ல.செந்தில் ராஜ்
ShareChat
click to see wallet page
@senthilrajl
senthilrajl
ல.செந்தில் ராஜ்
@senthilrajl
I Am Born To Win, I AM DIVINE.Think Big.
🌹 🌿 நந்தி எம்பெருமான் பற்றிய தகவல்கள் ஸ்ரீ மஹா பெரியவா கூறியது: இனிய பிரதோஷ நாயகனே எல்லா பிற தோஷங்களிலிருந்தும் அனைவரையும் காத்தருள்வாய் 🌺☘️ 🌹 🌿 1. நந்தி என்றால் ஆனந்தம், மகிழ்ச்சி தருபவர் என்று பொருள். 🌹 🌿 2. நந்தியின் வேலை தடுப்பது ஆகும். அதாவது இவர் அனுமதி பெறாமல் ஈசன் உறையும் இடங்களுக்குள் யாராலும் செல்ல இயலாது. நந்தி அனமதி கிடைத்தால்தான் ஈசன் அருளைப்பெற முடியும். எனவேதான் முக்கிய சம்பவங்களின் போது யாராவது தடுத்தால், "என்ன இவன் நந்தி மாதிரி தடுக்கிறான்'' என்று சொல்லும் வழக்கம் ஏற்பட்டது. 🌹 🌿 3. பிரதோஷ காலங்களில் நந்தியை தவறாமல் வழிபடுபவர்களுக்கு அருள் வரம் தரும் பேறு கிடைக்கும் என்பது ஐதீகம். 🌹 🌿 4. நந்தி தேவர் சிவபெருமானுக்கு பூஜை செய்யும் அற்புத காட்சி ஒன்று, நாகை மாவட்டம் ஆத்தூர் மந்தாரவனேசுவரர் கோவிலில் உள்ளது. 🌹 🌿 5. சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் உள்ள ஆதிபுரீஸ்வரர் கோவிலில் பிரமாண்ட அதிகார நந்தி வாகனம் உள்ளது. இந்த அதிகார நந்தியை தமிழ்ப் பேரறிஞர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனாரின் தந்தை பொன்னுசாமி கிராமணி என்பவர் செய்து கொடுத்தார். 🌹 🌿 6. ஆந்திர மாநிலம் லேபாட்சியில் உள்ள கருங்கல்லில் வடிக்கப்பட்ட நந்தியே இந்தியாவில் உள்ள கல் நந்திகளில் பெரிய நந்தியாம். 🌹 🌿 7 தமிழ்நாடு மக்களுக்கு நந்நி என்றதும் தஞ்சை பெரிய கோவில் நந்திதான் நினைவுக்கு வரும். இந்த நந்தி ஒரே கல்லால் ஆனது. 🌹 🌿 8. மதுரை ஆவணி மூல வீதியில் "மாக்காளை'' எனப்படும் சுதையால் அமைக்கப்பட்ட பிரமாண்ட நந்தி உள்ளது. இத்தகைய மாக்காளை நந்திகளை நெல்லை, சுசீந்திரம், ராமேஸ்வரம், திருவிடை மருதூர் ஆலயங்களிலும் காணலாம். 🌹 🌿 9. திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஜோதி நந்தி உள்ளது. இந்த நந்தி முன் தீபம் ஏற்றி வலம் வந்து மலையை நோக்கி வழிபடுவதை பக்தர்கள் வழக்கத்தில் கொண்டுள்ளனர். 🌹 🌿 10. திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் இருந்து பார்த்தால், மலையானது, நந்தி ஒன்று படுத்து இருப்பது போன்ற தோற்றத்தில் காட்சித்தரும். அந்த இடத்தை "நந்திமுக தரிசனம்'' என்கிறார்கள். 🌹 🌿 11. மைசூர் சாமுண்டி மலை மீதுள்ள நந்தி கண்கவர் அழகான நந்தியாகும். இது சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 🌹 🌿 12. கேரள மாநிலம் வைக்கத்தில் மகாதேவ ஆலயம் உள்ளது. அங்கு 4 மூலைகளிலும் நந்தி வைக்கப்பட்டுள்ளது. 