் என்றால் சிவன், சோமவாரம் திங்கட்கிழமை, சிவனுக்கு உகந்த திங்கட்கிழமை பிரதோஷம் தீராத வினையெல்லாம் தீர்த்துவைப்பவன் வேதநாயகன், பரமேஸ்வரன். அதிலும், பிரதோஷ காலத்தில் திருநீலகண்டனை வழிபட்டால் அத்தனை தோஷங்களும் நீங்கும் என்கின்றன ஞானநூல்கள். 🕉சிவ ஆலயத்திற்கு சென்றாலே நந்தியின் காதில் கஷ்டங்களை கூறி வணங்குவது பலரது வழக்கம் பிரதோஷ நாளில் நந்தியிடம் அதிக வேண்டுகோள் வைப்பார்கள். பிரதோஷ வழிபாடு சிவனுக்கு உகந்தது. மாலை நேரத்தில் பிரதோஷ நேரத்தில் சிவனையும் நந்தியையும் வழிபட வேண்டும். 🕉நம்பிக்கையோடு நமசிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை உளமார ஜபித்து, பிரதோஷ காலத்தில் நந்தியம்பெருமானுக்கு நடக்கும் அபிஷேக ஆராதனையிலும், ஈஸ்வர பூஜையிலும் கலந்துகொண்டு இறைவனை வழிபட்டால் நினைத்தது நடக்கும் தீவினை விலகும்; நன்மையெல்லாம் பெருகும். 🕉தேய்பிறை சோமவார பிரதோஷம் 🕉சிவபெருமானை நினைத்து தியானம் செய்வதற்கு மிக உகந்த நேரம் பிரதோஷ நேரம் தான். பிரதோஷ நேரத்தில் உலகம் ஒடுங்குகிறது. எனவே ஈசனிடம் நாம் ஒடுங்க அதுவே சரியான நேரம். பிரதோஷ நேரத்தில் சிவன் ஆடுகின்ற ஆனந்த நடனத்தை தேவர்களும், முனிவர்களும் கண்டுகளிப்பதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது. 🕉எத்தனை பிரதோஷங்கள் 🕉பிரதோஷம் நித்தியப் பிரதோஷம், பட்சப் பிரதோஷம், பிரளயப் பிரதோஷம் என இருபது வகை பிரதோஷங்கள் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. பிரதோஷ காலங்களில் ஈசனை தரிசிப்பதால், சகல பாவங்களும் விலகி, புண்ணியம் சேரும், சகல செளபாக்கியங்களும் உண்டாகும். இந்திரனுக்கு சமமான புகழும் செல்வாக்கும் கிட்டும். அன்று செய்யப்படும் எந்த தானமும் அளவற்ற பலனைக் கொடுக்கும். பிறப்பே இல்லாத முக்தியை கொடுக்கும் என்றெல்லாம் புராணங்கள் தெரிவிக்கின்றன. 🕉நந்தியிடம் வேண்டுதல் 🕉சிவபெருமானுக்கு பாதுகாவலனாக இருப்பதுதான் நந்தி. சிவனை பார்க்க செல்பவர்கள் அதன் காவலனான நந்தியிடம் தங்கள் குறைகளையும் வேண்டுதல்களையும் சொன்னால் நந்திபெருமான் சிவனிடம் கொண்டு சேர்ப்பார் என்பது நம்பிக்கை. அந்த வேண்டுதல் நிறைவேறவும் செய்யும். நந்தியின் காதில் சொல்லும் நடைமுறை என்பது எல்லா கோவில்களிலும் இருக்கிறது. பெரிய கோவிலில் உள்ள சிறிய நந்தியிடம் சொன்னால் மகா நந்திக்கும் கேட்கும். வேண்டுதல் சீக்கிரமே நிறைவேறும் என்பதுதான் இதன் கூடுதல் சிறப்பு 🕉வறுமை விலகும் 🕉பிரதோஷ நாளில் சிவனை தரிசித்தால் கடன், வறுமை, நோய்ப்பயம் போன்றவை விலகும். பிரதோஷ தரிசனம் காணும்வரை உணவு தவிர்த்து முழு விரதம் இருக்க வேண்டும். சோம வார பிரதோஷ நாளில் இருக்கும் விரதம் ஆயிரம் சாதாரண தினப் பிரதோஷப்பலனைத் தரும் என்பது நம்பிக்கை. இன்று ஆலயம் செல்ல முடியாத நிலை உள்ளதால் பூஜை அறையில் சிவன் படத்திற்கு வில்வ மாலை, திராட்சை மாலை அணிவித்து வணங்கலாம். 🕉தடைகள் நீங்கும் ⚛அபிஷேகப்பிரியாரான சிவனுக்கு தேன், பால், பன்னீர், சந்தனம், வில்வ இலை, தாமரை பஞ்சாமிர்தம் வாங்கித்தரலாம். சிவ பெருமானுக்கும் நந்திக்கும் தூய பசும்பால் அபிஷேகத்திற்கு வாங்கித்தரலாம். கொண்டக்கடலை எலுமிச்சை சாதமோ தயிர் சாதமோ, சர்க்கரைப் பொங்கலோ வெண்பொங்கலோ இறைவனுக்கு நைவேத்தியம் செய்து, பக்தர்களுக்கு கொடுப்பதன் மூலம் தடைகள் நீங்கும் முன்னேற்றம் கிடைக்கும் 🕉அபிஷேக பொருட்கள் ⚛பிரதோஷத்தை முன்னிட்டு சிவனுக்கும் நந்திக்கும் என்ன பொருள் வாங்கிக்கொடுத்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம். பால் - நோய் தீரும் நீண்ட ஆயுள் கிடைக்கும். தயிர் - பல வளமும் உண்டாகும், தேன் - இனிய சாரீரம் கிடைக்கும். பழங்கள் - விளைச்சல் பெருகும், பஞ்சாமிர்தம் - செல்வம் பெருகும், நெய் - முக்தி பேறு கிட்டும். இளநீர் - நல்ல மக்கட் பேறு கிட்டும். சர்க்கரை - எதிர்ப்புகள் மறையும். எண்ணெய் - சுகவாழ்வு, சந்தனம் - சிறப்பான சக்திகள் பெறலாம், மலர்கள் - தெய்வ தரிசனம் கிட்டும். 