
ல.செந்தில் ராஜ்
@senthilrajl
I Am Born To Win, I AM DIVINE.Think Big.
#💫வைகாசி விசாகம்🙏 #murugan #Muruga #thiruchentur murug
an #முருகன்
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #💐Have a nice day🤩 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
#🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #💐Have a nice day🤩 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🌻🌻காலை வணக்கம்🌻🌻
*#வைகாசி_மாத_வளர்பிறை_குருவார_பிரதோஷம் #திருமண_தடை_நீங்கி #மாங்கல்ய_பலம்_பெருக_சிவனை_வணங்குங்கள்.*
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
வியாழக்கிழமை பிரதோஷம் சிறப்பான நாள்.இந்த நாளில் சிவ ஆலயம் சென்று வணங்கி அபிஷேக பொருட்கள் வாங்கிக்கொடுத்தால் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. குருபகவானுக்கு உகந்த இந்த நாளில் பிரதோஷம் வருவது கூடுதல் சிறப்பு. இன்றைய தினம் பிரதோஷபூஜைகளில் பங்கேற்றால் துன்பங்கள் நீங்கும் கஷ்டங்கள் காணாமல் போகும். தோஷங்களும் தீரும். திருமணத்தடைகள் விலகி மாங்கல்ய பலன் கிடைக்கும்.
☘️
குருபகவான் அருள்பாலிக்கும் ஆலயங்களில் இன்றைய தினம் பிரதோஷ பூஜைகள் சிறப்பாக நடைபெறும். குருவாரமான இன்று தட்சிணாமூர்த்திக்கு உகந்த நாள். வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை தரிசித்து வழிபடுவார்கள் பக்தர்கள். மாலையில், சிவாலயத்துக்குச் சென்று தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் வஸ்திரம் சார்த்தி விளக்கேற்றி வழிபடுவார்கள். தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் மாணவர்கள் கல்வியிலும் ஞானத்திலும் சிறந்து விளங்குவார்கள்.
☘️
தினமும் பகலும், vஇரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய, மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலம் பிரதோஷ காலமாகும். இந்த நேரத்தில் ஈசனைத் தரிசனம் செய்வது சிறப்பு. திரயோதசி திதி வரும் நாளில் சிவ ஆலயங்களில் அவரது வாகனமான நந்தி தேவருக்கு பிரதோஷ காலத்தில் சிறப்பாக அபிஷேகம் செய்து வழிபடுவார்கள். நந்திக்கு தீபாராதனை முடிந்த பின்னர் சிவனுக்கு ஆராதனை செய்யும் போது நந்தி தேவரின் கொம்புகளுக்கு இடையே சிவனை தரிசனம் செய்வது சிறப்பு.
☘️
*#குருவார_பிரதேஷம்*
குருவாரம் எனப்படும் வியாழக்கிழமைகளில் பிரதோஷம் வருவது சிறப்பு. சிவனை தரிசனம் செய்வதோடு நந்திதேவரையும் வணங்கலாம். நவகிரகங்களில் குருபகவானை வணங்கலாம். இன்றைய தினம் திருச்செந்தூர், ஆலங்குடி, பாடி திருவலிதாயம், தென்திட்டை குருபகவான் sஆலயங்களிலும் இன்றைய தினம் குருவார பிரதோஷம் சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் நடைபெறும்.
☘️
*#குருபகவான்_வழிபாடு*
குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள். இன்றைய தினம் குருபகவானுக்கும் சிவபெருமானுக்கும் தும்பைப்பூ மாலை சாற்றி வணங்கலாம். ஏழு பிறவிகளிலும் செய்த தோஷங்கள் நீங்கும். பிரம்மஹத்தி தோஷம் விலகும் என்பது ஐதீகம்.