🌹 🌿 13. மராட்டிய மாநிலம் புனேயில் உள்ள நந்திக்கு கருவறை நந்தி என்று பெயர். 🌹 🌿 14. திருவாரூர் தியாகராஜர் கோவில் சன்னதியில் ஈசனை ஆச்சரியத்துடன் பார்த்தபடி எழுந்து நிற்கும் நிலையில் நந்தி உள்ளது. இந்த நந்தியை வழிபட்டால் செய்த பாவங்கள் எல்லாம் தொலைந்து போகும் என்பது நம்பிக்கை. 🌹 🌿 15. திருமந்திரம் எனும் நூலை எழுதிய திருமூலருக்கு குருவாக நந்தி திகழ்ந்தார். திருமூலருக்கு நந்தி பெருமான்தான் 9 வேத ஆகமங்களை விளக்கி அருளியதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. 🌹 🌿 16. சனகர், சனந்தர், சனாதனர், சனத்குமார், பதஞ்சலி, சிவயோக மாமுனி, வியாக்கிரமர், திருமூலர் ஆகிய 8 பேரும் நந்தி பெருமானின் மாணவர்களாவர். 🌹 🌿 17. கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் நந்தி துர்கா மலையே பரவலாக நந்தி மலை என்று அழைக்கப்படுகிறது. நந்தி மலையே பென்னாறு, பாலாறு பொன்னையாறு ஆகிய ஆறுகளில் பிறப்பிடமாக கருதப்படுகிறது. கடல் மட்டத்தில் இருந்து 1,500 அடி உயரத்தில் இருக்கின்றது. ஆயிரம் வருடத்து பழமை வாய்ந்த நந்தி கோவிலால் நந்தி மலை என்ற பெயர் ஏற்பட்டது. 🌹 🌿 18. நந்திகேசுரரின் வரலாற்றை லிங்க புராணம் கூறுகிறது. பிறப்பில் எம்பெருமானாகிய சிவபெருமானே நந்திகேசுவரராகப் பிறந்து கணங்களின் தலைவரானார் என்பது புராண மரபு. 🌹 🌿 19. இந்திய வரலாற்றை ஆராய்ந்தால் தத்துவம், யோகம், நாட்டியம், இசை, ஆயுர்வேதம், அஸ்வவேதம், காமவேதம் முதலிய பல்வேறு சாத்திரங்களைத் தோற்றிவைத்தவராக நந்திகேசுரர் என்ற முனிவர் வாழ்ந்திருக்கிறார் என அறியலாம். 🌹 🌿 20. சிவபெருமான் நாட்டியக் கலையைப் பிரும்மாவுக்கு கற்றுக் கொடுக்க அம்முறையை அறிந்த நந்தி பரத முனிவருக்குப் போதித்தார் என்று அபிநய தர்ப்பணம் கூறுகிறது. 🌹 🌿 21. தமிழ்நாட்டில் ஆடவல்ல பெருமான் தண்டுவுக்கு நாட்டியம் கற்றுக்கொடுப்பதாக ஒரு சிற்பம் மாமல்லபுரத்தில் தர்மராஜ ரதத்தில் உள்ளது. இங்கு சிவன் நாட்டியாசாரியராகவும் தண்டு முனிவர் மனித உருவிலும் உள்ளனர். 🌹 🌿 22. காஞ்சிபுரத்தில் இராஜ சிம்மன் கட்டிய கைலாய நாதராலயத்தில் பின்புறச் சுவரில் ஒரு சிற்பம் உள்ளது. அதில் சிவபிரான் ஊர்த்துவதாண்டவம் புரிகிறார். அவர் அருகில் நந்திகேசுவரர் ஆனந்தமாக நாட்டியம் கற்றுக் கொண்டு ஆடுகிறார். 🌹 🌿 23. தமிழ்நாட்டில் நந்திகேசுவரரின் மதம் கி.பி. 700லேயே சிறப்பிடம் பெற்றிருந்தது. 🌹 🌿 24. தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் பிற இடங்களிலும் உள்ள சிற்பங்களில் சிவன் ஆடும்போது நந்திகேசுவரர் பஞ்சமுக வாத்யம் என்னும் குடமுழா வாத்தியத்தை வாசிப்பதாக உள்ளதைக் காணலாம். திருவாரூர், திருத்துறைபூண்டி ஆகிய தலங்களில் இன்றும் பஞ்சமுக வாத்தியம் வாசிக்கப்படுகிறது. 