ல.செந்தில் ராஜ்
ShareChat
click to see wallet page
@senthilrajl
senthilrajl
ல.செந்தில் ராஜ்
@senthilrajl
I Am Born To Win, I AM DIVINE.Think Big.
🌹 குலதெய்வ வழிபாடு... 🌹அகிலம் காக்கும் தந்தை அண்ணாமலை ஈசனே எனை ஆளும் நேசனே உன் பொற் பாதம் பணிந்து 🌹 வீட்டிலிருந்தபடி எப்படி குலதெய்வ வழிபாடு செய்யலாம்? நம் குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும். தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும். குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும். அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை. எனவே தான் அந்த தெய்வங்கள் 'குலதெய்வங்கள்' என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன. குலதெய்வத்தின் சிறப்பு : குலதெய்வங்கள் பொதுவாக காடு, மலை, வயல் மற்றும் சாலை வசதி இல்லாத இடங்களில் தான் அமைந்திருக்கும். பெரும்பாலும் கிராமங்களை ஒட்டியே இவ்வகை தெய்வங்களின் வழிபாட்டு இடம் இருக்கும். மேலும் குலதெய்வ கோயில்கள் பெரிய அளவில் கோபுரங்களை கொண்டிருப்பதில்லை. சிறிய கோயில் அமைப்பாக தான் இருக்கும். இவ்வகை கோயில்கள் முறைப்படி அமைக்கப்பட்டிருக்காது. அந்தந்த இடத்திற்கு ஏற்றாற்போல் இருக்கும். இவை பெரும்பாலும் கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கியே அமைந்திருக்கும். பெரும்பாலும் வேம்பு அல்லது வில்வ வகை மரங்கள் குலதெய்வ கோயில்களில் இடம் பெற்றிருக்கும். வீட்டிலிருந்தபடி எப்படி குலதெய்வ வழிபாடு செய்யலாம்? நமக்கு வரக்கூடிய தீர்க்கமுடியாத துயரங்களுக்கு, தீர்வு கிடைக்க வேண்டுமென்றால், அந்த சமயத்தில் நம் குடும்பத்தோடு சேர்ந்து, குலதெய்வ கோயிலுக்கு சென்று குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டும். அப்படி கோயிலுக்கு செல்ல முடியவில்லை என்றால், வீட்டில் இருந்தபடியே குலதெய்வ வழிபாட்டை எப்படி செய்யலாம்? குலதெய்வத்திற்கு உகந்த நாளை இந்த பூஜைக்காக தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். பூஜைக்கு முந்தைய நாளே வீட்டை சுத்தம் செய்து விடுங்கள். வீட்டில் இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இந்த பூஜையில் ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். பூஜையை காலை 6 மணி அளவில் செய்வது சிறப்பாக இருக்கும். அதிகாலை வேளையிலேயே வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் எழுந்து குளித்துவிட்டு பூஜை அறையில் அமர்ந்து தீபம் ஏற்றி வைத்து குலதெய்வத்தை, குலதெய்வ கோயிலுக்கு சென்று வழிபடுவதாக நினைத்து மனதார, மனமுருகி வழிபாடு செய்ய வேண்டும். பூஜை அறையில் குலதெய்வத்திற்கு என்று மண் அகல் விளக்கில் தனியாக ஒரு தீபத்தை ஏற்றி வைத்து, ஒரு சொம்பில் சுத்தமான தண்ணீரை ஊற்றி அதில் துளசி இலைகளைப் போட்டு குலதெய்வத்திற்கு சமர்ப்பணம் செய்யுங்கள். முடிந்தால் குலதெய்வத்திற்கு இஷ்டமான பிரசாதத்தை நைவேத்தியமாக வைக்கலாம். ஒரு மஞ்சள் நிற துணியில் குலதெய்வத்தை வேண்டி உங்களால் இயன்ற அளவு காணிக்கையை வைக்க வேண்டும். குடும்பத்தில் உள்ளவர்கள் மூலமாக இந்த காணிக்கையை வைப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. 