🕉என்ன படைக்கலாம் 🕉பச்சரிசி, பாசிப்பருப்பு ஆகியவற்றை தண்ணீரில் ஊற வைத்து பிறகு அதை வடிகட்டி வெல்லம், தேங்காய்ப்பூ சேர்த்து காப்பரிசி தயாரிக்க வேண்டும். பிரதோஷ காலத்தில் இந்த காப்பரிசி நிவேதனத்தை சிவன் நந்திக்கு சமர்பிப்பது மிகவும் சிறப்பானது. நந்தியம்பெருமானுக்கு அருகம்புல் அல்லது வில்வ மாலை சார்த்தி நெய் விளக்கு ஏற்றி பூஜை செய்யலாம். வீட்டில் எலுமிச்சை சாதமோ தயிர் சாதமோ, சர்க்கரைப் பொங்கலோ வெண்பொங்கலோ இறைவனுக்கு நைவேத்தியம் செய்து, பக்தர்களுக்கு கொடுப்பதன் மூலம் தடைகள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும்.🕉🙏🌺 🕉சிவ தரிசனம் ⚛பிரதோஷ நேரத்தில் நமசிவாய மந்திரம் ஜபிப்பதால், நமது முன்னோர்கள், ஏழு தலைமுறையினர் செய்த பஞ்சமாபாதகங்கள் யாவும் அழிந்துவிடும் எனப்படுகிறது. பிரதோஷ காலத்தில் பார்வதியுடன் கூடிய சந்திரசேகரன் ரிஷப வாகனத்தில் ஆலயத்தை மூன்று முறை வலம் வருவதைப் பார்த்தால் சிறப்பு. முதல் சுற்றில் செய்யப்படும் வேதபாராயணத்தையும், இரண்டாம் சுற்றில் செய்யப்படும் திருமுறை பாராயணத்தையும், மூன்றாம் சுற்றில் நாதஸ்வர இன்னிசையையும் உடன் வலம் வந்தபடி கேட்பதால் தோஷங்கள் நீங்கும். பிரதோஷ காலத்தில் சக்தியோடும், முருகப்பெருமானோடும் இணைந்த சோமாஸ்கந்த மூர்த்தியாகத் தரிசித்தால் குடும்ப உறவுகள் மேம்படும். இந்த நேரத்தில் நடராஜ மூர்த்தியை வழிபட்டால் வாழ்வில் முன்னேற்றம் கிடைக்கும். ⚛பிரிந்தவரையும் ஒன்று சேர்க்கும் மகிமை வாய்ந்த சோமவார விரதம் ⚛சோமவார விரதத்தை மேற்கொள்ளும் நாளில் அதிகாலையில் பெண்கள், நீராடிய பிறகு, வீட்டில் விளக்கேற்றி விரதத்தைத் தொடங்கலாம் 🕉சோமன் என்ற சொல்லுக்கு பார்வதியோடு இணைந்த சிவபெருமான் என்ற பொருள் உண்டு. திங்கட்கிழமையை சோம வாரம் எனக் கூறுவார்கள். திங்கட்கிழமை சிவனுக்கு மிகவும் உகந்த நாள். திங்கட்கிழமை கடைபிடிக்கும் விரதம் சோமவார விரதம் என கூறப்படுகிறது. 🌺🙏🕉ஓம் நமசிவாய🕉🙏🌺 🌺🙏🕉சிவாய நம ஓம்🕉🙏🌼 #🙏🏼ஓம் நமசிவாய #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஆன்மீகம் #🙏ஹர ஹர மஹாதேவ்⭐
🙏🏼ஓம் நமசிவாய - ShareChat
01:02
#🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #💐Have a nice day🤩 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞
🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 - ShareChat
00:10
🌼🔱🌼ஓம் நமசிவாய ஓம் 🌼🔱🌼 🌼🔱🌼ஓம் சங்கரா போற்றி 🌼🔱🌼 🌼🕉️🌼ஓம் தில்லை எம்பெருமானே போற்றி 🌼🕉️🌼 🌼🕉️🌼ஓம் தென்னாடுடைய சிவனே போற்றி 🌼🕉️🌼 🔱பராய்த்துறை மேவிய பரனே, போற்றி! சிராப்பள்ளி மேவிய சிவனே, போற்றி! மற்று ஓர் பற்று இங்கு அறியேன், போற்றி! குற்றாலத்து எம் கூத்தா, போற்றி! கோகழி மேவிய கோவே, போற்றி! ஈங்கோய்மலை எம் எந்தாய், போற்றி! பாங்கு ஆர் பழனத்து அழகா, போற்றி! கடம்பூர் மேவிய விடங்கா, போற்றி!🕉️ 🔱ஓம் நமசிவாய 🔱 🙏வாழ்க வளமுடன்🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🙏ஆன்மீகம் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏼சிவ பெருமான் பாடல்கள்
🙏ஹர  ஹர மஹாதேவ்⭐ - ShareChat
00:22
#🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #💐Have a nice day🤩
🥰அன்புடன் காலை வணக்கம்🌞 - ShareChat
00:59