🌹 🌿 25. பஞ்சமுக வாத்தியலடீசணம் என்னும் சுவடியில் குடமுழா வாத்தியம் நந்திகேசுவரரால் இசைக்கப்பட்டது என்றும், ஆதலின் இதை இசைக்கும் முன்னர் நந்திகேசுவரருக்குச் சிறப்பு வழிபாடு செய்ய வேண்டும் என்றும் கூறுகிறது. 🌹 🌿 26. காமசாஸ்திரத்தை தோற்றுவித்தவரும் நந்திகேசுவரரே என்று பல நூல்கள் கூறுகின்றன. நந்தி இயற்றிய பல செய்யுட்களை ''ரதி ரகசியம்'' என்று தம் நூலில் கொக்கோகர் மேற்கோளாகக் காட்டுகிறார். 🌹 🌿 27. ஆகம சாஸ்திரங்களையும், சைவசித்தாந்த தத்துவங்களையும் சிவபெருமானிடம் அறிந்து உலகுக்குப் போதித்தவர் நந்திகேசுவரரே. சைவமரபில் தலையாயது ''சிவஞான போதம்'' என்னும் நூல். இதை நந்திகேசுவரரே முதலில்; போதித்தார் 🌹 🌿 28. சிவாலயங்களில் துவாரபாலர் இருவரில் தலையில் சூலம் தரித்து நிற்பவர் நந்திகேசுவரர் ஆவார். 🌹 🌿 29. சிதம்பரம் நடராஜப் பெருமானின் கோயிலில் நான்கு கோபுரங்களிலும் அதிகார நந்தியின் உருவத்தைக் காணலாம். 🌹 🌿 30. நந்திகேசுவரரின் மறு அவதாரமாக அனுமான் கருதப்படுகிறார். 🌹 🌿 31. சில சிவாலயங்களில் நந்திக்குப் பதிலாகக் குரங்கு தூவாரபாலனாகத் திகழ்வதைக் காணலாம். எவ்வாறு சிவதத்துவத்தை நந்தி வாயிலாகப் பரமன் போதித்தாரோ அதே போல ராமதத்துவம் அனுமன் வாயிலாகப் போதிக்கப்பட்டது. 🌹 🌿 32. தானும் நந்தியும் வேறல்ல, ஒருவரே என்று சிவபெருமான் நந்தி புராணத்தில் கூறுகிறார். நந்தியைத் தொழுவது சிவபெருமானைத் தொழுவதே ஆகும். 🌹 🌿 33. முனிவர்களுக்கும் சித்தர்களுக்கும் யோகிகளுக்கும் நந்திதேவரே ஆதி குரு. 🌹 🌿 34. `நந்தி' என்ற வார்த்தையுடன் `ஆ' சேரும்போது `ஆநந்தி' என்ற பொருள் தருகிறது. `நீயும் ஆனந்தமாக இரு, பிறரையும் ஆனந்தமாக வைத்திரு!' என்று சிவபெருமான் நந்திக்கு அளித்த வரம் அது. 🌹 🌿 35. நந்தியைத் தொழாமல் சிவபெருமானைத் தொழ முடியாது. ஆலயத்தில் நந்தியை மட்டுமே தொழுதுவிட்டு திரும்பிவிட்டால் கூட சிவபெருமானை வணங்கியதன் முழுபலனும் கிட்டும். 🌹 🌿 36. ஆலயங்களைக் காவல் காக்கும் அதிகாரமும் நந்திக்கே உரியது என்பது தெளிவாகிறது. இதன் அடையாளமாகத் தான் திருக்கோவில்களின் மதில் சுவர்களில் நந்தியின் திருவுருவை அமைத்துள்ளனர். 🌹 🌿 37. நந்தி தேவருக்கு சிவ பெருமானைப் போலவே நெற்றிக்கண்ணும் நான்கு புஜங்களும், கையில் பிரம்பும், உடைவாளும், இருபுஜங்களில் மான் மழுவும் உண்டு. மானும் மழுவும் வேதத்தைக் குறிக்கிறது. மழு வீரத்தை அல்லது ஆண்மையைக் குறிக்கிறது எனவும் கூறுவர். 