'குலதெய்வ கோயிலுக்கு வரக்கூடிய சூழ்நிலை அமையவில்லை, எப்போது குலதெய்வ கோயிலுக்கு வரக்கூடிய சூழ்நிலை ஏற்படுகின்றதோ அந்த சமயம் இந்த காணிக்கையை உண்டியலில் சேர்த்து விடுகிறோம்' என்று சொல்லி அந்த காணிக்கையை முடிந்து பூஜையறையில் குலதெய்வ படத்திற்கு முன்பாக வைத்து விடுங்கள். இப்படி வருடம்தோறும் உங்களுடைய குலதெய்வத்திற்கு நீங்கள் என்ன செய்வீர்களோ, அதை மஞ்சள் துணியில் வைத்து, குலதெய்வத்திற்கு நீங்கள் செய்யும் வேண்டுதல்களை செய்துவிட்டதாக நினைத்து, மஞ்சள் துணியை முடிந்து பூஜை அறையில் வைத்தால் போதும் அந்த வேண்டுதல் குலதெய்வத்தை சேர்ந்துவிடும். அடுத்தமுறை குலதெய்வ கோயிலுக்கு செல்லும்போது, இந்த மஞ்சள் நிற துணியில் முடிந்து வைத்திருக்கும் காணிக்கையை குலதெய்வ கோயிலில் சேர்த்து விட வேண்டும். 🌷சிவாய நம🙏🙏 சிவமே ஜெயம் சிவமே தவம். சிவமே என் வரமே. .எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும் இப்பிறவி இனிதே சாமி 🌷 🌺உலகின் முதல்வன் எம் பெருமான் நம் தந்தை சிவனாரின் இனிய ஆசியுடன் அன்பான சிவ காலை வணக்கங்கள் 🌺 🙇அப்பனே அருணாச்சலா உன்பொற் கழல் பின்பற்றி #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏ஆன்மீகம் #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் 🦜 🙏
🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 - ShareChat
00:27
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 ༺சித்தம் சிவமயம்༻ 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 🌹பிறைசூடி துதிபாடி🌹 💫🌹நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க🌹💫 🍃🌹🍃🌹🍃🌹🍃🌹 🌹🌻பாடல்🌻🌹 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 🍁மத்தனை வானவர் வாழ நஞ்சையுண் 🍁பித்தனைப் பிடிநடைப் பேதை பங்கமர் 🍁முத்தனை அழகிய முருகன் பூண்டியில் 🍁அத்தனை அடிதொழ அல்லல் இல்லையே. 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 பொழிப்புரை : ஊமத்தமலரை அணிந்தவனை !! தேவர்கள் வாழுமாறு ஆலகாலத்தை உண்ட பேரருளாளனை !! பெண்யானை போன்ற நடையை உடைய உமையை ஒரு பங்கில் விரும்பியவனை !! முக்தியளிப்பவனை !! அழகிய திருமுருகன்பூண்டியில் உறைகின்ற தந்தையை வழிபட்டால் துன்பம் தீரும் !! 🍃🌹🍃🌹🍃🌹🍃🌹 ‌ 🌹🌹🌹🌹🌹🌹 🌹🌹🌹🌹 🌹🌹 🌹 ꧁༺சிவசிவ༻꧂ 🌹 🌹🌹 🌹🌹🌹🌹 🌹🌹🌹🌹🌹🌹 🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️ 💫🌹அம்மையே!! அப்பா!! ஒப்பிலா மணியே திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫 💫🌹பிறவா யாக்கைப் பெரியோன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫 💫🌹மாமுது முக்கண் முதல்வன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫 💫🌹ஒப்பாரும் மிக்காரும் இல்லா தத்துவனே திருவடிகள் வாழ்க🌹💫 💫🌹விண்ணில் இருப்பவனே மேவியங்கு நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫 💫🌹தன்னுளே இருப்பவனே தராதலம் படைத்தவன் திருவடிகள் வாழ்க🌹💫 💫🌹என்னுளே இருப்பவனே எங்குமாகி நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫 🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️ 🍀🍁🍀🍁🍀🍁🍀🍁 திருச்சிற்றம்பலம் 🍀🍁🍀🍁🍀🍁🍀🍁 #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🙏🏼ஓம் நமசிவாய #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏ஆன்மீகம்
🙏🏼சிவ பெருமான் பாடல்கள் - ShareChat
01:39
இன்று மதுரையை கலக்கும் இரண்டு பாடல்கள்:திருவிழா வந்துவிட்டாலே மதுரை நகரெங்கும் இந்த இரண்டு பாடல்கள்தான், ஒன்று பல்லாக்கு குதிரையில பவனி வரும் மீனாட்சி, இன்னொன்று வாராரு வாராரு அழகர் வாராரு என்ற இரண்டு பாடல்கள்தான். சில வருடங்களுக்கு முன்பு வந்த தேவராட்டம் படத்தில் மதுரை பளபளக்குது மல்லியப்பூ மணமணக்குது என்ற ஒரு பாடலும் வந்தது, இந்த பாடல் எந்த அளவு இந்த சித்திரை விழாக்களில் ஒலிக்க விடப்படுகிறது என தெரியாது, ஓரளவு ஓக்கே. ஆனால் பல வருடமாக மேலே முதலில் சொன்ன இந்த இரண்டு பாடல்களும் மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி திருக்கல்யாணம், அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு என எங்கு பார்த்தாலும் ஒலிக்க விடப்படும். அழகர் காலையில் பச்சை பட்டுடுத்தி இறங்கி விட்டாலும் அடிக்குற வெயில்ல கையில் தண்ணீர் பீய்ச்சியடிக்கும் தோல் சாதனம் ஒன்றை வைத்து கொண்டு எங்கு பார்த்தாலும் இளைஞர்கள், சிறுவர்கள் அதை வைத்து அடித்துகொண்டு ஆங்காங்கே குழாய்கள், ஸ்பீக்கர்களில் ஒலிக்க விடப்படும் இந்த பாடல்களுக்கு நின்று டான்ஸ் ஆடுவது , அந்த பாடலை உள்ளுக்குள் ரசிப்பது என இன்று முழுவதும் ஆட்டம் களைகட்டும். எங்கு பார்த்தாலும் இந்த இரண்டு பாடல்கள்தான் பெரும்பாலும் ஒலிக்க விடப்படும். பல்லாக்கு குதிரையில பவனி வரும் மீனாட்சி பாடல் கடந்த 1990ம் ஆண்டு வெளிவந்த பெரிய வீட்டு பண்ணக்காரன் படத்தில் இடம்பெற்றது. படத்தை தயாரித்த சங்கிலி முருகன் மதுரை பக்கத்தை சேர்ந்தவர் அவரின் படக்கம்பெனி பெயரே மீனாட்சி ஆர்ட்ஸ்தான், அந்த மீனாட்சி பெயரிலும் நாங்க மதுரைக்காரங்க என காட்டும் விதத்திலும் இந்த பாடல் அமையப்பெற்றிருக்கும். நாயகன் நாயகியை மீனாட்சியாய் நினைத்து பாடுவதுதான் இந்த பாடல். பாடலை எழுதியவர் கவிஞானி கங்கை அமரன் அவர்கள். அண்ணன் இளையராஜாவுக்கும் தம்பி கங்கை அமரனுக்கும் அம்மனை பற்றி எழுத சொன்னாலோ பாட சொன்னாலோ, இசையமைக்க சொன்னாலோ பட்டைய கிளப்பி விடுவார்கள், இவர்களிடம் இந்த பாடலை அதுவும் மதுரை வாழ் மீனாட்சியை பற்றி சொன்னால் விடுவார்களா ? இந்த பகுதியிலேயே அண்ணன் இளையராஜாவும், தம்பி கங்கை அமரனும் வளர்ந்தவர்கள் வேறு. அண்ணன் இசையமைக்க, தம்பி பாடல் எழுத என இந்த பாடலை ரொம்ப உணர்வுப்பூர்வமான கிராமிய வாத்தியங்களுடன் இப்பாடலை கேட்கும் அனைவரும் சாமி வந்து ஆடும் நிலைக்கு இந்த பாடலுக்கு இசையமைத்திருப்பார் இளையராஜா. வீராதி வீரமுள்ள ராசாதி ராசனுக்கு பூமாலை போடும் இது திருநாளு, ஒரு பூந்தேறி பூட்டிவரும் பெருநாளு, மாறாத