☘️
*#குருதிசை_குரு_புத்தி*
குரு திசை குரு புத்தி நடப்பவர்கள் தனுசு, மீனம் ராசி லக்னத்தில் பிறந்தவர்கள் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் இன்றைய தினம் மாலையில் சிவ ஆலயம் சென்று நந்தியை தரிசனம் செய்யலாம். நந்தி தேவருக்கு சந்தனம், பால், தயிர், திரவியப் பொடி, பன்னீர், தேன் முதலான mஅபிஷேகப் பொருட்களை வாங்கிக் கொடுக்கலாம். அருகம்புல், செவ்வரளி, வில்வ இலைகளை அர்ச்சனைக்கு கொடுக்க வேண்டும். தயிர்சாதம் பிரசாத விநியோகம் செய்யலாம்.
☘️
*#துன்பங்கள்_நீங்கும்*
வியாழக்கிழமை நாளில் நடைபெறும் பிரதோஷ பூஜைகளில் பங்கேற்றால் துன்பங்கள் நீங்கும் கஷ்டங்கள் காணாமல் போகும். தோஷங்களும் தீரும். திருமணத்தடைகள் விலகி மாங்கல்ய பலன் கிடைக்கும். குருவின் அருளால் புத்திரபாக்கியம் கிடைக்கும்.
☘️
*#அபிஷேகப்_பொருட்கள்*
பிரதோஷ காலத்தில் அபிஷேக பொருட்கள் வாங்கிக் கொடுக்க நன்மைகள் நடக்கும். பால் வாங்கித்தர நோய்கள் நீங்கி நீண்ட ஆயுள் கிடைக்கும். தயிர் வாங்கித்தர தன லாபமும் வளங்களும் உண்டாகும். தேன் கொடுக்க குரல் வளம் இனிமையாகும். பழங்கள் வாங்கித்தர விளைச்சல் பெருகும். பஞ்சாமிர்தம் தர செல்வம் பெருகும். நெய் வாங்கிக் கொடுத்தால் முக்தி பேறு கிடைக்கும். இளநீர் கொடுக்க நல்ல மக்கட் பேறு கிட்டும். எண்ணெய் வாங்கித் தர சுகமான வாழ்வும் சர்க்கரை தர எதிர்ப்புகள் மறையும். சந்தனம் வாங்கித்தர சிறப்பான சக்திகள் கிடைக்கும். மலர்கள் கொடுக்க தெய்வ தரிசனம் கிடைக்கும். #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஆன்மீகம் #🙏🏼ஓம் நமசிவாய #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐
♦️இன்று 28.05.2026
🚩குறைகள் தீர்க்கும் குரு வார பிரதோஷம்
கஷ்டமில்லாது பெற்றெடுத்த
கஷ்டம் கொண்டு வாழ்கிறோம்
கஷ்டப்பட்டு வாழும்போதும்
துஷ்ட தனத்தில் ஆழ்கிறோம்
இஷ்டக்கேடு நேரும்போது
நஷ்டம் சொல்லி நடக்கிறோம்
புஷ்டியோடு வாழ நாமும்
இஷ்டங்கொண்டு மனதிலே
நிஷ்டை செய்யும் கணத்திலே
கஷ்டம் எல்லாம் மாற்றி நம்மை
இஷ்ட தெய்வம் காக்குமே -இதை
கஷ்டப்பட்டு உணர்பவர்க்கு
நஷ்டம் என்பதில்லையே..I
குரு வாரம் என்று சொல்லப்படும் பிரதோஷம் வருகிறது. இந்தப் பிரதோஷ நன்னாளில், சிவபெருமானை ஆத்மார்த்தமாக வேண்டுங்கள். பசுக்களுக்கு அகத்திக்கீரை வழங்குங்கள். நம் குறைகளையும் கவலைகளையும் தீர்த்தருள்வார் சிவனார்.
🌹பாவம் தீர தினமும் தியானம் செய்யுங்க!
மனம் தூய்மையாகவும், முன்வினைப் பாவங்கள் நீங்கவும்<<, யாருக்கும் பழிபாவங்கள் செய்யாமல் இருக்கவும் வீட்டில் உள்ள அனைவரும் தியானத்தை காலையில் முறையாகச் செய்ய வேண்டும்.