🌹 🌿 38. நந்திக்கு இவ்வுலகத்தின் எதையும் கண்டிக்கவும் தண்டிக்கவும் அதிகாரம் வழங்கியுள்ளான் பரமேஸ்வரன். 🌹 🌿 39. நந்தியின் அருள் இருந்தால்தான் மனிதர்களுக்கு மட்டுமின்றி தேவர்களுக்கும் முக்தி கிடைக்கும். அதனாலேயே தேவர்களும் நந்திதேவரைப் போற்றித் துதிக்கின்றனர். 🌹 🌿 40. எல்லா உயிர்களையும் ஒரு காலத்தில் ஓய்வு படுத்துதல் மகாசங்காரம் எனப்படும். இந்த அதிகாரத்தை சிவபெருமான் நந்தி தேவருக்கு வழங்கியிருக்கிறார். 🌹 🌿 41. நந்திதேவருக்கு ருத்திரன் என்ற பெயரும் உண்டு. ருத் என்பது துக்கம். ரன் என்பது ஓட்டுகிறவன். துக்கத்தை ஓட்டுகிறவன் என்பதே ருத்திரன். தூயவன், சைலாதி எனவும் நந்தியை அழைப்பர். 🌹 🌿 42. மாலாங்கன், இந்திரன், சோமன், பிரமன், ருத்திரன், கந்துரு, காலாங்கி, கஞ்சமாலையன் போன்ற தேவர்களெல்லாம் நந்தியைக் குருவாகக் கொண்டு வேதம் கற்றவர்கள் ஆவர். 🌹 🌿 43. பிரவிர்த்தி என்ற சேர்க்கையை விட்டு நிவிருத்தி என்ற விலகலைத் தேர்ந்தெடுப்பது ஞானத்தின் மார்க்கம். இதைக் கற்றுக் கொடுத்தவர் நந்திதேவரே. இவர் வழி வந்தவர்களே மெய் கண்ட சந்தானத்தின் குருபரம்பரை என்றழைக்கப்படுகிறார்கள். 🌹 🌿 44. சிவபெருமானின் முக்கண்ணின் பார்வைக்கு எதிரில் நிற்க நந்திதேவரைத் தவிர வேறுயாராலும் இயலாது. இது சிவபெருமானே நந்தி தேவருக்கு அளித்த வரமாகும். 🌹 🌿 45. சிவ பெருமான் திருநடனம் புரிகையில் நந்திதேவரே மத்தளம் வாசித்ததாக சிவபுராணம் கூறுகிறது. 🌹 🌿 46. பிரதோஷ காலம் மட்டுமின்றி எக்காலத்தும் நாம் சிவபெருமானி டம் வைக்கும் வேண்டுதல் களை நந்திதேவரிடம் வைத்தால் போதும். அவர் அதைப் பரமேஸ்வரனிடம் கொண்டு சேர்த்துவிடுவார் என்பது ஐதீகம். 🌹 🌿 47. நந்தியை வழிபடும்போது, `சிவனடியில் சரணம் புகுந்து சிவத்தியானத்தில் ஆழ்ந்திருக்கும் மகா புண்ணியம் பெற்ற நந்திகேசுவரரே! சன்னிதிக்குச் சென்று உமையோடு கூடிய ஈஸ்வரனைத் தரிசிக்க எனக்கு உத்தரவு தருக' என்று பிரார்த்திக்க வேண்டும். 🌹 🌿 48. நந்திதேவருக்கு அருகம்புல் மாலையும், சிவப்பு அரிசி நிவேதனமும் நெய்விளக்கும் வைத்து வழிபட வேண்டும். 🌹 🌿 49. பிரபஞ்சத்தில் உள்ள தீர்த்தங்கள் எல்லாம் பிரதோஷ காலத்தில் பீஜத்தை வந்தடைகின்றன. அதனால் நந்தியின் பீஜத்தைத் தொட்டு வணங்கிய பிறகே சிவதரிசனம் காணவேண்டும். பிறகு வாலைத் தொட்டு வணங்க வேண்டும். 🌹 🌿 50. நாட்டியம் பயில்வோரும் இசை பயில்வோரும் நந்தியை வழிபட்டால் அவர்களின் கலைகள் தடையின்றி சிறந்து வளரும். 🌺அகிலம் காக்கும் அண்ணாமலை ஈசனே எனை ஆளும் நேசனே சிவ லோக நாதனே சிவமே என் வரமே .