அன்பு வச்ச மகராசி மறையாத எண்ணம் வச்ச மீனாட்சி என எழுதி இருக்கும் வரிகளை மதுரைக்காரய்ங்க யாரும் கேட்ட உடனே சிலிர்க்குற மாதிரி வார்த்தைகளை போட்டு எழுதி இருப்பார் கங்கை அமரன். இது போல் கடந்த 1999ம் ஆண்டு வெளிவந்த கள்ளழகர் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் வாராரு வாராரு அழகர் வாராரு என்ற பாடல், தேனிசை தென்றல் தேவா இசையமைத்த இந்த பாடலில் இன்னொரு குரலாக தேவாவுடன் சேர்ந்து எஸ்.ஏ ராஜ்குமாரும் பாடியிருப்பார். இரண்டு பேரின் குரல்களும் ஹைபிட்ச்ல பாடும் கனத்த குரல்கள்,இரண்டு பேரின் குரல்களும் இந்த பாட்டுக்கு பொருந்தி போவது மிக சிறப்பு. இந்த பாடலை எழுதியவரும் தெக்கத்தி பகுதியை சேர்ந்தவர்தான், ஆம் கவிஞர் வைரமுத்துதான் இந்த பாடலை எழுதி இருக்கிறார். தேவாவை பலர் காப்பி கேட் அது இதுன்னு பல வருடமாக விமர்சித்து கொண்டிருக்கிறார்கள், அவர்களுக்கெல்லாம் தேவா போட்ட இந்த பாட்டுதான் பதில் . ஆம் பல வருடமாக இந்த பாட்டு நிலைத்து நிற்கிறது மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய vibe ஆக இந்த பாடல் இருக்கிறது ஆம் அந்த அளவு இந்த பாடலுக்கு உணர்ச்சி பொங்க இசையமைத்ததோடு மட்டுமல்லாமல் பாடவும் செய்திருப்பதை, நாம் உணர முடியும் இப்பாடலில் ஒரு மணிச்சத்தம் ஒன்று கேட்கும் கேட்ட உடனே தேவாவும், எஸ்,ஏ ராஜ்குமாரும் இணைந்து பாடுவார்கள் பாருங்க செம ப்ளாஸ்டா இருக்கும். தேவா இசையமைத்த இந்த பாடல் வந்து 27 வருடங்களாக சித்திரை திருவிழாக்காலங்களில் மதுரையின் தேசிய கீதமாய் ஒலித்துக்கொண்டிருக்கிறது. இன்னொரு பாடலான பல்லாக்கு குதிரையில பாடல் 36 வருடங்களாக மதுரை மக்களின் தமிழ்த்தாய் வாழ்த்தாக ஒலித்துக்கொண்டிருக்கிறது. #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #மதுரை சித்திரை திருவிழா #சித்திரை #🙏கோவில் #🙏ஆன்மீகம்
👌இந்த நாள் நல்ல நாள்🤝 - பவீட்டுப் க்காரன் Pdladlo Relliadet ஒலக்குகுதிரை பவீட்டுப் க்காரன் Pdladlo Relliadet ஒலக்குகுதிரை - ShareChat
#🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #💐Have a nice day🤩 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #👌இந்த நாள் நல்ல நாள்🤝
🥰அன்புடன் காலை வணக்கம்🌞 - ShareChat
00:12
#👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #💐Have a nice day🤩 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞
👌இந்த நாள் நல்ல நாள்🤝 - ShareChat
00:34
#தலைவர் விஜய் (TVK) #அரசியல் TVK... ##TVK Vijay #தமிழக வெற்றி கழகம் (TVK) #Tvk Thalapathy vijay
தலைவர் விஜய் (TVK) - ShareChat
00:57
#🤩HBD தல அஜித் குமார்😎 #💪தொழிலாளர்கள் தின வாழ்த்துக்கள் 👷
🤩HBD தல அஜித் குமார்😎 - ShareChat
00:24