செல்வத்தில் திளைத்தாலும், வறுமையில் தவித்தாலும், துன்பத்தில் துவண்டாலும், போகங்களில் சுகித்திருந்தாலும், ஆரோக்கியம் இருந்தாலும், வியாதியில் அவதிப்பட்டாலும் தினமும் தியானம் செய்வதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.
குழந்தைப் பருவத்திலிருந்தே தியானத்தை பழகினால், மனம் பாவங்களில் ஈடுபடாமல் நல்ல விஷயங்களை நாடும் நிலை உண்டாகும். இதுவரை அநாவசியமாக எவ்வளவோ காலத்தை நாம் வீணடித்திருக்கிறோம். அதனால், தியானம் செய்வதை அன்றாட வாழ்வின் அடிப்படை கடமையாகக் கொள்ள வேண்டும்.
வாக்கினாலும், மனத்தினாலும், கை, கால் முதலியவற்றாலும் பலருக்கும் தீமை செய்திருக்கிறோம். அந்தப் பாவங்களை எல்லாம் அதே வாக்காலும், மனதாலும், கை, கால் முதலியன கொண்டே புண்ணியம் செய்து கரைத்துவிடும் நல்லெண்ணத்தை தியானத்தால் மட்டுமே பெற முடியும்.
மனிதன் வாழ்க்கையில் சில கட்டுப்பாடுக ளை வைத்துக்கொண்டால் அவனுக்கு நல்லது, கூடவே எல்லாருக்கும் நன்மை தான். முதலில் மனத்தை தூய்மையாய் வைத்துக்கொள்ளவேண்டும்.
எந்த சூழ்நிலையிலும் பிறருக்கு கெடுதல் நினைக்கக் கூடாது. சிலர் கோபம் வந்தால் பிறரை கொலை செய்யக்கூட அஞ்சமாட்டார்கள். அந்த மாதிரியான எண்ணங்களுக்கு இடம் அளிக்கக்கூடாது.
சிலபேர் பிறர் பணத்தை எப்படியாவது அபஹரணம் செய்யக் காத்துக் கொண்டேயிருப்பார்கள். அது ஒரு தப்பான எண்ணம்தான். அம்மாதிரியான எண்ணம் என்றும் வரக்கூடாது.
சிலபேர் பொய் பேசியே காரியத்தை சாதிக்க நினைப்பார்கள். அது தவறு என்று சாஸ்திரம் கூறி ‘ஸத்யமே பேசு’ என்று உபதேசம் அளிக்கிறது.
தானம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஒரு நல்ல எண்ணம்தான். அந்த தானத்தை தன் சக்திக்கு ஏற்றவாறு, காலம், தகுதி ஆகியவை அறிந்தே செய்வதுதான் நல்லது.
சிலபேர் மற்றவரின் விஷயங்களில் வீண் வம்பு பேசுவதை மிகவும் விரும்புவார்கள். இம்மாதிரி வீண்வம்புகளில் ஈடுபடாமல் இருப்பது ஒரு நல்ல குணமாகும்.
ஆசை என்பது கடல் அலைபோல்தான். வளர்ந்தால் ஒரு பொழுதும் முடிவு இருக்காது. அமைதியான மனத்துடன் இருக்க விரும்புபவன் தீராத ஆசைகளுக்கு இடம் கொடுக்கக்கூடாது.
தன் குருவை எப்பொழுதும் சேவித்துக் கொண்டு அவருடைய உபதேசத்தை எப்பொழுதம் மனனம் செய்து கொண்டு, அனைத்து ஜீவராசிகளுடன் அன்புடனும், தயவுடனும் இருந்து வாழவேண்டும்.
இவ்வித வாழ்க்கையை நடத்தி, அனைவரும் சௌக்கியமாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்யுங்கள்
பிரதோஷ காலம் என்பது, மாலை 4.30 முதல் 6 மணி வரை. இந்தக் காலத்தில் தான் பூஜைகள் நடைபெறும். பிரதோஷத்தன்று சிவபூஜையில் கலந்து கொண்டு தரிசிப்பதும் சிவநாமம் சொல்லி வழிபடுவதும் பாவங்களைப் போக்கி புண்ணியத்தைத் தந்தருளும் என்பது ஐதீகம்.