☘️🌺 சிவாய நம🙏🙏 சிவமே ஜெயம் சிவமே தவம். சிவனே சரணாகதி 🌺 🌺அகிலம் காக்கும் அண்ணாமலையார் மலர் பாதம் பணிந்து இன்றைய விடியலை மனமுவந்து நமக்கு அளித்த இனிய ஈசனுக்கு நன்றியுடன் கோடானு கோடி ஆத்ம நமஸ்காரங்கள் 🙏🙏🙏🌺 🌺உலகின் முதல்வன் எம் பெருமான் நம் தந்தை சிவனாரின் இனிய ஆசியுடன் அன்பான சிவ மாலை வணக்கங்கள் 🌺 #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஆன்மீகம் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏கோவில் 🦜
🙏🏼ஓம் நமசிவாய - ShareChat
00:30
#சிவகங்கைமாவட்டம் கோட்டையூரில் குடிகொண்டிருக்கும் #இந்தசித்தரின்பூர்வீகம் கொங்குநாடு ஐந்து வயதில் வீட்டை விட்டு வெளியே வந்தவர் இந்தியா முழுவதும் சுற்றி திரிந்து மகான்களை சந்தித்து ஆசியைப் பெற்றவர் மும்பை கணேஷ்புரியை சேர்ந்த ஸ்ரீநித்யான் சுவாமியின் சீடர் இவர் விராலிமலை முருகனின் அருளை பெற்ற இச்சித்தரை அனைவரும் எச்சில் பொறுக்கி ஆறுமுகம் சுவாமிகள் என்று அன்போடு அழைத்திருக்கிறார்கள் இவர் யாராவது சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது அவர்கள் சாப்பிட்ட எச்சில் இலையிலிருந்து ஒரு பிடி எடுத்து சாப்பிட்டு விடுவாராம் அப்படி சாப்பிட்டால் அந்த நபருக்கு யோகம் அடித்து விடும் அவர் வாழ்க்கையில் எல்லா வளங்களும் சேர்ந்து மிக உன்னதமான நிலைக்கு வந்து விடுவார்களாம் இதனை முன்னிட்டு இந்த பெயர் வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது எச்சிக்கலையும் பொறுக்கும் சுவாமிகள் அதாவது எந்த சிக்கலையும் பொறுத்து அதை தீர்த்து வைக்கும் சித்தர் என்பதால் அவருக்கு எச்சிக்கலை பொறுக்கி ஆறுமுகம் சித்தர் என்று மருவியதாக கூறுவர் ஒரு முறை இவர் திருநெல்வேலியில் இருந்த போது கோவணத்துடன் சாலையில் திரிந்து கொண்டிருந்த இவரை போலீஸ்காரர் ஒருவர் விரட்டி கொண்டு வரவே இவர் ஓடிப் போய் ஒரு குப்பைத் தொட்டிக்குள் ஒளிந்து கொண்டிருக்கிறார் ஒரு மணிநேரத்திற்கு மேலாகியும் சுவாமிகள் வெளியே வரவில்லையாம் அங்கு இருந்து இவரை பிடிப்பதற்காக துரத்தி கொண்டு வந்த போலீஸ்காரரோ குப்பைத்தொட்டியை நெருங்கியதும் அங்கிருந்து ஓரடிகூட எடுத்து வைத்து நகரமுடியாமல் அப்படியே சிலை போல் நின்றிருக்கிறார் மற்றொரு போலீஸ்காரர் அங்கு வந்த பின்புதான் சுவாமிகள் அந்த குப்பைத்தொட்டிக்குள்ளையே இல்லை என்கிற விஷயம் தெரிய வந்திருக்கிறது அதன்பின் எங்கிருந்தோ மறுபடியும் அந்த இடத்திற்கு வந்த ஆறுமுகம் சித்தர் அந்தப் போலீஸ்காரரை தொட்ட பின்புதான் அவரால் அந்த இடத்தை விட்டு அசைய முடிந்திருக்கிறது அப்போதுதான் அவருக்கு புரிந்திருக்கிறது அவர் சாதாரண மனிதரல்ல என்பது தம் செயலுக்கு வருந்தி ஆறுமுக சித்தரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்கிறார் அந்த