#சித்திரை பௌர்ணமி #கூட்டு_வழிபாடு 🌷இலுமினாட்டி தீய சக்திகளிடமிருந்து இந்த உலகம் விடுதலை பெறவேண்டும்!! 🌷உலகெங்கும் உண்மையான சனநாயகம் மலர வேண்டும்!! 🌷உலகெங்கும் உண்மையான நீதி பரிபாலனம் தொடங்க வேண்டும்!! 🌷ஊடகங்கள் உண்மை பேச வேண்டும்!! 🌷இராணுவமும், காவல் துறையும், அரசு அதிகாரிகளும், அரசு ஊழியர்களும் #மக்களின்_நலனுக்காக இயங்க வேண்டும்!! 🌷உலக மக்களுக்குள் ஒற்றுமை ஏற்பட வேண்டும்!! உலகில் அமைதியும் வளமும் பெருக வேண்டும்!! 🌷உலக மக்கள் அனைவரும் தங்களின் வளங்களைப் பகிர்ந்து எல்லோரும் இன்புற்று வாழவேண்டும்!! 🌷உலகின் மூத்த இனமான தமிழினம் பாதுகாக்கப்பட வேண்டும்!! 🌷தமிழகத்தில் நல்ல தமிழராட்சி ஏற்பட வேண்டும்!! 🌷மீனாட்சியே, ஆசிவக தெய்வங்களே, சிவனே, முருகனே, ராவணனே, கும்பகர்ணனே, இந்திரனே, கிருட்டிணனே, திருமாலே, கடவுள்சித்தர்களே, உங்களின் பிள்ளைகளைக் காத்திடுங்கள், துணை இருங்கள்!! 🌷தீய சக்திகளை வீழ்த்தி உலகம் விடுதலைபெற ஆசீர்வதியுங்கள்!! 🪔🪔மூலப் பரம்பொருளே!! அகமும், புறமுமாய் தமிழர்களுக்கு துணை நின்று, எங்கள் தூய்மையான விருப்பங்களை நிறைவேற்றி நாங்கள் வெற்றிபெற அருள் செய்யுங்கள்!!🪔🪔 🌸மாநிலங்களில் முழு தன்னாட்சியும், ஒன்றியத்தில் கூட்டாட்சியும் வேண்டும்!! 🌸அதற்கு இந்திய அரசமைப்புச் சட்டத்தை மாற்றிஅமைக்க வேண்டும்!! 🌸தேர்தலில் EVM ஒழிக்கப்பட்டு, வாக்குச்சீட்டு முறையில், நேர்மையாக தேர்தல் நடத்தப்பட வேண்டும்!! 🌸ஈழத்தில் நல்ல தமிழர்களின் ஆட்சி அமைந்து மீண்டும் உலக வர்த்தக மையமாக செயல்பட வேண்டும்!! 🌸தமிழ் நாட்டில் மதுபானக் கடைகள் நிரந்தரமாக மூடப்பட வேண்டும்!! உயிர்களுக்குத் தீமை தரும் கட்டாய தப்பூசி முற்றிலும் ஒழித்தழிக்கப்ப்பட வேண்டும் 🌸எழுவர் விடுதலை பெற வேண்டும்!! 🌸மீண்டும் பொதிகை மலையில் நம் சித்தர் அகத்தியரின் சிலை நிறுவப்பட வேண்டும்!! 🌸குடும்பக்கட்டுப்பாடு என்ற சதித்திட்டத்திலிருந்து அப்பாவி தமிழ் மக்கள் காக்கப்பட வேண்டும்!! 🌸நமது குழந்தைகள் காக்கப்பட வேண்டும்!! 🌸கல்வியை அறிவியல் மொழியான தமிழில் உலக மக்கள் அனைவரும் கற்று ஒழுக்கநெறியில் சிறந்து வாழ வேண்டும்!! 🌸தமிழர் ஒற்றுமைக்குத் தடையான சாதீய ஏற்றதாழ்வுகள், தீண்டாமை முற்றிலும் நீக்கப்பட்டு, அனைவரும் சமம் என்ற ஒற்றுமை மனப்பாங்கு தழைத்தோங்க வேண்டும்!! 🌸ஒன்றுபட்டு தமிழர்களின் தமிழ் தேசியம் வீறுகொண்டு எழ வேண்டும்!! 🌸தமிழ் நாட்டின் கனிம வளங்கள் காக்கப்பட வேண்டும்!! மேற்கு தொடர்ச்சி மலை காப்பாற்றப்பட வேண்டும்!! 🌸தமிழ் நாட்டின் நிலவளம் நீர்வளம், காடு வளம், கடல் வளம் என அனைத்து இயற்கை வளங்களும் பெருக வேண்டும், காப்பாற்றப்பட வேண்டும்!! 🌸ஆசீவகம் தமிழரின் மெய்யறிவியல் ஒவ்வொரு தமிழர் வீட்டிலும் மலர வேண்டும்!! 🌸தமிழர் பண்பாட்டை மீட்டெடுக்க உதவியாக நமக்கு என ஒரு ஊடகம் வேண்டும்!! 🌸 பச்சை பசேல் என பூமி செழித்து வேளாண்மை செழிக்க வேண்டும். வேளாண் விளைநிலங்கள் பாதுகாக்கப்பட்டு உழவர்கள் நல்வாழ்வு வாழ வேண்டும்!! 🌸கடல் வளம் காக்கப்பட வேண்டும். கடலோடிகள் நலன் காக்கப்பட்டு அவர்கள் வாழ்வு மேன்மை பெற வேண்டும்!! 🌸நிர்வாகம் சீர் பட வேண்டும்!! 🌸கூட்டு குடும்பங்கள் உருவாக வேண்டும்!! 🌸வீட்டு விலங்குகள் பெருக வேண்டும், மக்களிடத்தில் தற்சார்பு பொருளாதாரம் ஊக்குவிக்கப்பட வேண்டும்!! 