வியாழக்கிழமையை குருவாரம் என்பார்கள். குருவார வியாழக்கிழமையில், பிரதோஷநாளில், சிவனாரை நினைத்து வீட்டில் விளக்கேற்றுங்கள். சிவ ஸ்துதி பாராயணம் செய்யுங்கள். ருத்ரம் சொல்லி வழிபடுங்கள்.
பிரதோஷ நாளில், பசுவுக்கு உணவளிப்பதும் அகத்திக்கீரை வழங்குவதும் வீட்டு தரித்திரத்தை விலக்கும். கடன் முதலான பிரச்சினைகள் தீரும்.
நமசிவாயம் சொல்லி, சிவனாரை வணங்குங்கள். எல்லா நன்மைகளும் கிடைக்கப் பெறுவீர்கள். குறைகள் அனைத்தும் நீங்கப் பெறுவீர்கள்.
#ஓம்_சிவாய_நமஹ
#சிவ_சிவாய_நமஹ ....
#பிறவாமை_அருள்வாய்
#பிரதோஷ_நாயகா.... #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம் #🙏ஹர ஹர மஹாதேவ்⭐
மனநிறைவான வாழ்க்கை!
"சாம்பார் ரசம் இனி 2-ஆவது ரவுண்டு வராது அடுத்து மோர்தான்... ரசம் வேணுங்கறவங்க இப்போவே ஊத்திக்கோங்க" என்று சாப்பாடுப் பந்தியில் சொல்வார்கள். பல கல்யாணங்களில் கடைசியாகப் பந்தி நடக்கும்போது தலைமை சமையல்காரர் பரிமாறுபவரிடம் "ஏத்தி ஏத்தி தாராளமா போடு, மீதம் வைக்கவேண்டாம்" என்று சொல்வதைக் கேட்டிருப்போம்.
கடந்தகால வாழ்க்கையில் அறியாமை மிகுதியால் வீணடித்த அற்புதமான நேரம் பற்றி இப்போது எண்ணிப் பார்த்தால் மனம் நிறைவு கொள்ளாது. பிறகு ஆகட்டும் பார்த்துக்கொள்ளலாம் என்று நினைக்க அது இன்னொரு சுற்று வராது. அதுபோல் வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் இருக்கும்போது அவசர அவசரமாக விட்டதைப் பிடிக்கிறேன் என்று ஏற்றி ஏற்றி அதிகமாக எதையும் உள்வாங்கிக் கொள்ளவும் முடியாது. பலமும் ஆற்றலும் குறைந்துவிடும். நாம் வாழ்கிற அந்த எஞ்சிய காலத்தில் தானம் தருமங்களை மட்டும் ஏற்றிச் செய்யலாம்.
காலமும் நேரமும், வாய்ப்பும் உழைப்பும், பயனும் பலனும், வாழ்க்கைப் பயணத்தில் நல்ல அனுபவத்தைப் பெற்றுத் தந்தால் அதுவே மனநிறைவு.
மூத்தோர் சொல் கேட்டும், கற்றவர்கள் குழுவில் பழகியும், குருவின் ஆன்மிக வழிகாட்டுதலும், தெளிந்த விவேகமும், ஞானமும், திறனுள்ள முயற்சியும், அளவான எதிர்பார்ப்பும் இருந்துவிட்டால் வாழ்க்கை இனிதே! 👌
-எஸ்.சந்திரசேகர் #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #💐Have a nice day🤩 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #😇Take care Quotes📜 #🌹Happy Wednesday
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #💐Have a nice day🤩 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞
தாராசுரத்தில் உள்ள ஐராவதேஸ்சுவரர் கோவிலில் அமைந்துள்ள இசை படிக்கட்டுகள்!!! #🙏ஆன்மீகம் #🙏🏼ஓம் நமசிவாய #🙏கோவில் #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🙏🏼சிவ பெருமான் பாடல்கள்



