சிவ சிவ
கனவில் சிவன் தேன்றினால் !
*********************************
தினமும் நாம் தூங்கும்
பொழுது வினோதமான
சில கனவுகள் வரும். நாம்
தூங்குவதற்கு முன்
யோசிக்கும் சில
விஷயங்களும் கனவாக வர
வாய்ப்புள்ளது.
சிலருக்குக் கனவுகளில்
வரும் சில காட்சிகள்
நிஜத்திலும் நடக்கும். இது
போல் சிவனைப் பற்றிய
கனவு நமக்குத்
தோன்றினால், அதற்கு
என்ன அர்த்தம்??
அது போன்ற கனவுகளுக்கு
நமது வாழ்க்கையுடன்
என்ன சமந்தம் உள்ளது
என்பதைப் பற்றி இங்குத்
தெரிந்து கொள்ளுங்கள்.
அனைவருக்கும் சிவன்
சமந்தமான கனவுகள்
தோன்றாது.
*******************************
ஆன்மீகக் கனவுகள்
தோன்றுவதற்கான
முக்கியமான காரணம், நீங்கள்
உங்களைத் தாண்டியும்
மற்றவர்களின் நலனைப் பற்றி
யோசிக்கும் பொழுதுதான்
தோன்றும். அப்படித் தோன்றும்
கனவுகள் சில நடக்கப் போகும்
சம்பவங்களை முன்கூட்டியே
தெரிவிக்கப் போகிறது
என்பது அர்த்தம்.
********************************
சிவலிங்கம் ஒருவரது கனவில்
தோன்றினால், அது அவர்கள்
கடந்த காலத்தில் சிவனைத்
தினசரி வழிபட்டதாலும்,
அவரைக் காண தவமாய்
இருந்ததாலும், அது போன்ற
கனவுகள் இப்பொழுது
தோன்றும். அவர்களுக்கு நடக்கப் போகும் பிரச்சினைகள்
விரைவில் தீரப்போகிறது
என்பதை உணர்த்தவே இது
போன்ற கனவுகள் தோன்றும்.
***********************************
சிவன், பார்வதி இருவரும்
கனவில் தோன்றினால், நீங்கள்
எதிர்பார்க்கும் வாய்ப்புகள்
வந்தடையும். கனவில் சிவன்,
பார்வதி இருவரும்
தோன்றுவது நல்ல
சகுனமாகும்.
********************************
கனவில் சிவ தாண்டவம் வந்தால்,
தொடர்ந்து வரும்
பிரச்சினைகள் விரைவில்
முடிவுக்கு வரும்.
பணத்தேவைகள் சில
போராட்டங்களுக்குப் பின்பு
கைக்கு வரும் என்பதை
உணர்த்தும்.
*********************************
பெண்கள் கனவில் சிவன்
கோவில் தோன்றுவது,
அவர்களுக்கு இரு குழந்தைகள்
பிறக்கப் போகிறது என்பதை
உணர்த்தும். கனவில் கோவில்கள்
தோன்றினால், நோய்கள்
அண்டாது என்றும்
கூறுவார்கள்!!!
******************************
சிவனின் தலையில் உள்ள
பொளர்ணமி நிலவு கனவில்
தோன்றினால், வாழ்க்கையில்
மிக முக்கியமான
முடிவுகளை எடுக்கும்
தருணம் வந்துவிட்டது என்பதை
உணர்த்துவதற்கு!!!
சிவ சிவ
நமசிவாய வாழ்க #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஆன்மீகம் #🙏ஹர ஹர மஹாதேவ்⭐