🌸அனைத்து மக்களும் அடுத்த மனிதரின் மனம் மகிழ வாழ வேண்டும்!! அனைவரும், தன் மனதிற்கு பிடித்தார்போல நல்லமுறையில் வாழ வேண்டும்!! 🌸நாட்டு பசு, நாட்டு காளை மாடுகள் காக்கப்பட வேண்டும், பெருக வேண்டும்!! 🌸ஓங்கி உயர்ந்த பனைமரங்களும், அதில் கூடுகட்டி வாழும் தூக்கணாங்குருவிகளும் பெருக வேண்டும்!! 🌸குறுங்காடுகள், நந்தவனங்கள் பெருக வேண்டும்!! 🌸அந்த வனங்களில் மான், மயில், பச்சை கிளிகள், சிட்டுக்குருவிகள் என அனைத்தும் விளையாட வேண்டும்!! 🌸இனிய குரலையுடைய குயிலின் கீதம் எங்கும் கேட்க வேண்டும்!! 🌸புதிய, இனிய, அழகிய,அன்பான உலகம் உருவாக வேண்டும்!! 🌸வாழ்க வையகம்!! வாழ்க வளத்துடன்!! #தழைத்தோங்குக_தமிழர்_ஒற்றுமை!! #வாழ்க_தமிழ்!! #வெல்க_தமிழ்!! #வெல்க_ஐந்தாம்_தமிழர்_சங்கம்!! #இது_சத்திய_யுகம்_வெற்றி_நமதே!! #🙏🏼ஓம் நமசிவாய #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🙏🏼சிவ பெருமான் பாடல்கள்
🙏🏼ஓம் நமசிவாய - A3 A3 - ShareChat
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 ༺சித்தம் சிவமயம்༻ 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 🌹பிறைசூடி துதிபாடி🌹 💫🌹நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க🌹💫 🍃🌹🍃🌹🍃🌹🍃🌹 🌹🌻பாடல்🌻🌹 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 🍁இலையார்நுனை சூலப்படை ஏந்தும்பெரு மானைச் 🍁சிலையாவொரு வரையேந்தியைத் திருவக்கரை யானை 🍁மலையான்மகள் வடிவாம்பிகை மணவாளனைக் கங்கை 🍁அலையார்சடை உடையான்றனை அடைவார்வினை அறுமே. 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 பொழிப்புரை : மூன்று இலை போன்ற நுனிகளை உடைய சூலாயுதத்தை ஏந்திய பெருமானை !! வில்லாக ஒரு மலையை ஏந்தியவனை !! திருவக்கரையில் உறைபவனை !! மலைமகளான வடிவாம்பிகை கணவனை !! கங்கையைச் சடையில் உடையவனைச் சரணடைந்த அடியவர்களது வினைகள் அழியும் !! 🍃🌹🍃🌹🍃🌹🍃🌹 ‌ 🌹🌹🌹🌹🌹🌹 🌹🌹🌹🌹 🌹🌹 🌹 ꧁༺சிவசிவ༻꧂ 🌹 🌹🌹 🌹🌹🌹🌹 🌹🌹🌹🌹🌹🌹 🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️ 💫🌹அம்மையே!! அப்பா!! ஒப்பிலா மணியே திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫 💫🌹பிறவா யாக்கைப் பெரியோன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫 💫🌹மாமுது முக்கண் முதல்வன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫 💫🌹ஒப்பாரும் மிக்காரும் இல்லா தத்துவனே திருவடிகள் வாழ்க🌹💫 💫🌹விண்ணில் இருப்பவனே மேவியங்கு நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫 💫🌹தன்னுளே இருப்பவனே தராதலம் படைத்தவன் திருவடிகள் வாழ்க🌹💫 💫🌹என்னுளே இருப்பவனே எங்குமாகி நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫 🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️ 🍀🍁🍀🍁🍀🍁🍀🍁 திருச்சிற்றம்பலம் 🍀🍁🍀🍁🍀🍁🍀🍁 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏கோவில் #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏼சிவ பெருமான் பாடல்கள்
🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 - ShareChat
00:27