போலீஸ்காரர் மூதேவி உபாசகராக ஆறுமுகம் சித்தர் விராலிமலை முருகனின் அருளை பெற்றவர் வராஹி தாயை வழிபடுபவர் தாம் முக்தி அடையும் நாளை முன்கூட்டியே தெரிவித்தவர் இவர் ஒரு முருகன் பக்தர் என்பதால்தான் முருகனுக்கு உகந்த வைகாசி விசாகத்தன்று முக்தியடைந்தார் என்று கூறுகிறார்கள் இவர் 1982ஆம் ஆண்டு வைகாசி மாதம் விசாகநட்சத்தித்திர பெருநாளன்று முக்தியடைந்தார் சித்தருகளுக்குள் மகா சித்த புருசராக விளங்கிய ஆறுமுகம் சித்தர்கள் பிறர் துன்பங்களை தான் ஏற்று அவர்கள் குறையை போக்கி வந்தார் விராலிமலை குகையிலிருந்து பக்தர்களுக்கு அருள்மழை பொழிகிறார் அயல்நாடுகளில் இருந்து வந்த அன்பர்களின் தீராத நோய்நொடிகளையல்லாம் தீர்த்து வந்தார் இவருடைய சமாதிக்கு சென்று வழிபட்டு மனமுருக வேண்டினால் இவரது அனுக்கிரகத்தை எளிதில் பெறலாம் இப்போதும் சமாதிக்குள் சமாதி நிலையில் இருந்தவாறு தம்மை நாடி வரும் பக்தர்கள் குறை தீர்த்து வருகிறார் ஆறுமுகம் சித்தர் சுவாமிகள் இடம் புதுக்கோட்டை சாலையிலுள்ள கோட்டையூர் சிவன் கோவிலுக்கு 2 கி. மீ தொலைவிலுள்ள டவுன் extension பகுதியில் உள்ளது. ஓம் நமசிவாய ஓம் குருவே சரணம் ஓம் ஸ்ரீ கணக்கம்பட்டி சித்தர் சுவாமிகள் போற்றி ஓம் வராஹி தாயே போற்றி ஓம் நந்தீஸ்வரர் போற்றி ஓம் பராசக்தி ஓம் சக்தி ஓம் ஆதிபராசக்தி அம்மன் போற்றி.ஓம் சாய்ராம் ஓம் சித்தர்கள் திருவடி சரணம் போற்றி ஓம் வீரபிரம்மேந்திரர் சுவாமிகள் போற்றி ஓம் சிக்கல் போக்கும் ஆறுமுகம் சித்தர் சுவாமிகள் போற்றி #🙏கோவில் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏ஆன்மீகம் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏🏼ஓம் நமசிவாய
🙏கோவில் - ShareChat
உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன் பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம் முழவு அதிரும் அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏ஆன்மீகம் #🙏கோவில்
🙏🏼ஓம் நமசிவாய - ShareChat
00:53
#🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #💐Have a nice day🤩
🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 - ShareChat
00:56
#👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #💐Have a nice day🤩
👌இந்த நாள் நல்ல நாள்🤝 - ShareChat
00:12
“🌹*சிந்திப்போமே இனிய சிவனடியை 🌹 அகிலம் காக்கும் தந்தை அண்ணாமலை ஈசனே எனை ஆளும் நேசனே உன் பொற் பாதம் பணிந்து 🌹 *பதம் தர வல்லவன்* *பஞ்சாக்கரவன்* *கச்சியப்பர் விளக்குகிறார்* *சிவ பதத்தை* யாவருக்கும் *தர வல்லவன்* பஞ்சாக்கர தேசிகன் *பல பல பெயர் உடையவன்* ஆன்மாக்களின் தலைவன் *பசுபதி்* நலமே நல்கும் *ஈசன்* அனைத்திலும் *கலந்து நிற்கும்* *இறைவன்* *அட்டமூர்த்தி* *எண் குணத்தான்* *சுதந்திரன்* இந்த *திருப்பெயர்களை* ஒரு முறை *சொன்னாலே* சொல்பவரது *வல்வினை* நூறு காத தூரம் *ஓடிவிடும்* இப்படியாக *வினை நீங்க அவன் பெயரை* *உச்சரிக்க வேண்டும்* என்று விளக்குகிறார் பாடலைக் காணலாமே *பதம் தர வல்லவன்* *பஞ்சாக்கரவன் பசுபதி* நல் / விதம் தரும் ஈசன் இறை எட்டு உருவத்தன் எண் குணத்தான் / சுதந்திரம் உள்ளவன் என்று சொல் மாத்திரை சூழ்ந்தவர்க்கும் / கதம் தரு வல்வினை காவதம் நூறு கடந்து இறுமே ! - *ஶ்ரீ பஞ்சாக்கர தேசிகர்* *அந்தாதி (72)* *ஶ்ரீ கச்சியப்பர்* *பெயர் பயில்வோம்* *வினை நீங்குவோம்* *பேரானந்தத்தில் திளைபோமே 🙇அப்பனே அருணாச்சலா #🙏கோவில் #🙏ஆன்மீகம் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏🏼ஓம் நமசிவாய உன்பொற் கழல் பின்பற்ற🦜
🙏கோவில் - ShareChat
00:22
திருவாசகம் அருளிய மணிவாசகர் திருத்தாள் போற்றி 🌹🙏🏿🌹 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏ஆன்மீகம் அனைவருக்கும் இனிய வணக்கங்கள் 🌹🙏🏿🌹🙏🏿🌹 🌹🙏🏿 தித்திக்கும் சிவபெருமான் 🌹🙏🏿 ( சிவசிவா சிவாயநம என நாத்தழும்பேர பாராயணம் செய்திடுவோம் 🌹ஈசனின் எண்ணமே தித்திக்கும் அன்றோ?) நானேயோ தவஞ்செய்தேன் சிவாயநம எனப்பெற்றேன்,. தேன்ஆய் இன்னமுதமுமாய் தித்திக்கும் சிவபெருமான், தானேவந் தெனதுள்ளம் புகுந்தடியேற் கருள்செய்தான், ஊனாரும் உயிர்வாழ்க்கை ஒறுத்தன்றே வெறுத்திடவே 🙏🏿🌹🌹🌹 *****************🌹🌹🌹🌹**************()
🙏ஹர  ஹர மஹாதேவ்⭐ - ShareChat
00:26
🔱🔱🔱ஓம் நமசிவாய வாழ்க 🔱🔱🔱 🌼மகாதேவா உன் நாமமே வாழ்வின் ஆதாரம் மலர்ந்திடும் உள்ளத்தில் ஆனந்த வாசம் சிவ சிவ எனச் சொன்னாலே சுகம் தருவாய்🌼 🌺சிந்தையில் என்றும் நீயே நிலைபெறுவாய் சடையில் கங்கை சுழன்றாட சந்திரன் ஒளியில் மிளிரும் மேனி புலித்தோல் போர்த்திய பரம சிவா🌺 🌺பூமி காக்கும் அருள் வடிவா திருவடி நினைத்தாலே தீரும் கவலை திருநீறு பூசினால் அகலும் துயரம் “நமச்சிவாய” என்ற நாமம் ஓதினால் நாளும் கிடைக்கும் பேரின்பம்🌺 🙏திருச்சிற்றம்பலம் 🙏 #🙏ஆன்மீகம் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஹர ஹர மஹாதேவ்⭐
🙏ஆன்மீகம் - ShareChat
01:23
#🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #💐Have a nice day🤩 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #👌இந்த நாள் நல்ல நாள்🤝
🥰அன்புடன் காலை வணக்கம்🌞 - ShareChat
00:12
#👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #💐Have a nice day🤩
👌இந்த நாள் நல்ல நாள்🤝 - ShareChat
00:55